தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர்!

மெல்போர்ன் (21 பிப் 2021): ஆஸ்திரேலியாவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். ஆஸ்திரேலியா முழுவதும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் அதிகாரபூர்வமாக தொடங்கவுள்ள. அதுகுறித்து மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்வு நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ‘நாளை நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குகிறது….

மேலும்...

தஜிகிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்!

தஜிகிஸ்தான்(12/02/2021): ஜம்மு – காஷ்மீர் அருகில் தஜிகிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் பல வட இந்திய மாநிலங்களில் உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.3 அளவு பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஜம்மு – காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேஷ், பஞ்சாப், டெல்லி முதலான மாநிலங்களில் உணரப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வீட்டு சுவர்களில் கீறல் விழுந்தது. வீட்டிலிருந்து மக்கள் அலறியடித்து வெளியே ஓடியுள்ளனர். பாதிப்புகள் ஏதும் இதுவரை பதிவாகவில்லை. நிலநடுக்கத்தின் மையப்புள்ளியான தஜிகிஸ்தானிலும் அதன் அண்மை…

மேலும்...

82 நாடுகளில் உருமாறிய கொரோனா – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஜெனீவா (02 பிப் 2021): இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனா உலகின் 82 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்திற்கான தொழில் நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் ஆலோசனை கூட்டமொன்றில் கலந்து கொண்டார். அவர் பேசும்பொழுது, இங்கிலாந்து நாட்டில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட உருமாறிய வகையை சேர்ந்த கொரோனா பாதிப்பு 82 நாடுகளில் இதுவரை கண்டறியப்பட்டு உள்ளன. தென்ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட மற்றொரு வகை கொரோனா…

மேலும்...

ஆர்.எஸ்.எஸ், பாஜகவுடன் தொடர்புடைய அதிகாரிகள் நீக்கம் – அமெரிக்க அதிபர் அதிரடி!

வாஷிங்டன் (22 ஜன 2021): ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுடன் தொடர்பு வைத்திருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவரை பைடன் அரசு, தனது நிர்வாகத்திலிருந்து நீக்கம் செய்துள்ளது. அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அந்நாட்டின் துணை அதிபராகப் பதவியேற்றார். ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்தே பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். குறிப்பாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த மக்கள் விரோத திட்டங்களுக்கு…

மேலும்...

10 நிமிட சார்ஜில் 400 கிலோ மீட்டர்: சூப்பர் பேட்டரி!

நியூயார்க்(19/01/2021): வெறும் 10 நிமிட ரீசார்ஜிங்கில் 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனம் ஓடுவதற்கான சக்திகொண்ட சூப்பர் பேட்டரி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் கார்பன் புகையால் ஏற்படும் சூழலியல் பாதிப்பு குறித்த கவலையும் அதனைக் குறைப்பதற்கான முயற்சிகளும் உலகின் பல்வேறு நாடுகளும் தொடர்ந்து எடுத்துவருகின்றன. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் கடந்து காற்றை மாசுபடுத்தாத பேட்டரி சார்ஜ் மூலம் இயங்கும் வாகனங்கள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், எண்ணெயில் இயங்கும் வாகனங்கள் அளவுக்கு…

மேலும்...

முகம் மூடுபவர்களுக்கு அதிக கொரோனா பாதிப்பு-ஆய்வு முடிவு!

நியூயார்க்(17/01/2021): முகம் மூடாதவர்களைவிட முகத்தை மூடுபவர்களுக்குத் தான் கொரோனா பாதிப்பு அதிகம் என ஆய்வு முடிவொன்று வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வெர்மோன்ட் மாகாணத்திலுள்ள வெர்மோன்ட் மருத்துவப் பல்கலை கழகம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடையேயும் பாதிக்கப்படாதவர்களிடையேயும் ஆய்வொன்றை நடத்தியது. அதில், முகத்தை மூடாமல் இருப்பவர்களைவிட முகத்தை மூடியிருப்பவர்களிடையே கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு, முகத்தை மூடியிருப்பவர்களிடையே தாம் பாதுகாப்பாக இருப்பதான உணர்வு எழுவதால் எவ்விதத் தயக்கமும் இன்றி மற்றவர்களிடையே கலந்து உறவாடுவதுதான் காரணம். ஆனால் அதே…

மேலும்...

வாட்ஸ்ஆப் அப்டேட்டிங் திட்டத்தில் திடீர் மாற்றம்!

நியூயார்க்(16 ஜன 2021): வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டிங் கொள்கையை அமல்படுத்துவதை மே 15 வரை ஒத்திவைத்துள்ளது. கடந்த மாதம் வாட்ஸ்ஆப் அப்டேட்டிங்கில் தனி மனித சுதந்திர தலையீடு இருக்கக் கூடும் என்ற அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எதிர்ப்புக்களை சம்பாதித்துக் கொண்டது. இதனை அடுத்து அப்டேட்டிங் புதுப்பிப்பைத் தற்போதைக்குச் செயல்படுத்த வேண்டாம் என்று வாட்ஸ்ஆப் முடிவு செய்துள்ளது. மேலும், சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களுக்கு மக்கள் பெருமளவில் மாறுவது வாட்ஸ்ஆப்பிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது….

மேலும்...

பயனர்களுக்கு வாட்ஸ் அப்பின் முக்கிய விளக்கம்!

நியூயாக் (12 ஜன 2020): பரபரப்பான சூழலில் பயனர்களுக்கு வாட்ஸ் அப் முக்கிய அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பயனர்களின் பிரைவசியில் வாட்ஸ் அப் தலையிடாது. பயனர்களின் உரையாடல்களை வாட்ஸ் அப்,/பேஸ்புக் கவனிக்காது. பயனர்களின் தகவல்களை வாட்ஸ் அப் சேமிக்காது. தொடர்பு  எண்களை பேஸ்புக்குடன் பகிறாது. குறிப்பிட்ட காலங்களில் மெஸேஜ்களை பயனர்களே நீக்கம் செய்யலாம். வாட்ஸ் அப் குழுமங்கள் வழக்கம்போல் செயல்படலாம் வழக்கம்போல் பகிர்வுகள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். வாட்ஸ் அப் குறித்து வெளியான பரபரப்பான தகவல்களை…

மேலும்...

இந்தோனேஷியா பயணிகள் விமானம் 62 பயணிகளுடன் திடீர் மாயம்!

ஜகார்த்தா (09 ஜன 2021): இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் திடீரென மாயமாகியுள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்குப் புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமனவிமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரிலிருந்து மறைந்துள்ளது. போயிங் 737 ரக விமானம், 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரிலிருந்து மறைந்துள்ளதாகத் தகவல்கள்…

மேலும்...

கலவரக் களமான வெள்ளை மாளிகை – டிரம்புக்கு எதிராக பேஸ்புக் ட்வீட்டர் நடவடிக்கை!

வாஷிங்டன் (07 ஜன 2021): அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வருகிற 20ந்தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பைடன் பொறுப்பேற்க உள்ளார். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதுபற்றிய வழக்குகளின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது….

மேலும்...