என்.பி.ஆருக்கு ஆவணங்கள் எதுவும் சமர்பிக்க தேவையில்லை – அமித் ஷா!

Share this News:

புதுடெல்லி (13 மார்ச் 2020): “என்.பி.ஆருக்கு ஆவணங்கள் ஏதும் தேவையில்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் என்பிஆர் கணக்கெடுப்பு தொடங்கவுள்ள நிலையில், இதுகுறித்து நேற்று மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமித்ஷா, “என்.பி.ஆர். கணக்கெடுப்பு நடத்தப்படும்போது ஆவணங்கள் ஏதும் மக்கள் அளிக்கத் தேவையில்லை. உங்களிடம் எந்த தகவல் இருக்கிறதோ அதை அளித்தால் மட்டும் போதும். தெரியாத கேள்விகளை நீங்கள் விட்டு விடலாம்” என்றார்.

மேலும் ‘சந்தேகத்திற்கிடமானோர் (Doubtful) என்ற பிரிவு என்.பி.ஆரில் இடம்பெறாது. யாரும் அந்தப் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள்’ என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

முன்னதாக இதுகுறித்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அமித் ஷா பதிலளித்தார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *