மானம் இழந்தவர்கள்தான் கட்சி நிர்வாகியாக இருக்க முடியும் – டி ஆர்.பாலு பரபரப்பு கருத்து!

காஞ்சிபுரம் (13 பிப் 2022): மானம், ஈனம், சுய மரியாதை எல்லாம் இழந்துட்டு வந்தாதான் கட்சியில் நிர்வாகியா இருக்க முடியும். என்று தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டி.ஆர்.பாலு இன்று பேசினார். அப்போது தெரிவிக்கையில் நான் மாவட்ட செயலாளராக இருந்தபோது எத்தனை அடி பட்டிருப்பேன். எவ்வளவு உதை பட்டிருப்பேன். மானம், ஈனம், சுய மரியாதை எல்லாம் இழந்துட்டு வந்தாதான் கட்சியில் நிர்வாகியா…

மேலும்...

மேற்கு வாங்க சட்டசபை முடக்கம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை (13 பிப் 2022): மேற்கு வங்க சட்டமன்றத்தை முடக்கிய ஆளுநரின் செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்குள்ள ஆளுநர் ஜக்தீப் தன்கர்ம்க்கும் , முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.’எனக்கு எந்த மரியாதையும் கொடுப்பதில்லை; நான் கேட்கும் கேள்விகள், விளக்கங்களுக்கு பதில் அளிப்பதில்லை’ என, மாநில அரசு மீது, கவர்னர் குற்றஞ்சாட்டுகிறார் ஆளுநர் .மாநில அரசோ, ‘சட்டசபையில்…

மேலும்...

பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார் கு.க.செல்வம்!

சென்னை (12 பிப் 2022): திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார். ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் கு.க. செல்வம். கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவராகவும், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களில் முக்கியமானவராகவும் அவர் இருந்து வந்தார். இந்நிலையில், திமுக மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகிய அவர் பாஜகவில் இணைந்தார். சுமார் இரண்டு…

மேலும்...

தஞ்சாவூரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை!

தஞ்சாவூர் (12 பிப் 2022): தஞ்சாவூரில் கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படும் 3 இஸ்லாமியர்கள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்துன் தொடர்புள்ளதாக கூறப்படும் அப்துல் காதர் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும், இவர், சமூக வலைத்தளங்களில் இந்துக்களை பற்றி அவதூறாக கருத்துக்களை பதிவிட்டு வருவதாகவும், இது மதமோதல்களுக்கு அச்சுறுத்தும் வகையில்…

மேலும்...

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது ஏன்? – காவல்துறை பரபரப்பு விளக்கம்!

சென்னை (10 பிப் 2022): சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ளது பாஜக தலைமை அலுவலகம். நேற்றிரவு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியுள்ளனர். நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் நேரிடவில்லை. காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோதும், அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இருச்சக்கர வாகனத்தில் வந்தவர்கள் யார் என்பது…

மேலும்...

சென்னை பாஜக தலைமை அலுவலக குண்டு வெடிப்பில் தொடர்புடைய வினோத் என்பவர் கைது!

சென்னை (10 பிப் 2022): சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ளது பாஜக தலைமை அலுவலகம். நேற்றிரவு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியுள்ளனர். நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் நேரிடவில்லை. காவல் துறையினர்…

மேலும்...

பாஜகவும் அதன் ஆதரவாளர்களும்தான் உண்மையான தேச விரோதிகள் – சீமான்!

சென்னை (09 பிப் 2022): மாணவர்களின் மனங்களில் மதவாத நச்சுப்பரப்புரையை விதைத்து மதமோதலுக்கு வித்திடுவதாக பாஜக மீது சீமான் சாடியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கர்நாடக மாநிலத்தின் கல்விக்கூடங்களில் இசுலாமியப்பெண்கள் தங்களது மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து, கடந்த சில வாரங்களாக மதவெறி இந்துத்துவக்கும்பல் நிகழ்த்தி வரும் வன்முறை வெறியாட்டங்களும், பிரித்தாளும் சூழ்ச்சிகளும் அதிர்ச்சியளிக்கின்றன. கல்விக்கொள்கையையும், தேர்வு முறையையும் காவிமயப்படுத்தும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, தற்போது மாணவர்களின் மனங்களிலும் மதவாத…

மேலும்...

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளவர்களுக்கு சலுகைகள் கூடாது – தமிழக அரசு!

புதுடெல்லி (09 பிப் 2022): கோவை குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் உள்ளிட்ட எந்த சலுகைகளும் வழங்கக்கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி மூஸா மொய்தீன் உள்ளிட்ட 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அவர் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில், தாங்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருவதாகவும், தங்களுக்கு…

மேலும்...

ரோஜா முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு!

சென்னை (07 பிப் 2022): ஆந்திர மாநில எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, ஆந்திர மாநிலம் மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் சாலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சருடன் பேசியதாகத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஆந்திர மாநிலத்தில் நான் எம்எல்ஏவாக இருக்கும் நகரி தொகுதியானது தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அவர்கள் மருத்துவ உதவிகளுக்காகச் சென்னைக்குத்தான் அதிகம் வருகிறார்கள். அவ்வாறு…

மேலும்...

சவூதியின் தவக்கல்னா மற்றும் அப்ஷர் செயலிகளை இணைக்க முடிவு!

ரியாத் (06 பிப் 2022): சவூதி அரேபியாவின் முக்கிய செயலிகளான தவக்கல்னா மற்றும் அப்ஷர் ஆகியவற்றை ஒரே செயலியாக இணைக்க சவூதி அரசு முடிவு செய்துள்ளது. தவக்கல்னா மற்றும் அப்சர் ஆகியவை நாட்டில் உள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் பயன்படுத்தும் மிக முக்கியமான பயன்பாடுகள். பல அரசு சேவைகளை உள்ளடக்கிய இந்த செயலிகளை இணைப்பதன் மூலம், முழு சேவையும் ஒரே செயலியாக மாற்றப்படும். இவைகளை இணைப்பதன் மூலம் ஒரே தளம் மூலம் பல்வேறு அரசு சேவைகள் கிடைக்கும்….

மேலும்...