தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை!

சென்னை (28 ஜன 2020): பொதுவெளியில் அமைச்சர்கள் கண்டபடி கருத்துக்களை முன் வைக்கக்கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பெரியாரை பற்றி ரஜினிகாந்த் பேசியது தொடர்பாக அமைச்சர்கள் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதே போல் , ரஜினி என்ன அப்படி பேசிவிட்டார் என்றும், சசிகலா சிறையில் இருப்பது வருத்தமளிப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருந்தார். அதேவேளை பல அமைச்சர்கள் ரஜினியின் பேச்சை கண்டித்திருந்தனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள்…

மேலும்...

ஒருவழியாக விலை குறைந்தது!

சென்னை (28 ஜன 2020): வெங்காயத்தின் விலை ஒருவழியாக குறைந்து வருகிறது. சமீபத்தில் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சத்துக்கு சென்றதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். ஒரு கிலோ 200 ரூபாய் வரை அதிகரித்து பொதுமக்களை அதிகம் அவதிக்குள்ளாக்கியது. இதனால், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது. துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்தது. இதனைத்தொடர்ந்து, வெங்காயம் விலை சற்று குறைய தொடங்கியது….

மேலும்...

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தமிழக பாஜக!

சென்னை (28 ஜன 2020): தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது பதிந்துவிட்டு பின்பு நீக்கம் செய்வது வாடிக்கை. அந்த வகையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா குறித்த ஒரு பதிவை பதிந்துவிட்டு தற்போது நீக்கம் செய்துள்ளது. காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவருமான ஓமர் அப்துல்லாவின் கடந்த ஐந்து மாதங்களாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரது தாடியுடன் கூடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதனை கிண்டல் செய்யும்…

மேலும்...

பாஜகவின் மதவெறிக்கு எதிராக ஸ்டாலின் கடிதம்!

சென்னை (28 ஜன 2020): குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும் என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்கிற அதிகார ஆணவத்தினால் இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உடைக்கும் வகையில் மொழி-பண்பாடு-இனம்-மதம் எனப் பல தளங்களிலும்…

மேலும்...

தொடரும் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் – இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை!

புதுடெல்லி (28 ஜன 2020): கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாகிக் கொண்டுள்ள நிலையில் சீன நகரமான வூஹானில் இருந்து 250 க்கும் மேற்பட்ட இந்தியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய்…

மேலும்...

காஷ்மீர் முன்னாள் முதல்வரின் தற்போதைய நிலை – ஸ்டாலின் கவலை!

சென்னை (28 ஜன 2020): காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் புகைப்படம் மிகுந்த வருத்தம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவருமான ஓமர் அப்துல்லாவின் தாடியுடன் கூடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்டு வருத்தம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிரத்து செய்தது மத்திய…

மேலும்...

நீட் தேர்வு – தீர்ப்பை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (28 ஜன 2020): நீட் தேர்வை தமிழகத்தில் தடை விதிக்க முடியாதென உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி, வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் திரு. அருண் மிஸ்ரா தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. நீட் தேர்வு கட்டாயம் என்பதை உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாள்தோறும் மாற்ற முடியாது என…

மேலும்...

திருச்சி பாஜக நிர்வாகி கொலையின் பின்னணியில் மதம் காரணமல்ல – காவல்துறை!

திருச்சி (27 ஜன 2020): திருச்சி பாஜக நிர்வாகி விஜயரகு படுகொலையின் பின்னணியில் மத பிரச்சனை காரணம் அல்ல என்று மத்திய மண்டல ஐ.ஜி.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை பகுதி பாஜக மண்டலச் செயலாளராக இருந்தவர் விஜய ரகு. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை செய்து வந்தார். இந்நிலையில் (27-ம் தேதி) காந்தி மார்க்கெட் வாசலில் ஒரு கும்பல் விஜய ரகுவை வெட்டிக் கொலை செய்தது. அக்கம்பக்கத்தினர் சுதாரிப்பதற்குள்…

மேலும்...

குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்றவர்கள் கைது!

சென்னை (27 ஜன 2020): சென்னை மயிலாப்பூரில் ‘துக்ளக்’ ஆசிரியா் குருமூா்த்தி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில், 4 போ் கைது செய்யப்பட்டனா். மயிலாப்பூா் தியாகராஜபுரத்தில் வசிக்கும் ‘துக்ளக்’ ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி வீட்டின் அருகே, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 இருசக்கர வாகனங்களில் 6 போ் வந்தனா். அதில் ஒரு நபா், தனது பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசுவதற்கு எடுத்துள்ளாா். அப்போது அங்குள்ள நாய் பலமாகக் குரைத்ததால், பாதுகாப்பு பணியில் இருந்த…

மேலும்...

மணமக்களை வித்தியாசமாக வாழ்த்திய ஸ்டாலின்!

சென்னை (27 ஜன 2020): சென்னையில் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் மணமக்கள் பெரியார் போல் வாழ்க என வாழ்த்தியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜாவின் இல்லத் திருமண விழா சென்னை கோபாலபுரம் அருகே உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். அபோது பேசிய ஸ்டாலின், குடியுரிமை சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை தொடர்ந்து பா.ஜ.க கூட்டணியில் உள்ள…

மேலும்...