10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிக்க பரிந்துரை!

Share this News:

புதுடெல்லி (12 அக் 2022): 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆதார் புதுப்பிப்பை ஆன்லைனிலும், ஆதார் மையங்களிலும் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட ஆதார் தகவல்களை ஆன்லைனில் புதுப்பிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. https://myaadhaar.uidai.gov.in என்பதை கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைனில் தகவல்களைப் புதுப்பிக்கலாம். இது தவிர ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் அப்டேட் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆதார் ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் சலுகைகளைப் பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது. மேலும் ஆதார் எண் அல்லது பதிவுச் சீட்டு இல்லாதவர்கள் அரசின் மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *