தோஹா, கத்தார் (பிப்ரவரி 26, 2025): எதிர்வரும் வெள்ளிக்கிழமை 28-02-2025 ஆம் தேதி மாலை புனித ரமளான் மாதத்தின் பிறை நிலவைக் காண முன்வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது கத்தார் அமைச்சகம்.
எதிர்வரும் மார்ச் 1, 2025 அன்று வளைகுடா உட்பட உலகமெங்கும் ரமளான் நோன்பு மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கத்தாரில் உள்ள Crescent Sighting Committee மேற்கண்ட அழைப்பினை விடுவித்துள்ளது.
சூரிய அஸ்தமனத் தொழுகைக்குப் பிறகு பிறையைக் கண்ணால் கண்டவர்கள் எவரும் Dafna Tower இல் அமைந்துள்ள அவ்காஃப் தலைமையகத்திற்கு வந்து சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.