குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற ராஜஸ்தான் அரசு முடிவு!

Share this News:

ஜெய்ப்பூர் (20 ஜன 2020): கேரளா, பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், “இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம்!” என கேரளா ஏற்கனவே அறிவித்தது. அதன்படி சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் அரசும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில் ராஜஸ்தான் அரசும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவுள்ளது.

வரும் ஜனவரி 24 ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டசபை கூட்டத் தொடரின் முதல்நாள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் மூன்றாவது மாநிலமாக ராஜாஸ்தான் இடம்பெறும்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *