இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 1,008 பேர் பலி!

புதுடெல்லி (03 பிப் 2022): இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 1008 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1,72,433 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் 1,61,386 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்த நிலையில், பாதிப்பு இன்று சற்று அதிகரித்திருக்கிறது. கடந்த சில தினங்களாகவே தினசரி கொரோனா தொற்றாளர்கள் இந்தியாவில் குறைந்துவரும் நிலையில், இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. நேற்றை விட இன்று 6.8% அதிகரித்திருக்கிறது. கொரோனாவிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை உயர்ந்தும்…

மேலும்...

கொரோனா தடுப்பூசி பக்க விளைவால் மரணம் – ரூ 1000 கோடி நஷ்ட ஈடு கோரி வழக்கு!

கோவிட் தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் தனது மகள் இறந்ததற்கு 1,000 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி மகாராஷ்டிரா உயர் நீதிமன்றத்தில் தந்தை ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். அவுரங்காபாத்தைச் சேர்ந்த திலீப் லுனாவத் என்பவர் மகாராஷ்டிரா அரசு மற்றும் சிரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிடம் இழப்பீடு கோரி மும்பாய் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். மனுதாரர் திலீப் லுனாவத், நாசிக்கில் பயின்று வந்த மருத்துவ மாணவியான தனது மகள் சினேகல் இரண்டு டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டதாகவும் ஜனவரி 28,…

மேலும்...

மீடியா ஒன் தொலைக்காட்சி மீதான தடைக்கு எதிராக மக்களவையில் எதிர் கட்சிகள் தீர்மானம்

மும்பை (02 பிப் 2022): கோவிட் தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் தனது மகள் இறந்ததற்கு 1,000 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி மகாராஷ்டிரா உயர் நீதிமன்றத்தில் தந்தை ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். அவுரங்காபாத்தைச் சேர்ந்த திலீப் லுனாவத் என்பவர் மகாராஷ்டிரா அரசு மற்றும் சிரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிடம் இழப்பீடு கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். மனுதாரர் திலீப் லுனாவத், நாசிக்கில் பயின்று வந்த மருத்துவ மாணவியான தனது மகள் சினேகல் இரண்டு தவணை தடுப்பூசியை…

மேலும்...

தடையை மீறி ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகள்!

உடுப்பி (01 பிப் 2022): கர்நாடகா மாநில அரசுக் கல்லூரியில் தடையை மீறி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்குச் செல்ல முடிவு செய்திருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மாநில கல்லூரியில் மாணவிகள் வகுப்பு ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பிப்ரவரி 1ம் தேதி (செவ்வாய்கிழமை) உலக ஹிஜாப் தினமாக கொண்டாடப்படுவதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாணவர்கள் தரப்பில்…

மேலும்...

பிரபல மலையாள செய்தி சேனல் மீடியா ஒன்னுக்கு மத்திய அரசு தடை!

திருவனந்தபுரம் (01 பிப் 2022): பிரபல மலையாள தொலைக்காட்சி சேனல் மீடியாஒன் டிவி ஒளிபரப்புக்கு, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. மீடியா ஒன் சேனலுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்ததை அடுத்து, சேனலின் உரிமத்தை புதுப்பிப்பதற்கான அனுமதியை அமைச்சகம் மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தடையை நீக்க சட்டப்பூர்வ செயல்பாடுகளை தொடங்கியுள்ளதாகவும், தற்போது ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீடியாஒன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக மீடியாஒன் டிவி செப்டம்பர் 30, 2021 முதல் செப்டம்பர்…

மேலும்...

மத்திய பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்

புதுடெல்லி (01 பிப் 2022): ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் -ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. -இளைஞர்கள், பெண்கள் ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும். -சுயசார்பு திட்டத்தின் கீழ் தொழில்துறையை ஊக்குவிக்கும் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. -சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. -4-00 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். -போக்குவரத்து வசதிகள், உள்கட்டமைப்பு…

மேலும்...

பாஜக தலைவர் பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா பாசிட்டிவ்!

புதுடெல்லி (31 ஜன 2022): பாஜக தலைவரும் எம்பியுமான பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக பிரக்யா சிங் ட்வீட் செய்துள்ளார். கொரோனா பரிசோதனை அறிக்கை இன்று வெளியானதாகவும் , அவர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக அவருடன் , நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், கோவிட் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு, பிரக்யா சிங் தாக்கூர், பசுவின்…

மேலும்...

கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை – ஸ்டாலின்!

சென்னை (30 ஜன 2022): கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியா முழுவதுமுள்ள காந்தி நினைவிடங்களில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் காந்திக்கு மரியாதை செய்துள்ளார். சென்னை மெரினாவிலுள்ள காந்தி சிலையில், காந்தி உருவப்படம் வைத்து அதற்கு முதல்வர் ஸ்டாலினுடன்…

மேலும்...

உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் துணை முதல்வர் – உவைசி!

லக்னோ (30 ஜன 2022): உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலையொட்டி பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சியை தாக்கி பேசிய AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, யார் பெரிய இந்து கட்சி என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது என்று கூறினார். ANI இடம் பேசிய ஒவைசி, “யோகி ஆதித்யநாத் மற்றும் அகிலேஷ் யாதவ் இடையே யார் பெரிய இந்து என்பதில் சண்டை நடக்கிறது. இருவரும் பெரிய இந்துவாக மாறுவதற்கு போட்டி போடுகிறார்கள். ஒருவர் ஒரு…

மேலும்...

மோடி அரசு செய்தது தேச துரோகம் – பெகாசஸ் விவகாரத்தில் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

புது டெல்லி (29 ஜன 2022): இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்தியாவில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, 8 வாரங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க்…

மேலும்...