சென்னை (25 ஜூலை 2021): பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவருமான யாஷிகா ஆனந்த் கிழக்கு கடற்கரைச் சாலையில் நடந்த கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.
நேற்று இரவு யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழிகளுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் டாடா ஹேரியர் காரில் பயணம் சென்றுள்ளார். அப்போது யாஷிகா ஆனந்த்தின் மாமல்லபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அவருடன் பயணித்த தோழி மரணம் அடைந்த நிலையில் யாஷிகா ஆனந்த் திவீர சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது நிலை கிரிட்டிக்கலாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருடன் விபத்தில் சிக்கிய ஆண் நண்பர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.