இந்தியாவில் கோவிட் மூன்றாவது அலை குறித்து இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

புதுடெல்லி (12 ஜூலை 2021); கோவிட் -19 நோய்த்தொற்றின் மூன்றாவது அலைக்கு வெகுஜனக் கூட்டங்கள் ‘சூப்பர் ஸ்ப்ரெடர்களாக’ மாற வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவிட்- நடைமுறையை குறைந்தபட்சம் இன்னும் மூன்று மாதங்களுக்கு கண்டிப்பாக அமல்படுத்துமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளை ஐ.எம்.ஏ வலியுறுத்தியுள்ளது. “சுற்றுலா , யாத்திரை பயணம், மத சடங்குகள் அனைத்தும் தேவையானதுதான் , ஆனால் அவற்றிற்கு இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்…

மேலும்...

வட இந்தியாவில் இடி மின்னல் தாக்கி 68 பேர் பலி!

லக்னோ (12 ஜூலை 2021): வட இந்தியாவில் பெய்துவரும் பலத்த மழையாலும் மின்னல் தாக்கியதில் 68 பேர் இறந்துள்ளனர். வட இந்தியாவில் இடியுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கியதில் உத்தரபிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன. குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 20 பேரும், மத்திய பிரதேசத்தில் ஏழு பேரும் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் பலியானவர்களில் 7 பேர் குழந்தைகள். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். கான்பூர் தேஹத் மற்றும் ஃபதேபூரில் ஐந்து…

மேலும்...

கொரோனா மீண்டும் பரவல் – இரண்டு நாள் முழு ஊரடங்கு!

திருவனந்தபுரம் (10 ஜூலை 2021): கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் (ஜூலை10), நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் வார இறுதி நாட்களான இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கேரளாவில் கெரோனா உறுதி செய்யப்படும் நபர்களின் விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. இதனால், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்தது. முழு ஊரடங்கையொட்டி அரசு, தனியார்…

மேலும்...

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!

புதுடெல்லி (10 ஜூலை 2021): இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமும் கலக்கமும் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 42 ஆயிரத்து 766 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப் பட்டவர்களில் 4 லட்சத்து 55 ஆயிரத்து 33 பேர் சிகிச்சை பெற்று…

மேலும்...

கொரோனா மூன்றாவது அலை எப்படி இருக்கும்? – ஆய்வு தகவல்!

புதுடெல்லி (03 ஜூலை 2021): கொரோனா மூன்றாவது அலை பரவினால், அது கொரோனாவின் முதல் அலைக்கு ஒத்ததாக இருக்கும். அல்லது அதைவிட குறைவானதாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. ஒன்றிய அரசின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிபுணர் குழு நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த மதிப்பீடு அமைந்துள்ளது. கான்பூர் ஐஐடி அகர்வால், ஹைதராபாத் ஐ.ஐ.டி . கனித் கார், வித்யாசாகர் குழுவின் உறுப்பினர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். மூன்றாவது அலையானது நோய்…

மேலும்...

கொரோனா உச்சத்தில் இருந்தபோது இந்தியாவுக்காக அதிகம் பிரார்த்தித்த நாடு பாகிஸ்தான் – ஆய்வு தகவல்!

புதுடெல்லி 02 ஜுலை 2021): இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது ட்விட்டரில் இந்தியாவுக்காக அதிகம் பிரார்த்தித்த நாடு பாகிஸ்தான் என்பதாக அமெரிக்காவில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகம் (சி.எம்.யூ) நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியா கொரோனா இரண்டாவது அலை பாதிப்பிலும், கடுமையான ஆக்ஸிஜன் நெருக்கடியையும் எதிர்கொண்டிருந்த நேரத்தில் #IndiaNeedsOxygen மற்றும் #PakistanStandsWithIndia போன்ற ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருந்தன. இவற்றின் அடிப்படையில், ஏப்ரல் 21 முதல் மே 4 வரையிலான இதுபோன்ற 300,000 க்கும்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை!

துபாய் (02 ஜுலை 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வசிக்கும் குடிமக்கள், இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப் பட்டுள்ளது. விடுமுறைக் காலங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகரித்து வருவதால் இந்தியா மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, வியட்நாம், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட 14 நாடுகளுக்குச் செல்ல ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு…

மேலும்...

நாங்களெல்லாம் அப்படியில்லை – இப்போதைய கிரிக்கெட் வீரர்களை வறுத்தெடுக்கும் கபில்தேவ்!

மும்பை (01 ஜூலை 2021): இப்போதைய கிரிக்கெட் வீரர்கள் குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடுமையாக விமர்சித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிசிசிஐ அணி தோற்றது, பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில், இந்திய பவுலர்கள் பவுலிங் திறன் குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் வேதனையுடன் விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “”நான் நினைப்பது என்னவென்றால், நீங்கள் ஒரு வருடத்தில் 10 மாதம் கிரிக்கெட் விளையாடும்போது, நீங்கள் அதிக காயங்களுக்கு ஆளாக நேரிடும். இன்றைய…

மேலும்...

12 மாம்பழங்களை ரூ.1.2 லட்சத்திற்கு விற்று ஆச்சரியப்படுத்திய ஏழைச் சிறுமி!

ஜார்கண்ட் (30 ஜூன் 2021): ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட் போன் இல்லாத ஏழை சிறுமியிடம் வெறும் 12 மாம்பழங்களை ரூ.1.2 லட்சத்திற்கு வாங்கி போன் வாங்க உதவி புரிந்துள்ளார் தொழிலதிபர் ஒருவர். கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டு அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாணவர்கள் ஸ்மார்ட் போனில் வகுப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஜார்கண்டின் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி துளசி குமாரி, ஆன்லைன் மூலம் படிக்க ஸ்மார்ட்போன் இல்லாமல்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகம் – 5 நாடுகளுக்கான பயணத் தடை ஜூலை 21 வரை நீட்டிப்பு!

துபாய் (30 ஜூன் 2021): ஐக்கிய அரபு அமீரகம் 5 நாடுகளுக்கான பயணத் தடையை ஜூலை 21 வரை நீட்டித்துள்ளது. எதிஹாத் ஏர்வேஸை மேற்கோள் காட்டி கலீஜ் டைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இந்த தடை பொருந்தும். பயணிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் எதிஹாத் ஏர்வேஸ் தனது டிவிட்டரில் இதனை தெரிவித்துள்ளது.

மேலும்...