தடுமாறிய திருமாவளவன் தன்னிலை விளக்கம்!

சென்னை (02 அக் 2020): இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தது குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தற்போது தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார்,. இதற்கு இரங்கல் தெரிவித்த திருமாவளவன் அவரது பதிவில், “இந்து முன்னணி தலைவர் பெரியவர் இராம.கோபாலன் அவர்களின் மறைவுக்காக வருந்துகிறோம். இந்துக்களின் நலன்களுக்காகக் குரல் கொடுத்தவர். கருத்து முரண் இருந்தாலும் எம்மீது வெறுப்பைக் காட்டாதவர். அரசியல் கணக்குகளுக்காக அவதூறுகளைப்…

மேலும்...

ஓபிஎஸ் தனது இல்லத்தில் தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

சென்னை (02 அக் 2020): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனது வீட்டில் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார். அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை வரும் 7-ந்தேதி அறிவிக்கப்பட இருப்பதாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால், என்ன முடிவை அவர் அறிவிக்கப்போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் வரும் 6ந்தேதி சென்னைக்கு வர…

மேலும்...

இந்தியாவில் டெபிட் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

புதுடெல்லி (01 அக் 2020): இந்தியாவில் டெபிட்-கிரடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி இன்று முதல் கிரெடிட், டெபிட் கார்டுகள் தொடர்பாக நடைமுறைக்கு வரும் ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள் என்னென்ன என்று பார்ப்போம். 1) அனைத்து டெபிட், கிரெடிட் கார்டுகள் இந்தியாவில் உள்ள ஏடிஎம்கள் மற்றும் பாயிண்ட் ஆஃப் சேல் சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் 2) வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்தியாவுக்கு வெளியே பயன்படுத்த விரும்பினால்,…

மேலும்...

பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்கள் மீது கமல்ஹாசன் குற்றச்சாட்டு!

சென்னை (30 செப் 2020): பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்கள் சாரியான ஆதாரங்களை காட்டவில்லை என்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை…

மேலும்...

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் கொரோனா பாதிப்பால் காலமானார்!

சென்னை (30 செப் 2020):இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் (94) கொரோனா பாதிப்பால் காலமானார். ராமகோபாலனுக்கு ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். இதையடுத்து, கடந்த 27-ம் தேதி மீண்டும் ராம கோபாலன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி வெளியான பரிசோதனை…

மேலும்...

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!

சென்னை (30 செப் 2020): பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை வரவேற்பதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , “அதிமுகவில் பிரிவு என்பதே இருக்காது. கட்சி வளர்ச்சிக்காக நிர்வாகிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கிறார். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சி உரிய நேரத்தில் அறிவிக்கும். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பை வரவேற்கிறேன். தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்...

பாபர் மசூதி இடிக்கப்பட்டது சதிச்செயல் இல்லையா? – அசாதுதீன் உவைஸி வேதனை!

ஐதராபாத் (30 செப் 2020): பாபர் மசூதி இடிக்கப்பட்டது சதிச்செயல் இல்லையா? என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் உவைஸி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை…

மேலும்...

படிக்கச் சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் 10 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!

திருப்பூர் (30 செப் 2020): திருப்பூர் அருகே படிக்கச் சொல்லி படிக்கச் சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் 10 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவினாசியில் விளையாட்டு புத்தி கொண்ட 10ஆம் வகுப்பு மாணவரைப் பாடம் படிக்கச் சொல்லிப் பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர். இதன் காரணமாகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான குறிப்பிட்ட மாணவர் தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர், அவினாசி பிஎஸ் சுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் செந்தில் நாதன். வயது 45. பொதுத் துறை…

மேலும்...

இவ்வருடம் எப்படி?- வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை (29 செப் 2020): இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று குறைவாக, குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் பதிவாகும் என்று உலக வானிலை மையத்தின் தெற்காசிய கூட்டமைப்பு பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வெப்பநிலை மாறுபாட்டின்(LA-NINA, IOD) அடிப்படையில் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய…

மேலும்...

தமிழக தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

சென்னை (29 செப் 2020): தமிழகத்தில் இப்போதைக்கு சட்டமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தற்போதைக்கு தேர்தல் நடத்தும் திட்டமில்லை என்று தேர்தல்…

மேலும்...