புதுடெல்லி (18 மார்ச் 2021): இந்தியாவில் ஆரம்பத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் படிப்படியாக குறைந்தது. தற்போது இந்தியா முழுவதும் மீண்டும் கொ ரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,871 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 172 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றில் இருந்து 17,741 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது