கொரோனா ரணகளத்திலும் அமெரிக்காவில் நடக்கும் அரசியல் அக்கப்போர்!

வாஷிங்டன் (21 மே 2020): கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை சாப்பிடுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பது அமெரிக் அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட பல நாடுகள் இம்மருந்தை பரிந்துரைக்கின்றன. இந்த மாத்திரையை அதிகளவில் உற்பத்தி செய்யும் இந்தியாவை மிரட்டி, லட்சக்கணக்கான மாத்திரைகளை அமெரிக்கா…

மேலும்...

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு குழு தலைவராக முஸ்லிம் மருத்துவர் நியமனம்!

வாஷிங்டன் (20 மே 2020): அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்புக் குழு தலைவராக முஸ்லிம் மருத்துவ விஞ்ஞானியை நியமித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் (கோவிட் 19) உலக அளவில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இதில் அமெரிக்காவே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இதற்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதில் முழு வீச்சில் இறங்கியுள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவ…

மேலும்...

கொரோனா எங்கிருந்து பரவியது? – விசாரணைக்கு 62 நாடுகள் வலியுறுத்தல்!

ஜெனீவா (18 மே 2020): கொரோனா வைரஸ் பரவியது தொடர்பாக சுதந்திரமான விசாரணை கோரி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கியது. கொரோனா பரவலுக்கு சீனாதான் பொறுப்பு என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டிவருகின்றன. வைரஸ் எப்படி உருவானது என்று கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் உருவானது தொடர்பாக பாகுபாடின்றி, சுதந்திரமாக , விரிவான விசாரணை…

மேலும்...

கோபமடைந்த ட்ரம்ப் காரணம் இதுதான்!

வாஷிங்டன் (13 மே 2020): செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பத்திரிகையாளர் சந்திப்பை பாதியிலேயே முடித்துக் கொண்டு வெளியேறினார். வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்பிடம், வெய்ஜியா ஜியாங் (Weijia Jiang) என்னும் செய்தியாளர், அமெரிக்காவில் அன்றாடம் உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும்போது உலகிலேயே அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் இங்கு தான் நடைபெறுகின்றன என்று பரிசோதனையில் மற்ற நாடுகளோடு போட்டி போடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு எல்லா நாடுகளிலும்…

மேலும்...

கத்தாரிலிருந்து இந்தியா: எட்டு விமானங்கள் புறப்பாடு!

கத்தார் (13 மே 2020): சர்வதேச அளவில் வசிக்கும் இந்தியர்கள், நாடு திரும்ப இந்தியா உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப இயலாமல் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்துக் கொள்வதற்கான திட்டத்தை, வந்தே பாரத் மிஷன் (#VandeBharatMission) என்ற பெயரில் மத்திய அரசு வகுத்துள்ளது. கத்தாரிலிருந்து இந்தியா செல்ல விரும்புவோர், இந்தியத் தூதரகத்திற்கான இணைய தளத்தில் பதிவு செய்ய, தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. இதில் இதுவரை 44 ஆயிரம் பேர் பதிவு…

மேலும்...

கொரோனா விவகாரம் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ட்ரம்ப் மீது கடும் விமர்சனம்!

நியூயார்க் (10 மே 2020): கொரோனாவை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் செயல்பாடு குறித்து முன்னாள் அதிபர் பராக் ஒபாமா விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பொறுப்பற்ற நிர்வாகமே இதற்கு காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், தான் அதிபராக இருந்தபோது பணியாற்றிய வெள்ளை மாளிகை அதிகாரிகளுடன் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், கொரோனாவை கையாளும் விவகாரத்தில் அமெரிக்க அதிபரின் செயல்பாடு…

மேலும்...

கொரோனா ஆராய்ச்சியாளர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை!

நியூயார்க் (09 மே 2020): கொரோனா குறித்த சீன ஆராய்ச்சியாளர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் லியு கொரோனா குறித்து முக்கிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரத்தின் இறுதியில் அவரது வீட்டில் சுடப்பட்டு இறந்து கிடந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். லியுவை சுட்டுக் கொலை செய்த மர்ம நபர் அவரது காரில் தற்கொலை செய்து இறந்து கிடந்துள்ளார். லியுவை கொன்றுவிட்டு…

மேலும்...

கொரோனா :அமெரிக்கா, ஐரோப்பாவை தொடர்ந்து அடுத்த டார்கெட் ரஷ்யா!

மாஸ்கோ (07 மே 2020): ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,599 பேருக்கு கொரோனா இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸை தடுக்க உல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ரஷ்யாவிலும் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இதனால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 10 வது இடத்தில் இருந்து 8 வது இடத்திற்கு சென்றது. இந்நிலையில்மாஸ்கோவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,599 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது….

மேலும்...

இஸ்லாமிய எதிர்ப்புப் பதிவு – கனடாவிலும் இந்துத்வா ஆதரவாளர் மீது நடவடிக்கை!

டொரொண்டோ (06 மே 2020): சமூக வலைதளத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுக்காக கனடாவில் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்வாவினர் நடத்தும் அத்துமீறல்கள், அடக்குமுறைகள் தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அரபு நாடுகளில் உள்ள அரபியர்கள், அதிகாரிகள் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கனடாவில் ரவி என்பவர் இஸ்லாமிற்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிந்த பதிவிற்காக அவர் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா…

மேலும்...

வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களை கொரோனா அதிக அளவில் தாக்கும் – ஆராய்சியாளர்கள் தகவல்!

லண்டன் (06 மே 2020): வைட்டமின்-டி குறைபாடு உள்ளவர்களை அதிக அளவில் கொரோனா வைரஸ் தாக்குவதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.. கொரோனா வைரசை ஒழிக்‍க தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணி ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கொரோனா, யார் யாரை எல்லாம் தாக்குகிறது? என்பதை சில ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில், இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் ராணி எலிசபெத் அறக்‍கட்டளை மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட…

மேலும்...