இலங்கை அரசுக்கு எஸ்டிபிஐ தலைவர் தெஹ்லான் பாக்கவி கடிதம்!

சென்னை (14 மே 2020): கொரோனாவால் உயிரிழந்த இலங்கை வாழ் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எஸ்.டி.பி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி இலங்கை அரசுக்கு இமெயில் மூலம் கடிதம் எழுதியுள்ளார். சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு இமெயில் மூலம் விடுத்துள்ள மனுவில் கூறியதாவது: கொரோனா வைரஸ் காரணமாக பரவிவரும் கோவிட்-19 பரவல் ஒட்டுமொத்த உலகையே பெரும் ஆட்டம் காண வைத்துள்ளது. சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில்…

மேலும்...

கொரோனாவுக்கு இவங்கதான் காரணமா? -ஸ்டாலின் விளாசல்!

சென்னை (14 மே 2020): கொரோனா பரவலுக்கு காரணம் கோயம்பேடு மார்கெட் ஊழியர்கள் என்று பழி போடுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ” கொரோனா நோய்த்தொற்று குறித்து , சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போதே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. எவ்வளவோ எச்சரிக்கை செய்து, நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. முகக்கவசம் வழங்க வேண்டும் எனச் சொன்னபோது , அதனை மறுத்து, “கொரோனா தமிழ்நாட்டுக்கு வராது” என்று முதலில் “ஆரூடம்” சொன்ன…

மேலும்...

அதிர்ச்சி தகவல் – இருமடங்காக உயரும் ஆம்னி பேருந்து கட்டணம்!

சென்னை (14 மே 2020): ஆம்னி பேருந்து கட்டணங்கள் இரு மடங்காக உயரும் என்ற அதிர்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அதன்பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஆனால், பல்வேறு தொழில்களுக்கு அனுமதி அளித்ததுபோல், பொது போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட உள்ளது. தனி மனித இடைவெளியை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதால் பேருந்துகளில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட பயணிகள்…

மேலும்...

எளியவர்களிடம் மட்டுமே அதிகார வர்க்கம் அத்துமீறும் – கனிமொழி ஆவேசம் (வீடியோ)

சென்னை (13 மே 2020): வாணியம்பாடியில் கடைகளை ஆய்வு செய்ய சென்ற நகராட்சி ஆணையர், வியாபாரிகளின் பழங்களை வீதியில் வீசிய சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இநிலையில் நகராட்சி ஆணையரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல திமுக எம்.பி கனிமொழியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது. “வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ?…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான விளம்பரம் – சென்னை பேக்கரி உரிமையாளர் கைது!

சென்னை (13 மே 2020): முஸ்லிம்களுக்கு எதிராகவும், முஸ்லிம் வெறுப்பை தூண்டும் விதமாக விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது செய்யப் பட்டுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள ஜெயின் பேக்கரிஸ் அண்ட் கன்ஃபெக்‌ஷனரிஸ் என்ற பேக்கரி, ராஜஸ்தானி ஹோம்மேட் வீட்டுத் தயாரிப்பில் பேக்கரி பொருட்கள் செய்து தரப்படும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அதோடு, மேல் பகுதியில் ஆர்டரின் பேரில் பொருட்கள் ஜெயின்களால் செய்யப் படுகிறது. அத்துடன், மதத் துவேஷத்தை வெளிப்படுத்தும் வண்ணம், “முஸ்லிம் பணியாளர்கள் இல்லை”…

மேலும்...

அவனுங்களை தூக்கில் போடுங்கள் – கதறும் ஜெயஸ்ரீயின் பெற்றோர் – வீடியோ!

விழுப்புரம் (12 மே 2020): விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியைச் சேர்ந்தவர் ஜெயபால் (42), ராஜி தம்பதியர். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். விவசாயக் கூலி வேலை செய்துவரும் ஜெயபால் தனது வீட்டிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று ஜெயபாலும் அவரது மனைவியும் வெளியே சென்றிருந்த நிலையில், மூத்த மகளான ஜெயஸ்ரீ (15) மட்டும் வீட்டில் இருந்திருக்கிறார். சுமார் 11 மணியளவில் ஜெயபால்…

மேலும்...

மதுக்கடைகளுக்கு திறப்பு விழா, மத வழிபாட்டுத் தலங்களுக்கு மூடு விழாவா? – நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை (12 மே 2020): தமிழகத்தில் மத வழிபாட்டுத்தலங்கள் எப்போது திறக்கப்படும்? என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மார்ச் 23 ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட மே 17 வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே 4ம் தேதி முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிறுகுறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழுது பார்க்கும் சேவைகள் உள்ளிட்டவை பணிகளை சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட…

மேலும்...

ஜூன் 1 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை (12 மே 2020): கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இறுதியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ், காரணமாக தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. ஏற்கனவே 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியிருந்த நிலையில், இறுதி பாடத்தின் போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,…

மேலும்...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

சென்னை (12 மே 2020): தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று ( மே 12ம் தேதி), தனது 67வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முதல்வர் பழனிசாமிக்கு, பிரதமர் மோடி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் பழனிசாமியின் பிறந்தநாளை, கட்சி தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டுவிட்டரில் #HBDEdapadiyaar என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை டிரெண்டிங் ஆக்கி உள்ளனர். மேலும் பிரதமர் மோடி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும்…

மேலும்...

குற்றவாளிகளை தூக்கிலிட இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்? – கொதிக்கும் நெட்டிசன்கள்!

விழுப்புரம் (12 மே 2020): சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொன்றவர்களை தூக்கிலிட சிறுமியின் மரண வாக்குமூலமே போதுமானது என்று பொதுவான கருத்து நிலவுகிறது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் – முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை – கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து அழுத்தி, மூச்சுத்…

மேலும்...