தனிமைப் படுத்தப்பட்டவர்கள் செய்ய வேண்டியவை என்னென்ன? – தமிழக அரசு விளக்கம்!

சென்னை (10 ஏப் 2020): கொரரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தனிமைப்பட்டு உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிவறையுடன் கூடிய காற்றோட்டமான தனி அறையை ஒதுக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். வெளியே எங்கும் செல்லாமல் ஒதுக்கப்பட்ட அறையிலேயே இருக்க வேண்டும். பராமரிப்பு பணி செய்பவர் தவறாமல் முகக்சவசமும் கையுறையும் அணிந்திருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது….

மேலும்...

கொரோனா பாதிப்பில் கோவை இரண்டாம் இடம் வகிக்கிறதே ஒருவேளை அதுதான் காரணமா?

சென்னை (10 ஏப் 2020): கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாம் இடம் வகித்தாலும் தமிழக அளவில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இரண்டம் இடம் வகிக்கிறது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 6412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 199 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 834 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில் சென்னை முதலிடம் வகிக்கிறது. கோவை இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்நிலையில் பலரும் கொரோனா பாதிப்பிற்கு டெல்லி…

மேலும்...

கொரோனா வைரஸுக்கு கை வைத்தியம் மூலம் மருந்து சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

சித்தூர் (09 ஏப்ரல் 2020): கொரோனாவுக்கு டிக்டாக் சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவை பார்த்து கைவைத்தியம் மூலம் மருந்து சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனாவைப் பற்றியும், பல்வேறு நடவடிக்கைகள் பற்றியும் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை அடுத்த சிறிய கிராமமான அலப்பள்ளியில், ஊமத்தங்காயை அரைத்து அதில் கசாயம் வைத்துக்…

மேலும்...

போக்குவரத்து காவலர் மரணம் – ஸ்டாலின் பரபரப்பு கருத்து!

சென்னை (09 ஏப்ரல் 2020): சென்னை மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் 24 மணிநேர பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சென்னை மயிலாப்பூர் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அருண்காந்திக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடன் அவர் அருகில்…

மேலும்...

அத்தியாவசிய பொருட்கள் வாங்க மூன்று நாட்கள் மட்டுமே கெடு!

வேலூர் (08 ஏப் 2020): வேலூர் மாவட்டத்தில் மளிகை சாமான்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வாங்க முடியும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாகவும், பொதுமக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் விதமாகவும், வியாழன் (09.04.2020) முதல் வேலூர் மாவட்டத்தில் மளிகை கடைகள், சூப்பர் மார்கெட், டிப்பார்மென்டல் ஸ்டோர்கள் ஆகிய வாரத்தின் திங்கள், வியாழன், ஞாயிற்று கிழமைகளில் மட்டும் காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டுமே இயங்கும்….

மேலும்...

ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த தமிமுன் அன்சாரி புது ஐடியா!

சென்னை (08 ஏப் 2020): கொரோனா பரவலால் ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்புத் தேர்வை நடத்த மஜக பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி யோசனை ஒன்றை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்கும் வகையில் பத்தாம் வகுப்புத் தேர்வை ஒத்திவைக்கும் முடிவை முதல்வர் அறிவித்தார். தற்போது கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஓயாத…

மேலும்...

கொரோனாவால் தந்தை மரணம் – மகன்கள் மீது வழக்கு!

சென்னை (08 ஏப் 2020): கொரோனா பாதிப்பால் இறந்ததாக கூறப்படும் கீழக்கரையைச் சேர்ந்தவரின் இரு மகன்கள் மீது கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த 70 வயது முதியவர், துபாயிலிருந்து சென்னை திரும்பிய நிலையில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி திடீரென சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். உடன் அவரது உடல் அவரது மகன்களிடம் ஒப்படைக்கப் பட்டது. உடலை பெற்றுக்கொண்ட அவர்கள் சொந்த ஊரான கீழக்கரைக்கு கொண்டுச் சென்று, அடக்கம்…

மேலும்...

தனி மாவட்டமாக உருவாகியது மயிலாடுதுறை!

சென்னை (08 ஏப் 2020): நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில், கடந்த மார்ச் 24ம் தேதி விதி எண்.110ன் கீழ் அறிவித்தார். இந்நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசாணையில்,” முதல்வரின் அறிவிப்புக்கு இணங்கவும், அரசு முதன்மை செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட பரிந்துரை அடிப்படையிலும், தற்போது இருக்கும் நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப்…

மேலும்...

ஊடகங்களின் செய்தியை பார்த்து பதற்றம் அடைய வேண்டாம் – ஜவாஹிருல்லா கோரிக்கை!

சென்னை (08 ஏப் 2020): மரணித்த முஸ்லிமின் உடலை எரியூட்டப்படும் என்ற தவறான செய்தியை வெளியிட்ட கலெக்டரின் உத்தரவை பார்த்து முஸ்லிம்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “கோவிட் 19 (கொரோனா வைரஸ்) பாதிப்பால் வேலூரில் 45 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் நபர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை எரியூட்டப்படும் என்று மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதனை பார்த்து பலரும்…

மேலும்...

அறிவிப்பை திடீரென திரும்ப பெற்றது தமிழக அரசு!

சென்னை (07 ஏப் 2020): இரும்பு, உரம், காகிதம் உட்பட 13 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அதைத் திரும்பப் பெறுவதாக இப்பொழுது அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) மாலை இரும்பு ஆலைகள், சுத்திகரிப்பு ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், ரசாயனத் தொழிற்சாலைகள், உரம், ஜவுளி (பின்னாலாடைத் தொழில் தவிர்த்து), சர்க்கரை ஆலைகள், கண்ணாடித்…

மேலும்...