கொரோனா வார்டு தனிப்படுத்தல் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 92 பேர் பலி!

பாக்தாத் (14 ஜூலை 2021):ஈராக் கொரோனா கொரோனா வார்டு தனிப்படுத்தல் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 92 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈராக் நசிரியா நகரில் அல் ஹுசைன் போதனா மருத்துவமனையின் கொரோனா வைரஸ் தனிமப் படுத்தல் வார்டில் இந்த தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. முன்னதாக, மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியிருந்தனர், ஆனால் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை. மற்றொரு அதிகாரி ஆக்ஸிஜன் சிலிண்டர்…

மேலும்...

குவைத்தில் சட்ட விரோதமாக 60 வயதுக்கு மேல் இக்காமா புதுப்பித்தது குறித்து விசாரணை!

குவைத் (14 ஜூலை 2021): குவைத்தில் 60 வயதுக்கு மேல் உள்ள வெளிநாட்டவர்களின் உரிமத்தை (இக்காமா) புதுப்பித்த அதிகாரிகளுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் விசாரணையை தொடங்கியுள்ளது. குவைத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 157 வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கள் இகாமாவை புதுப்பித்திருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 35 ஊழியர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குவைத்தில் இளங்கலை பட்டம் பெற்ற 60 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு பணி அனுமதி புதுப்பிக்கப்படலாம். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அரிய சிறப்பு கல்வித் தகுதி…

மேலும்...

துபாயில் பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு!

துபாய் (14 ஜூலை 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் கோவிட் வழக்குகள் மற்றும் இறப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. கடந்த பண்டிகை விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்களின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த எச்சரிக்கை. ஐக்கிய அரபு அமீரக சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர்ஃபரீதா அல்-ஹுஸ்னி எச்சரித்துள்ளார். கடந்த பத்து நாட்களாக தினசரி கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 1600 க்கு…

மேலும்...

சீன தடுப்பூசி பெற்றவர்களுக்கு சவுதியில் தனிமைபப்டுத்தல் அவசியம் இல்லை!

ரியாத் (13 ஜூலை 2021): சவுதிக்கு வரும் பயணிகள் சீன தடுப்பூசிகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு சவூதி அரேபியாவில் தனிமைப்படுத்தப்படல் அவசியம் இல்லை என சவூதி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே சவூதி அரேபியாவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றவர்களுக்கும், சீன தடுப்பூசிகளான, சினோஃபார்ம் மற்றும் சினோவாக் இரண்டு டோஸ் பெற்றவர்களுக்கும் சவுதியில் தனிமைப் படுத்தலில் விலக்கு அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியாவில் இருந்து கோவாசின் பெறுற்ற பயணிகள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா இடையே விமான போக்குவரத்து எப்போது தொடங்கப்படும்?

துபாய் (13 ஜூலை 2021): இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான பயணிகள் விமானத் தடை, எதிர்வரும் ஜூலை 21 வரை தொடரும் என்பது உறுதி படுத்தப் பட்டுள்ளது. ஜூலை 21 க்குப் பிறகு ஜூலை 22 முதல் நிபந்தனைகளுடன் விமான சேவையை மீண்டும் தொடங்கப் படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் இதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் அதிகாரிகள் தரப்பில் இருந்து இதுவரை கிடைக்க வில்லை இந்தியாவுடன் சேர்த்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும்…

மேலும்...

இந்தியாவுக்கு விமான போக்குவரத்து எப்போது? – வளைகுடா வாழ் இந்தியர்கள் கவலை!

ரியாத் (11 ஜூலை 2021): இந்தியாவில் கோவிட் பாதிப்பு ஒருபுறம் என்றால் கேரளாவில் ஜிகா வைரஸும் பரவி வருவதால் சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கலில் சிக்கல் ஏற்படுமோ என்று இந்தியர்கள் கவலை அடைந்துள்ளனர். கொரொனா பாதிப்பு உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் இரண்டாவது அலை பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. தற்போது இந்தியாவில் கொரானா குறைந்து வருவதால் திருப்தி அடைந்து வரும் வளைகுடா வாழ் இந்தியர்கள் கடந்த ஒன்றரை வருடமாக தடையில்…

மேலும்...

பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த சவூதி அரசு நடவடிக்கை!

ரியாத் (11 ஜூலை 2021): ‘சவூதி அரேபியாவில் பெட்ரோல் விலை உய ராது; ஜூன் மாத விலையே தொடரும்’ என்று அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ளார். சவுதி உள்நாட்டு சந்தைகளில் அதிகரித்து வரும் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த மன்னர் சல்மானின் சிறப்பு உத்தரவின்படி, வரும் மாதங்களில் கடந்த ஜூன் மாத விலையிலேயே பெட்ரோல் மக்களுக்கும் வெளிநாட்டினருக்கும் கிடைக்கும். இதனால் ஏற்படும் நிதி இழப்பை சவூதி அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சவூதி மன்னரின்…

மேலும்...

சவூதி அரேபியாவில் மாடர்னா தடுப்பூசிக்கு ஒப்புதல்!

ரியாத் (10 ஜூலை 2021): சவூதி அரேபியாவில் மாடர்னா தடுப்பூசிக்கு உணவு மற்றும் மருந்து ஆணையம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் (SPA) தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஃபைசர்-பயோன்டெக், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி, மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாடர்னா தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 10, 2021 வரை சவுதியில் மொத்தம் 19,262,679 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில், சவூதி அரேபியா ஒவ்வொரு நாளும் சராசரியாக 166,826 கொரோனா…

மேலும்...

சவூதியில் இந்தியரை கொலை செய்த சவூதி நாட்டவருக்கு மரண தண்டனை!

ஜித்தா (10 ஜுலை 2021): சவுதியில் இந்தியரை கொலை செய்த, சவூதி நாட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அமீர் அலி. இவர் சவூதி அரேபியா ஜித்தாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கணக்கராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஒரு வருடம் முன்பு அவரது சக தொழிலாளரான சவூதி நாட்டை சேர்ந்த ஃபுஆத் நூஹ் அப்துல்லாஹ் என்பவரால் படுகொலை செய்யப்படார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களின் சாட்சிகளின் அடிப்படையில் கீழ் நீதிமன்றம் முதல்…

மேலும்...

கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் கத்தார் நாட்டிற்கு அங்கீகாரம்!

தோஹா (10 ஜூலை 2021): கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் வளைகுடா நாடுகளில் கத்தார் நாடு இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஜெர்மன் பத்திரிகையான ‘டெர் ஸ்பீகல்’ வெளியிட்டுள்ள பட்டியலில் பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. லக்சம்பர்க், நோர்வே மற்றும் டென்மார்க் இரண்டாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. ஆசிய நாடுகளான தைவான் ஐந்தாவது இடத்திலும், சிங்கப்பூர் ஆறாவது இடத்திலும், ஜப்பான் ஏழாவது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் கத்தார் உலகளவில் 15 வது இடத்தில் உள்ளது….

மேலும்...