கேரளா பஞ்சாபை தொடர்ந்து மகாராஷ்டிரா அரசு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அதிரடி முடிவு!

Share this News:

மும்பை (19 ஜன 2020): கேரளா பஞ்சாபை தொடர்ந்து மகாராஷ்டிர அரசும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற ஆலோசித்து வருகின்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், “இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம்!” என கேரளா ஏற்கனவே அறிவித்தது. அதன்படி சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் அரசும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. தற்போது மூன்றாவது மாநிலமாக மகாராஷ்டிராவும் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றது.

மகாராஷ்டிராவின் மகாவிகாஸ் அகாதி கூட்டணி கட்சிகள் இதுகுறித்து ஆலோசித்து வருகின்றன.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *