விவசாயிகளுக்காக தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட மதகுரு!

Share this News:

புதுடெல்லி (17 டிச 2020): விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் டெல்லியில் உள்ள சிங்கு எல்லையில் ஒரு சீக்கிய மதகுரு பாபா ராம்சிங் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விவசாயிகளின் அவலத்தால் விரக்திடைந்த அறுபத்தைந்து வயது பாபா ராம்சிங் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள கடிதம் விவசாயிகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை தெளிவுபடுத்துகிறது.

“உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிவரும் விவசாயிகளின் நிலைமை என்னைப் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அரசு அவர்களுக்கு நீதி வழங்கவில்லை..விவசாயிகளின் வேதனையில் நானும் பங்குகொள்கிறேன். அநீதி இழைப்பது பெரும் பாவம். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பலரும் தங்களுடைய விருதுகளையும் பரிசுகளையும் திருப்பி அளித்துவருகின்றனர். நான் என்னையே அளிக்க தீர்மானித்துவிட்டேன்.” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 23 வது நாளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *