வெளிநாட்டுப் பணியாளர்களின் விசா விதிமுறைகளைக் கடுமையாக்கும் குவைத் அரசு!

குவைத் (29 நவ 2020): “அறுபது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வெளிநாட்டுப் பணியாளர்களின் விசாக்களை புதுப்பிக்க வேண்டாம்” என குவைத் அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை அமல்படுத்துவதன் மூலம், 70,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அடுத்த ஆண்டுக்குள் குவைத்திலிருந்து, தத்தம் சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டியிருக்கும். குவைத் நாட்டின் வேலைவாய்ப்பு துறையில் உள்ளூர் மயமாக்கலை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை குவைத் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. இப்…

மேலும்...

10 வினாடிகளில் தகர்க்கப்பட்ட 144 மாடி அபுதாபி மினா பிளாசா கட்டிடம் – வீடியோ!

அபுதாபி (27 நவ 2020): சுற்றுலாத்துறை வளர்ச்சியின் ஒரு பகுதியாக அபுதாபி 144 மாடி மினா பிளாசா வெள்ளிக்கிழமை காலை தகர்க்கப்பட்டது. கட்டுப்படுத்தப்பட்ட இடிப்பு முறையைப் பயன்படுத்தி மிக உயரமான 144 மாடி கட்டிடமான மினா பிளாசா வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் 6,000 கிலோகிராம் வெடிபொருட்களால் தகர்க்கப்பட்டது. நாட்டின் சுற்றுலா வளர்ச்சியின் ஒரு பகுதியாக இந்த கட்டிடத்தை அதிகாரிகள் இடித்தனர். تمت بحمد الله عملية هدم أبراج ميناء بلازا ضمن مشروع تطوير…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு துபாயில் கைதிகள் விடுதலை!

துபாய் (27 நவ 2020): ஐக்கிய அரபு எமிரேட் டிசம்பர் 2 தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 472 கைதிகளை விடுவிப்பதாக துபாயின் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்துள்ளார். விடுவிக்கப்பட்டவர்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களும் இருப்பார்கள். ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளரான ஷேக் சவுத் பின் சயீத் அல் காசிமி, சிறைகளில் இருந்து 219 கைதிகளை விடுவிப்பதாக அறிவித்துள்ளார். வழக்கமான வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்கு முழு ஆதரவையும் தருவதாக…

மேலும்...

இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய சமூக நலப்பணிக்கான இணையதள பயிற்சி முகாம்!

ஜித்தா (10 நவ 2020): இந்தியன் சோஷியல் ஃபோரம் ஜித்தா மேற்கு மாகாணம் தமிழ் பிரிவு நடத்திய சமூக நலப்பணிக்கான இணையதள பயிற்ச்சி வகுப்பினை இந்தியதூதரகத்தின் தொழிலாளர் நலனுக்கான இந்திய துணை தூதர் திரு. சச்சிந்த்ர நாத் தாகூர் அவர்கள் தொடங்கி வைத்து வாழத்துரை வழங்கினார். அவர் தனது உரையில் இந்தியன் சோஷியல் ஃபோரம் முன்னெடுக்கும் பல்வேறு சமூக நலப்பணிகளை பாராட்டி தூதரகத்தோடு ஒருங்கிணைத்து செயல்பட்ட நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார். மேலும் அதிகரித்துவரும் சமூக நலப்பிரச்சினைகளுக்கு இதுபோன்ற பயிற்சிகளும்…

மேலும்...

தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் துபாய்!

துபாய் (01 நவ 2020): இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்திற்கு துபாய் நகரம் தயாராகி வருகிறது. இந்துக்களின் பண்டிகையான தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை துபாய் நகரெங்கும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளியை ஒட்டி துபாயில் உள்ள வணிக வளாகங்கள், சில்லறை விற்பனை நிறுவனங்கள், நகரின் குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன.

மேலும்...

துருக்கியை நிலைகுலையச்செய்த நிலநடுக்கம்!

இஸ்தான்பூல் (31 அக் 220): துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 என பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இங்கு 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர்…

மேலும்...

கின்னஸ் சாதனை படைத்த துபாய் மரக்கப்பல்!

துபாய் (30 அக் 2020):துபாயில் உள்ள ஒரு மரக் கப்பல் உலகின் மிக நீளமான மர கப்பலுக்கான கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பாரம்பரிய கப்பல் கட்டட தயாரிப்பு நிறுவனமான ஒபைட் பின் ஜுமா பின் ஜூலம் நிறுவனம் படைத்துள்ளது. உபைட் என்று பெயரிடப்பட்ட இந்த கப்பல் 300 அடி நீளமும் 66 அடி அகலமும் கொண்டது. துபாய் டிபி வேர்ல்ட் அருகே நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை…

மேலும்...

குவைத்தில் தனிமைப்படுத்தல் கால அளவில் மாற்றமில்லை – சுகாதார அமைச்சகம் திட்டவட்டம்!

குவைத் (30 அக் 2020): குவைத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளின் வீட்டு தனிமைப் படுத்தல் கால அவகாசம் 14 நாட்கள் என்பது தொடர்ந்து கடை பிடிக்கப்படும் என்று குவைத் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் மஸ்ராம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் கோவிட் தடுப்பூசி விநியோகிப்பதற்கான பிரச்சாரத்தை சுகாதார அமைச்சர் டாக்டர். பாசலில் தெரிவிக்கையில் கோவிட் தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் அதனை வழங்குவதில் முதியவர்கள்,…

மேலும்...

கத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன?

தோஹா (28 அக் 2020): பெண்களிடம் பரிசோதனை செய்தமைக்காக கத்தார் ஏர்வேஸ் விமானம் மன்னிப்பு கோரோப்பியது. கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு கடந்த 2 ஆம் தேதி கத்தார் ஏர்வேஸ் விமானம் புறப்பட இருந்தது. விமான நிலையத்தில் குளியலறையில், அடையாளம் தெரியாத குறைமாதத்தில் பிறந்த குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன் தாயை உடனடியாகக் கண்டுபிடிப்பதற்காக, விமான நிலையத்தில் வெளிநாடு செல்லத் தயாராக இருந்த பெண் பயணிகளுக்கு கட்டாய மருத்துவப் பரிசோதனை செய்து, யாருக்கேனும்…

மேலும்...

நவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்!

ரியாத் (24 அக் 2020): சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் வரும் நவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு விமான சேவையை தொடங்குகிறது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மார்ச் முதல் விதிக்கப்பட்ட தற்காலிக பயணத் தடையில் இருந்து சில வகை விலக்கு அளிக்கப்பட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி மீண்டும் சர்வதேச விமான சேவை தொடங்கியது. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது….

மேலும்...