தப்பியோடிய ஐஏஎஸ் அதிகாரி மீது கேரள அரசு அதிரடி நடவடிக்கை!
திருவனந்தபுரம் (28 மார்ச் 2020): கொரோனா சந்தேகத்தின் பேரில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த கேரள ஐஏஎஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில், உதவி கலெக்டராக பணியாற்றி வருபவர் அனுபம் மிஷ்ரா. இவரது சொந்த மாநிலம் உத்தர பிரதேசம். சில மாதங்களுக்கு முன், இவருக்கு திருமணம் நடந்தது. இதற்காக விடுமுறையில் சென்ற அவர், பின்னர் மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு, ஒரு வாரத்துக்கு முன்னர் கேரளாவுக்கு வந்தார்….