எல்லா தொகுதிகளிலும் படுதோல்வி -அதிர்ச்சியில் பாஜக!

கொல்கத்தா (16 ஏப் 2022): மேற்கு வங்கம்,பீகார் மாநிலங்களில் இன்று வெளியான இடைத்தேர்தல் முடிவுகளில், பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு தொகுதியில்கூட வெற்றி கிடைக்கவில்லை/ பாரதிய ஜனதா வசம் இருந்த அசன்சோல் நாடாளுமன்ற தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட முன்னாள் பாலிவுட் நட்சத்திரம் சத்துருகன் சின்ஹா கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சின்ஹா ஆரம்பத்திலிருந்தே பாரதிய ஜனதா கட்சியின் அக்னிமித்திரா பாலை பின்னுக்குத்தள்ளி, முன்னிலை வகித்து வந்தார். சின்ஹாவுக்கு வெற்றி…

மேலும்...

வீடுகளை இடித்த அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாட முஸ்லிம்கள் முடிவு!

போபால் (16 ஏப் 2022): மத்திய பிரதேசத்தில் பாஜக அரசு முஸ்லிம்களின் வீடுகளை இடித்த நிலையில் இதற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசம் கார்கோன் நகரில் ராமநவமி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. இதில் வன்முறையில் ஈடுபட்டதாக முஸ்லிம்களின் வீடுகளை மட்டும் அரசு இடித்து தள்ளியுள்ளது. இதனால் பலர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். “அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாட உள்ளோம்” என்று போபால் ஷஹர் காசி…

மேலும்...

இந்து முஸ்லிம் இடையே பிரிவினையை ஏற்படுத்துவதே பாஜகவின் நிகழ்சிநிரல்: சிவசேனா தாக்கு!

மும்பை (12 ஏப் 2022): பாஜகவின் இந்துத்துவா, சுயநலம் மற்றும் வெற்று என்றும், பாஜகவின் இந்துத்துவவாதிகள்” நாட்டில் பிரிவினைக்கு முந்தைய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள் என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது. பாஜகவுக்கும் இந்துத்துவாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவை உருவாக்குவதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சி நிரலும் பாஜகவிடம் இல்லை என்றும் சிவசேனாவின் பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் பண்டிட்டுகளின் பிரச்சனைகள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை மசூதிகளுக்கு வெளியே ‘ஹனுமான் பாடலை இசைப்பதன்…

மேலும்...

நள்ளிரவில் பாஜக தலைவர் கைது!

சென்னை (08 ஏப் 2022): நள்ளிரவில் பாஜக மாவட்ட பிரசார அணி தலைவர் ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரல்வாய்மொழியில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற பாரதிய ஜனதா நிறுவப்பட்ட தின விழாவில் கட்சியின் மாவட்ட பிரசார அணி தலைவர் ஜெயபிரகாஷ் பேசினார். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக திமுகவினர் அளித்த புகாரில் ஜெயப்பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு இரண்டரை மணியளவில் ஜெயப்பிரகாஷை கைது செய்ய இரணியலில் உள்ள அவரது…

மேலும்...

முதியவர்களை கொடூரமாக தாக்கிய பாஜகவினர்!

புதுச்சேரி (29 மார்ச் 2022): மகன் வாங்கிய கடனை திருப்பிக் கேட்டு பாஜகவினர் முதியவர்களை தாக்கிய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியில் மனைவுயுடன் மளிகை கடை நடத்தி வருபவர் குமரேசன்(65), இவரது இரண்டாவது மகன் கணேஷ்குமார் செய்து வந்த தொழிலில் நஷ்டம் அடைந்தது .மேலும் கணேஷ்குமார் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார், அவர் கருவடிக்குப்பத்தில் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் பிரகாஷ் என்பவரிடம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கொடுத்த பணத்தை அப்போது பிரகாஷ்…

மேலும்...

முஸ்லிம் நாடுகள் திருப்பி அனுப்பினால் என்.ஆர்.ஐக்களுக்கு வேலை வழங்க முடியுமா? – பாஜக தலைவர் பரபரப்பு கேள்வி!

பெங்களூரு (28 மார்ச் 2022): முஸ்லிம் நாடுகள் திருப்பி அனுப்பத் தொடங்கினால், என்ஆர்ஐகளுக்கு வேலை வழங்க முடியுமா என்று பாஜக மூத்த தலைவரும், கர்நாடக சட்ட மேலவை உறுப்பினருமான (எம்எல்சி) எச்.விஸ்வநாத் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் சில கோயில் வளாகங்களில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு விஸ்வநாத் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகா கோவில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிக்கும் நடவடிக்கை, மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு பரவி பெரும்…

மேலும்...

அதை விட்டுவிட்டு இதற்கு ஏன்? – அண்ணாமலையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

சென்னை (22 மார்ச் 2022): தமிழக பட்ஜெட் தொடர்பாக போராட்டம் நடத்தப்போவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி முதல் 137 நாட்களாக தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81க்கு விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை திடீரென உயர்ந்துள்ளது. 137 நாட்களுக்குப் பின்னர் சென்னையில் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 16 காசுகளுக்கு…

மேலும்...
Durai Murugan

தமிழக அரசின் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு!

சென்னை (21 மார்ச் 2022): மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவது குறித்து தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகா மட்டுமல்லாது தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களுக்கும் பாய்கிறது. கோடிக்கணக்கான மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே ராம்நகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது எனும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட…

மேலும்...

பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுனருடன் திடீர் சந்திப்பு!

சென்னை (21 மார்ச் 2022): தமிழ்நாடு மின்வாரியம் பி.ஜி.ஆர். நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருக்கிறார். கடந்த 16 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ரூ.355 கோடி இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம் முறைகேடாக ரூ.4,442 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து இருப்பதாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில், இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் 8 சதவீத முஸ்லீம் வாக்குகளை பெற்ற பாஜக!

லக்னோ (13 மார்ச் 2022): நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது எட்டு சதவீத முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. முஸ்லிம்கள் எதிராக வாக்களிக்கிறார்கள் என்ற பொதுவான கருத்து இருந்தபோதிலும் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. CSDS-லோக்நிதி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் 20 சதவீத முஸ்லிம் வாக்குகளில் சமாஜ்வாடி கட்சி சுமார் 79 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது என்றும், குறைந்தது 8 சதவீத வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்துள்ளது எனவும், இது 2017ஆம் ஆண்டை விட ஒரு…

மேலும்...