டெல்லி கலவரம் – பள்ளி கட்டிடம் அருகே டயர் சந்தைக்கு தீ வைப்பு!

Share this News:

புதுடெல்லி (24 பிப் 2020): டெல்லியில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் கோகல்பூரியில் பள்ளி கட்டிடம் அருகே டயர் சந்தைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.

இதில் டெல்லி தலைமை கான்ஸ்டபில் மற்றும் பொதுமக்கள் இருவர் உட்பட மூன்றுபேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து டெல்லி போர்க்களமாகவே காட்சி அளிக்கிறது.

இந்நிலையில் கோகல்பூரியில் பள்ளி கட்டிடம் அருகே டயர் சந்தைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *