ஹிஜாப் விவகாரம் – முஸ்லிம் மதகுருமார்கள் சர்வமத தலைவர்களுடன் ஆலோசனை!
புதுடெல்லி (11 பிப் 2022): ஹிஜாப் விவகாரத்தில் தீர்வு காண முஸ்லிம் மத குருமார்கள் பல்வேறு மத தலைவர்களுடன் ஆலோசனை நடத்த முடிவெடுத்துள்ளனர். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விவகாரம் நாடெங்கும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில் நாட்டில் பரவி வரும் வெறுப்புக்கு எதிராக தீர்வு காண இஸ்லாமிய மையத்தின் (ஐசிஐ) மதகுருமார்கள் பல்வேறு மத தலைவர்களுடன் சர்வமத மாநாட்டை நடத்தவுள்ளனர். இதுகுறித்து ஐசிஐ தலைவர் மௌலானா காலித் ரஷீத் ஃபராங்கி…
