குஜராத் பாலம் இடிந்து 141 பேர் பலியனது தொடர்பாக 9 பேர் கைது!

Share this News:

அகமதாபாத் (01 நவ 2022) : குஜராத்தின் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் 141 பேர் உயிரிழந்தது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலம் சீரமைப்பு நிறுவனமான ஓரேவாவின் மேலாளர்கள், டிக்கெட் சேகரிப்பாளர்கள், பாலம் பழுதுபார்க்கும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாலத்தின் பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்ட குஜராத்தைச் சேர்ந்த நிறுவனம் பல பாதுகாப்பு விதிகளை மீறியது விசாரணையில் கண்டறியப்பட்டது. பாலம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட நான்கு நாட்களில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ஆனால் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

பாலம் மூடிய பிறகு ஏழு மாதங்களுக்குப் பிறகு, குஜராத்தி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அக்டோபர் 26 அன்று பாலம் மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. பாலம் பராமரிப்புக்காக குறைந்தது 8 முதல் 12 மாதங்களுக்கு மூடப்படும் என்று நிறுவனம் ஒப்பந்தத்தில் தெரிவித்திருந்தது. ஆனால் அதை மீறி கடந்த வாரம் பாலம் திறக்கப்பட்டது ஒரு பொறுப்பற்ற தவறு என்று போலீசார் எப்ஐஆரில் கூறுகின்றனர்.

பாலத்தின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பொறுப்பை ஒப்படைத்தவர்கள் சரியாக செய்யவில்லை என்றும் எப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் சரியான தர சோதனை செய்யவில்லை. ஆனால் இந்த விபத்துகள் குறித்து அந்த நிறுவனத்துக்குத் தெரியும் என்றும் எஃப்ஐஆர் குறிப்பிடுகிறது.

விபத்து நடந்த நாளில் சுமார் 500 பேருக்கு டிக்கெட் விற்கப்பட்டது. பாலத்தில் குறைந்தது 125 பேரை ஏற்றிச் செல்ல முடியும். அப்போது, ​​500க்கும் மேற்பட்டோர் பாலத்தில் ஏறினர். இதனிடையே பாலத்தில் இருந்த சிலர் பாலத்தை குலுக்கிய காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *