யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடும் சந்திர சேகர் ஆசாத்!

லக்னோ (20 ஜன 2022): பீம் ஆர்மி தலைவரும், ஆசாத் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவருமான சந்திரசேகர் ஆசாத், உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூர் நகர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். உ.பி. சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி கட்சியுடன் கைகோர்ப்பதற்கு பதிலாக, தங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என சந்திரசேகர் ஆசாத் செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தார். 33 இடங்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிட்டார். உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10ஆம்…

மேலும்...
Supreme court of India

மின்னணு வாக்கு எந்திரங்களை பயன்படுத்துவதை ரத்து செய்யும் மனு – உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடிவு!

புதுடெல்லி (20 ஜன 2022): தேர்தலில் வாக்குச் சீட்டுக்குப் பதிலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (இவிஎம்) பயன்படுத்தும் முடிவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளின் அரசியலமைப்பு செல்லுபடியை கேள்விக்குள்ளாக்கிய மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு இந்த மனுவை பரிசீலிக்கும். உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும்…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (19 ஜன 2022): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,82,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகள் ஓய்ந்த நிலையில், தற்போது டெல்டா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் மூன்றாம் அலையாக பரவி வருகிறது. இதனால் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு, முழு பொதுமுடக்கம் ஆகிய…

மேலும்...
Mamta-Banerjee

உத்திர பிரதேச தேர்தலில் சமாஜ்வாதியுடன் கரம் கோர்க்கும் மம்தா!

லக்னோ (19 ஜன 2022): மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் சமஜ்வாதிக்கு ஆதரவாக ஈடுபடவுள்ளார். அகிலேஷ் யாவுடன் கரம் கோர்க்கும் மம்தா பானர்ஜி, லக்னோவில் அகிலேஷ் யாதவின் தேர்தல் பேரணியில் கலந்து கொள்கிறார். தனது கட்சி பிரச்சாரத்திற்கு மம்தாவை எஸ்பி துணைத் தலைவர் கிரண்மோய் நந்தா நேரில் அழைத்திருந்தார். பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் பேரணியின்போது மம்தா பானர்ஜி ஆன்லைனில் பேசுவார். அதேபோல, வாரணாசியில் நடைபெறும் பேரணியில் அகிலேஷுடன் மம்தாவும்…

மேலும்...

19 வயது முஸ்லீம் வாலிபர் படுகொலை -4 ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் கைது!

கடக் (19 ஜன 2022): கர்நாடகாவில் 19 வயது வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தின் நர்குண்டு நகரில் சமீர் மற்றும் ஷம்சீர் ஆகியோர் திங்கள்கிழமை இரவு 7:30 மணியளவில் இருச்சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது 10க்கும் மேற்பட்ட கும்பல் அவர்களது வாகனத்தை மறித்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கியது. அவர்களிடமிருந்து இருவரும் தப்பிச் செல்ல முயன்ற போது விடாமல் துரத்திச் சென்று தாக்கியுள்ளனர்….

மேலும்...

அசாதுதீன் ஒவைசியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் – சர்ச்சையை ஏற்படுத்திய போலி புகைப்படம்!

ஐதராபாத் (18 ஜன 2022): அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசியின் படத்தை , ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் மார்பிங் செய்து பரப்பியதாக இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படம் வைரலானதை அடுத்து, AIMIM தலைவர் ஷேக் முயீனுதீன் அப்ரார், ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்க்கும் கட்சி தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புகாரை அடுத்து,…

மேலும்...

பேரணி பொது கூட்டங்களுக்கு தடை – பாஜக புதிய யுக்தியில் தேர்தல் பிரச்சார வியூகம்!

புதுடெல்லி (18 ஜன 2022): ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில் பேரணி மற்றும் பொது கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், புதிய பிரசார வியூகங்களை பா.ஜ.க. வரும் சட்டசபை தேர்தலில் எடுத்து வாட்டுகிறது. அதன்படி பூத் அளவில் பணிகளை வலுப்படுத்த பாஜக முடிவு செய்துள்ளது. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அடிமட்ட மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், வாக்காளர்களுடன் இணைப்பில் இருக்கவும் உயர்மட்ட தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அடிமட்ட அளவில் செயல்பாடுகளை செயல்படுத்த…

மேலும்...

பாஜகவிலிருந்து நீககப்பட்ட தலைவரை இணைப்பதால் காங்கிரஸில் பிளவு!

உத்தரகாண்ட் (18 ஜன 2022): உத்தரகாண்ட் மூத்த தலைவர் ஹரக் சிங் ராவத், பா.ஜ.வால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவர் காங்கிரஸில் மீண்டும் இணையவுள்ளார். இதனால் உத்தரகாண்ட் மாநில காங்கிரசில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரசிலிருந்து விலகி பின்பு பாஜகவில் இணைந்த, முன்னாள் அமைச்சர் ஹரக் சிங் ராவத்தை மீண்டும் கட்சியில் சேர்க்க காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவர் ஹரிஷ் ராவத் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸின் மத்திய, மாநிலத் தலைமையின் ஒரு பிரிவினர்…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தவில்லை – ஒன்றிய அரசு பதில்!

புதுடெல்லி (17 ஜன 2022): யாரையும் கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்துவதில்லை என்று ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, ‘ மாற்றுத்திறனாளிகளுக்காக வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தடுப்பூசி சான்றிதழ்களை பொது இடத்தில் காண்பிக்கும் கட்டாயத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தது. இந்த வழக்கில், ஒன்றிய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு…

மேலும்...

ஐஐடி மாணவர் கல்லூரி மடியிலிருந்து குதித்து தற்கொலை

மும்பை (17 ஜன 2022): மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) மாணவர் கல்லூரி வளாகக் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்தவர் 26 வயதுடைய இரண்டாம் வருட முதுகலைப் பயிலும் மாணவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் திங்கள் கிழமை அதிகாலை 4.30 மணியளவில் வளாக கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. அவரது தங்கும் விடுதியில் இருந்து தற்கொலைக் கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்தக் குறிப்பில்,…

மேலும்...