முலாயம் சிங் யாதவின் மருமகள் பாஜகவில் இணைய வாய்ப்பு!

லக்னோ (16 ஜன 2022): சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் பாஜகவில் சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதிக் யாதவின் மனைவி அபர்ணா யாதவ் மற்றும் பாஜக இடையே கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2017 உத்தரப் பிரதேச…

மேலும்...

ஐந்து மாநிலங்களில் பாஜகவுக்கு வாக்களிக்கப்போவதில்லை – விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்!

புதுடெல்லி (16 ஜன 2022): உத்திர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று கூட்டு கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. டெல்லி எல்லையில் போராட்டம் முடிவுக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், கூட்டு கிசான் மோர்ச்சா மற்றொரு போராட்டத்திற்கு தயாராகி வருகிறது. மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும்…

மேலும்...

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 2.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (16 ஜன 2022): நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 2.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,71,202 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 71 லட்சத்து 22 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு நேற்று 314 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து…

மேலும்...

கங்கனா ரணாவத்தின் கன்னங்களை விட மிருதுவான சாலைகள் – காங்கிரஸ் எம்.எல்.ஏ உறுதி!

ஜார்கண்ட் (15 ஜன 2022):  தனது தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னங்களை விட மிருதுவான சாலைகள் அமைக்கப்படும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ இர்ஃபான் அன்சாரி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோச்சா, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் அம்மாநிலத்தின் ஜமதரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவான டாக்டர். இர்ஃபான் அன்சாரி தனது தொகுதியில் உள்ள சாலைகள் நடிகை கங்கனாவின் கன்னத்தைவிட மென்மையானவையாக அமைக்கப்படும் என உறுதி…

மேலும்...

4 வருடமாக படுக்கையில் கிடந்த நோயாளி கொரோனா தடுப்பூசி எடுத்த பிறகு எழுந்து நடக்கத் தொடங்கிய அதிசயம்!

பொகாரோ (15 ஜன 2022): ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளாக படுக்கையில் இருந்த ஒருவர், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்ற பிறகு மீண்டும் நடக்க ஆரம்பித்துள்ளார். பொகாரோவின் பெடார்வார் கிராமத்தில் வசிக்கும் துலர்சந்த், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளானார். விபத்தைத் தொடர்ந்து அவர் குரல் இழந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் கிடந்தார். இந்நிலையில் துலர்சந்த் ஜனவரி 4 அன்று, கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பூசியைப் பெற்ற ஒரு நாளுக்குப்…

மேலும்...

உ.பி பாஜகவுக்கு நெருக்கடி – சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர் பாஜகவில் இருந்து விலகிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்!

லக்னோ (14 ஜன 2022): உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் (எஸ்பி) இணைந்தனர். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் உறுப்பினர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் தரம் சிங் சைனி ஆகியோர் லக்னோவில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டனர். இவர்களுடன் ராஜினாமா செய்த பாஜக எம்எல்ஏக்கள் பகவதி சாகர், வினய் ஷக்யா, முகேஷ் வர்மா, ரோஷன்லால் வர்மா…

மேலும்...

இந்துவாக மாறிய ஷியா வக்பு வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி கைது!

ஹரித்வார் (14 ஜன 2022): இந்துவாக மாறி ஜிதேந்திர தியாகி என்று பெயர் மாற்றிக் கொண்ட வாசிம் ரிஸ்வி நேற்று ஹரித்வார் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டார். உ.பி., ஷியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வாசிம் ரிஸ்வி சமீபத்தில் இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார். மேலும் தனது பெயரை ஜிதேந்திர தியாகி என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு, உத்தரபிரதேசத்தில் உள்ள தஷ்னா கோவிலில் பூசாரியாக இருக்கும் நரசிம்மானந்த் தலைமையில் மதமாற்றம் நடந்தது. இதற்கிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில்…

மேலும்...

74 வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட சகோதரர்கள் – இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் நெகிழ்ச்சி!

பஞ்சாப் (13 ஜன 2022): 74 வருட காத்திருப்புக்குப் பின் இறுதியாக கண்ணீருடன் இரு சகோதரர்கள் சந்தித்துக் கொள்ளும் கட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் பைசலாபாத் பகுதியைச் சேர்ந்த முகமது சித்திக் மற்றும் அவரது குடும்பத்தினர், இந்தியாவின் பஞ்சாபில் வசிக்கும் முகமது ஹபீப் ஆகியோர் 74 வருட காத்திருப்புக்குப் பிறகு ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர். முஹம்மது சித்திக் 1947 பிரிவினையின் போது சிறு குழந்தையாக இருந்தார். சித்திக் தனது குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு வந்தபோது, ​​அவரது…

மேலும்...

பாஜக அமைச்சரவையில் மூன்றாவது விக்கெட் – கலகலத்துப் போன உ.பி அரசு!

லக்னோ (13 ஜன 2022): உத்தரப் பிரதேச அமைச்சர் தரம் சிங் சைனி வியாழக்கிழமை பாஜகவில் இருந்து விளக்கியுள்ளார். மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பாஜகவின் உறவை முறித்துக் கொண்ட ஒன்பதாவது எம்எல்ஏ ஆனார் தரம் சிங் சைனி. முந்தைய நாள், தரம் சிங் சைனி தனக்கு மாநில அரசு ஒதுக்கிய பாதுகாப்பு அதிகாரிகளையும், வீட்டையும் திருப்பிக் கொடுத்தார், இது அவர் பாஜகவில் இருந்து விலகப் போகிறார் என்ற ஊகத்தைத் தூண்டியது. தரம்…

மேலும்...

உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை வேட்பாளராக நிறுத்தும் காங்கிரஸ்!

உன்னாவ் (13 ஜன 2022): உ.பி., சட்டசபை தேர்தலில், உன்னாவ் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை, காங்கிரஸ் வேட்பாளராக நியமித்துள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உன்னாவ் மகளுக்கு பாஜக அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். “இப்போது, [வன்புணர்வு செய்யப்பட்டவரின் தாயார்] நீதியின் முகமாக இருப்பார்,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் 2017 ஆம் ஆண்டு உன்னாவ் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்…

மேலும்...