முதல்வர் எடப்பாடியின் தனிச்செயலர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் மரணம் – அதிர்ர்சியில் முதல்வர்!

சென்னை (17 ஜூன் 2020): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தனிச்செயலர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலகத்திலுள்ள முதல்வர் அலுவலகத்தில் தனிச் செயலாளராக பணியாற்றி வந்தவர் தாமோதரன். அந்த வகையில் அலுவலக ரீதியாக முதல்வர் தலைமைச் செயலகம் செல்லும்போது அடிக்கடி நேரடியாக சந்திப்பவர்களில் இவரும் ஒருவர். முதல்வரை சந்திக்க வருபவர்களை அழைத்து வருவது உள்ளிட்ட பணிகளை தாமோதரன் கவனித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாமோதரனுக்கு…

மேலும்...

ஹெல்ப்குரூப் திருவை சார்பில் மலைவாழ் கிராமங்களுக்கு அத்திவாசிய உதவி!

திருவை (16 ஜூன் 2020): ஹெல்ப்குரூப்திருவை சார்பில் பரளியாறு, வாழயத்து வயல், கீரிப்பாறை, பால்குளம் போன்ற பகுதிகளில் வாழும் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்களின் 355 குடும்பங்களுக்கு  ரூபாய் 2,48,500(இரண்டு லட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து ஐந்நூறு) மதிப்பிலான மளிகை பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது மேலும் மலைவாழ் கிராமங்கள் புறத்தி மலை , வெள்ளருக்கு மலை, வட்டப்பாறை, போன்ற கிராமங்களுக்கு 90 குடும்பங்களுக்கு ரூபாய் 63,000/-செலவில் மளிகை பொருட்கள் அடங்கிய kit வழங்கப்பட்டது.மேலும் அனைத்து குடும்பங்களுக்கும் முகக்கவசம்…

மேலும்...

சீனாவின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரருக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!

சென்னை (16 ஜூன் 2020): லடாக்கில் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே நடந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் பழனி குடும்பத்துக்கு முதல்வர் ரூ 20 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். லடாக்கில் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே நடந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் இரண்டு வீரர்கள் உள்பட 3 பேர் வீரமரணம் அடைந்தனர். இதில் தமிகத்தைச் சேர்ந்த பழனி(வயது 40) வீரமரணம் அடைந்தார். இவர் ராமநாதபுரம் திருவாடானை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்….

மேலும்...

தப்லீக் ஜமாத்தினர் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

மதுரை (16 ஜூன் 2020): வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் அவரவர் நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா விசா மீறல், உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதான 31 தப்லீக் ஜமாத்தினருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம். அவர்கள் அனுபவித்த தண்டனை காலமே அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதுமானது என கூறி அவர்களை அவரவர்கள் நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வங்கதேசம், இந்தோனேசியா…

மேலும்...

நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை – ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை (16 ஜூன் 2020): கொரோனா பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணாவிட்டால் திமுக நீதிமன்றத்தை நாடும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் அடங்காமல் மேலும் பரவி வருகிறது. தமிழகத்தில் மே 31ம் தேதிவரை அதாவது 71 நாட்களில் 176 பேர் இறந்திருக்கிறார்கள். அடுத்த 15 நாட்களுக்குள் மட்டும் 259 பேர் இறந்திருக்கிறார்கள். இதனைப் பார்த்து மாநில அரசாங்கத்துக்கு…

மேலும்...

போற போக்கை பார்த்தால் யாரும் வாகனமே வாங்க மாட்டங்க போல!

சென்னை (16 ஜூன் 2020): பெட்ரொல், டீசல் விலை உயர்வால் பலருக்கு வாகனம் வாங்கும் ஆசையே போய்விடது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயிக்கின்றன. ஆனால், கடந்த மார்ச் 16ம் தேதிக்கு பிறகு விலையை மாற்றி அமைக்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 20 டாலருக்கும் கீழ்…

மேலும்...

இறந்த இந்து கொரோனா நோயாளிகளை இந்து முறைப்படி அடக்கம் செய்யும் முஸ்லிம் தன்னார்வலர்கள்!

புதுச்சேரி (15 ஜூன் 2020): இறந்த இந்து கொரோனா நோயாளியை இந்து முறைப்படி அடக்கம் செய்து தங்களையும் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். முஸ்லிம் தன்னார்வலர்கள். புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களை சரிவர அடக்கம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்காக சில ஆதாரங்களையும் காண முடிந்தது. இந்நிலையில் கொரோனா நோயாளிகள் யாரானாலும் அவர்களை அவரவர்களின் மத வழக்கப்படி இறுதி சடங்கு செய்ய முன் வந்தனர் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர். இதற்காக அவர்களுக்கு அனுமதி கடிதத்தையும்…

மேலும்...

அடுத்த அதிர்ச்சி – தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 44 பேர் மரணம்!

சென்னை (15 ஜூன் 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் திங்கள்கிழமை மட்டும் 44 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அதி வேகத்தில் பரவி வருகிறது. இன்று புதிதாக 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில், 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,504 – ஆகவும், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,244 – ஆகவும் உயர்ந்துள்ளது….

மேலும்...

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு வரும் 19 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு!

சென்னை (15 ஜூன் 2020): சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலாகிறது. ஜூன் 19 முதல் 30 வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

அரசு அதிகாரிகளின் மெத்தனம் – வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த பயணி பரிதாப மரணம்!

சென்னை (15 ஜூன் 2020):அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பிய முஹம்மது சரீப் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிகப் பெரும் மன உளைச்சல்களுக்குப் பிறகு கடந்த வெள்ளியன்று சென்னை வழியாக மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பிய திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரைச் சேர்ந்த முஹம்மது சரீப் என்ற 61 வயது சகோதரர் மாம்பாக்கத்தில் விஜடி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தனிமைப்படுத்துதல் முகாமில்…

மேலும்...