சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் 2022 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரபு தலைவராக தேர்வு!

ரியாத் (10 ஜன 2023): சவூதி அரேபிய பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் 2022 ஆம் ஆண்டில் மிகவும் செல்வாக்கு மிக்க அரபுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவை தளமாகக் கொண்ட உலகளாவிய பன்மொழி தொலைக்காட்சி செய்தி சேனல் ஆர்டி அரபு நடத்திய கருத்துக் கணிப்பில் முகமது பின் சல்மான் ‘மிகவும் செல்வாக்கு மிக்க அரபு தலைவர் 2022’ என்ற பட்டத்தை வென்றார். வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களின் மொத்த வாக்குகளில் 7.4 மில்லியன் (62.3 சதவீதம்)…

மேலும்...

இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்து!

ஜித்தா (10 ஜன 2023): இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஒன்றே முக்கால் லட்சம் யாத்ரீகர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தத்தில் இந்திய தூதரகம் முஹம்மது ஷாஹித் ஆலம் மற்றும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான சவுதி அமைச்சர் டாக்டர் அப்துல்பத்தாஹ் சுலைன் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஜித்தா சுப்பர்டோமில் நடைபெற்ற ஹஜ் எக்ஸ்போவில் இந்த பேச்சுவார்த்தை கையெழுத்தானது. இந்த…

மேலும்...

மத்திய கிழக்கில் மிகப்பெரிய பிளாஸ்டிக் ஆலையை நிறுவுகிறது கத்தார்!

தோஹா (09 ஜன 2023): மத்திய கிழக்கின் மிகப்பெரிய பிளாஸ்டிக் ஆலை கத்தாரில் அமைக்கப்படவுள்ளது. கத்தார் எனர்ஜி மற்றும் செவ்ரான் பிலிப்ஸ் கெமிக்கல் இணைந்து இந்த ஆலையை அமைக்கிறது. 6 பில்லியன் டாலர் செலவில் பிளாஸ்டிக் ஆலை அமைக்கப்படும். இந்த ஆலை இயற்கை எரிவாயுவை பாலிதீன் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்களாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இந்த ஆலை 2026ல் செயல்படத் தொடங்கும். கத்தார் எரிசக்தி நிறுவனமும், டெக்சாஸைச் சேர்ந்த செவ்ரான் நிறுவனமும் இது தொடர்பான புரிந்துணர்வு…

மேலும்...

மதீனாவில் மின்சார வாகன போக்குவரத்து சேவை தொடங்கியது!

மதீனா (09 ஜன 2023): மதீனாவில் 100 மின்சார வாகனங்களுடன் போக்குவரத்து சேவை தொடங்கியது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் சுமார் 500 மின்சார வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என மதீனா முனிசிபல் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. குடியிருப்பாளர்கள் மற்றும் யாத்ரீகர்களின் போக்குவரத்து சேவைகளை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமைந்துள்ளது. முதல் கட்டமாக மஸ்ஜித் நபவி, குபா மஸ்ஜித் மற்றும் சையிது ஷுஹாதா சதுக்கம் இடையே மின்சார வாகன சேவைகள் நடைபெறும். மஸ்ஜிதுந்நபவி பள்ளிவாசலுக்குச் செல்வதற்கும் வருவதற்கு…

மேலும்...

குவைத்தில் பால் விலை உயர்கிறதா? – அமைச்சகம் விளக்கம்!

குவைத் (09 ஜன 2023): குவைத்தில் பால் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என கைத்தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், சந்தையில் விலையை சரிபார்க்க தொழில்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் பால் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என்றும், பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான விண்ணப்பத்தை அல் மராய் நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை என குவைத் கைத்தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அல் மராய் நிறுவனம் விண்ணப்பம் செய்தால் அமைச்சகம் அதனை…

மேலும்...

சவூதியில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரியாத் (08 ஜன 2023): சவுதி அரேபியாவில் குளிர் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த வாரம் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சவூதி வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுசைன் அல்கஹ்தானி கூறுகையில், சவுதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த வாரம் மழை தொடரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நாம் இப்போது குளிர்காலத்தின் முதல் காலாண்டில் இருக்கிறோம், அப்போது மழையும் தொடரும், மேலும் வெப்பநிலை குறையும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே…

மேலும்...

ஹஜ், உம்ரா மாநாடு மற்றும் கண்காட்சி – ஜனவரி 9 ஆம் தேதி தொடக்கம்!

ஜித்தா (08 ஜன 2023): சவூதி அரேபியாவில் ஹஜ் மற்றும் உம்ரா சேவைகளின் மாநாடு மற்றும் கண்காட்சியை திங்கள் கிழமை தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபியாவிற்கு ஹஜ் மற்றும் உம்ரா யாத்த்ரீகர்கள் பல லட்சம் பேர் இரண்டு புனித மசூதிகள் மற்றும் இஸ்லாத்தின் புனித தளங்களைப் பார்வையிட வருகை புரிகிறார்கள். இதனடிப்படையில் இரண்டு மசூதிகளில் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதில் சவூதி அரேபியா கவனம் செலுத்தி வருகிறது. இதனடிப்படையில் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா…

மேலும்...

சவூதி அரேபியாவில் ஓடும் பயணிகள் பேருந்து தீ விபத்து!

ரியாத் (07 ஜன 2023): சவுதி அரேபியாவில் ரியாத் அருகே ஓடும் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. தீ பிடித்த பேருந்து தனியாருக்கு சொந்தமானது. ரியாத்தில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ள அஃபிஃப்-தாரா ஈயா சாலையில் வியாழக்கிழமை இரவு 40 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது பஸ்சின் பின்பக்க டயர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. எனினும் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது….

மேலும்...

சர்வதேச குர்ஆன் மற்றும் பாங்கு (தொழுகைக்கு அழைப்பு) போட்டி – சவூதி அரேபியா அறிவிப்பு!

ரியாத் (05 ஜன 2023): சவூதி அரேபியா அறிவித்துள்ள சர்வதேச குர்ஆன் மற்றும் அதான் (முஸ்லிம்களின் தொழுகைக்கான அழைப்பு) போட்டியின் இரண்டாம் பதிப்பு ஆன்லைன் விண்ணப்பம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மிகப்பெரிய பரிசுகள் வழங்கப்படவுள்ளன. 12 மில்லியன் சவூதி ரியால் வரை பரிசாக வழங்கப்படவுள்ளன. ‘இணையாதளம் மூலம் போட்டி நடத்தப்படும்’ என்று சவூதி பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் (GEA) வாரியத்தின் தலைவரான அவரது மேன்மையான ஆலோசகர் துர்கி அலல்ஷிக் தெரிவித்துள்ளார். இந்த போட்டிகளுக்கு…

மேலும்...

ஹஜ் 2023 விண்ணப்பம் தொடக்கம் – பெண்கள் மஹ்ரம் இல்லாமல் ஹஜ் செய்யலாம்!

ஜித்தா (05 ஜன 2023): ஹஜ் விண்ணப்பம் இணையதளம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. மஹ்ரம் இல்லாமல் பெண்கள் ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஹஜ் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. மஹ்ரம் இல்லாமல் ஹஜ் செய்ய விண்ணப்பிக்கும் பெண்கள், மற்ற பெண்கள் குழுவாக அனுமதி வழங்கப்படும். அதே நேரத்தில், ஹஜ் உம்ரா அமைச்சகம், மஹ்ரம் உடன் வரும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தற்போது முதல் ஹஜ் பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஹஜ்…

மேலும்...