பீகார் கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை!

Share this News:

பாட்னா (25 ஜன 2020): பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது திரும்ப பெறப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் ஜே.டி பெண்கள் கல்லூரி உள்ளது. அங்கு சமீபத்தில் சர்ச்சைக்குரிய ஒரு அறிவிப்பு வெளியானதால், மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த அறிவிப்பில், “முஸ்லிம் பெண்கள் கல்லூரி வளாகத்திற்குள் புர்கா அணியக் கூடாது!” என்றும் “மீறினால் ரூ.250 அபராதம் விதிக்கப்படும்!” எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பால் ஆத்திரம் அடைந்த மாணவிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “மத விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் தலையிடக் கூடாது!” என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து, கல்லூரி நிர்வாகம் சர்ச்சைக்குரிய அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *