சவூதியில் கனமழை எச்சரிக்கையை அடுத்து கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

ஜித்தா(01 ஜன 2023)- சவூதியில் மழை தீவிரமடையும் என்ற எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, நாளை (திங்கட்கிழமை) ஜித்தா, தாயிப் பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கா, ஜுமூம், அல்காமில் மற்றும் பஹ்ரா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படும் என மக்கா கல்வித்துறை முன்னதாக அறிவித்திருந்தது. நாளை பிற்பகல் 3 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை…

மேலும்...
சவூதியில் உம்ரா விசா மீண்டும் தொடக்கம்!

சவூதியில் வெளிநாட்டவர்களின் இக்காமா புதுப்பித்தல் மற்றும் ரீ என்ட்ரி விசா கட்டணம் சில மாறுபாடுகள்!

ரியாத் (01 ஜன 2022): சவூதி அரேபியா அரசாங்கத்தின் இகாமா மற்றும் ரீ என்ட்ரி கட்டணம் தொடர்பான முடிவுகளில் வெளிநாட்டவர்களுக்கு சில மாறுபாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்களுக்கு ரீ-என்ட்ரி விசா நீட்டிப்பு மற்றும் இகாமா புதுப்பித்தல் ஆகிய கட்டணங்கள் இரட்டிப்பாகும் என்பது புதிய தகவல் இதனை சவூதி அரேபிய முக்கிய ஊடகங்களான சவூதி கெசட், அல்மதீனா உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி வெளிநாட்டவர் சவுதி அரேபியாவில் இருந்தால், மறு நுழைவு கட்டணம் இரண்டு மாதங்களுக்கு 200 ரியால். ஒவ்வொரு…

மேலும்...

சவூதியின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ரியாத் (29 டிச 2022): சவுதி அரேபியாவின் பல்வேறு மாகாணங்களில் நாளை முதல் மழை பெய்யும் என தேசிய வானிலை மையம் கணித்துள்ளது. இடி மின்னலுடன் கூடிய கனமழையால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும். கடலோரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை, தூசி நிறைந்த காற்று மற்றும் உயரமான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மக்கா,…

மேலும்...

சவூதியில் பசுமை ரியாத் திட்டத்தின் மூலம் அதிக மரங்கள் நட முடிவு!

ரியாத் (28 டிச 2022): ரியாத்தில் விரிவான மர வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கிரீன் ரியாத்’ என்கிற இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 6,23,000 மரங்கள் நடப்படுகின்றன. தோட்டங்கள், பள்ளிகள், மசூதிகள் மற்றும் 78 வாகன நிறுத்துமிடங்களில் மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளன. சர்வதேச தரத்தில் 120க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இம்மாதம் 29ம் தேதி முதல் ஜனவரி…

மேலும்...

சவூதியில் ஆன்லைன் மூலம் வாகனம் பழுதுபார்க்கும் அனுமதி!

ரியாத் (28 டிச 2022): விபத்துக்குள்ளான வாகனத்தை பழுதுபார்ப்பதற்கான அனுமதியை ஆன்லைனில் பெறுவதை சவுதி அரேபியா எளிதாக்கியுள்ளது. வாகன பழுதுபார்ப்பு அனுமதியை அப்ஷர் இயங்குதளம் போர்டல் மூலம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் அதிகமான சேவைகளை மின்னணுமயமாக்குவதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்து வாகனங்களை பழுதுபார்ப்பதற்கான அனுமதிகள் இனி அப்ஷர் இயங்குதளம் மூலம் வழங்கப்படும் வசதியைப் பயன்படுத்தி, அதில் உள்ள மூன்று படிகளை முடிக்க வேண்டும் என்று அப்ஷர் சேவைத் துறை தெரிவித்துள்ளது….

மேலும்...

சவூதியில் பனிப்பொழிவு – வெப்ப நிலையில் மாற்றம்!

ரியாத் (27 டிச 2022): சவுதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பிரதேசங்களில் வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளது. சவூதி அரேபியாவின் வடக்கு எல்லையில் உள்ள ஜபல் அல்-லூஸ், அலகான் அல்-தார், அரார், துரைஃப், அல்-ஹசம், அல்-ஜலாமித் உள்ளிட்ட தபூக் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அல் ஜூஃப் மாகாணத்தில் உள்ள குராயத் பகுதியிலும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு…

மேலும்...

இந்தியா – சவுதி வர்த்தகம் அதிகரிப்பு!

ரியாத் (27 டிச 2022): இந்தியா – சவுதி வர்த்தகம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் 67 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை சவுதி அரேபியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளாக கருதப்படுகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் இறுதி வரையிலான பத்து மாதங்களில் சவூதி-இந்திய வர்த்தகம் 16,820 கோடி ரியாலாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சவுதி அரேபியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு இதே…

மேலும்...

சவூதி பாலைவனத்தில் திக்கற்ற நிலையில் சிக்கித்தவித்த 35 இந்தியர்கள் மீட்பு!

ரியாத் (26 டிச 2022): சவூதி அரேபியாவில் பாலைவனத்தில் திக்கற்ற நிலையில் பரிதாபமாக வாழ்ந்த 35 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.ன் சமூக ஆர்வலர்களும், இந்திய தூதரகமும் இணைந்து முப்பத்தைந்து இந்தியர்களை மீட்க வழிவகை செய்தது. மீட்கப்பட்டவர்களில் 31 பேர் சட்டப்பூர்வ நடைமுறைகளை முடித்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். மீதமுள்ள 3 பேர் விரைவில் இந்தியா அனுப்படவுள்ளனர். ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். 35 பேரும் கத்தாரில் வேலை வாய்ப்பு விசாவில் கத்தாருக்கு வந்துள்ளனர். பின்னர் ஸ்பான்சர் சவுதிக்கு விசிட் விசாக்களை…

மேலும்...

சவூதியில் அதிகரிக்கும் உள் நாட்டு சுற்றுலா பயணிகள்!

ரியாத் (26 டிச 2022): சவுதி அரேபியாவில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுற்றுலாத்துறையின் புதிய திட்டங்களால் வெளிநாடுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இதுவரை, 32 மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் சவுதியில் உள்ளா சுற்றுலா இடங்களுக்குச் சென்றுள்ளனர். 2015ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு சவூதி அரேபியாவில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 37 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 64 மில்லியன் சுற்றுலாப்…

மேலும்...

ஹஜ், உம்ரா வழிகாட்டி – விழிப்புணர்வு திரைப்படம்!

ரியாத் (23 டிச 2022): சவுதி அரேபியாவுக்கு வரும் ஹஜ் உம்ரா யாத்ரீகர்களுக்கான விழிப்புணர்வு திரைப்படத்தை ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இப்படம் ஒன்பது மொழிகளில் வெளியானது. சவுதி ஏர்லைன்ஸின் விமானங்களில் இப்படம் திரையிடப்படவுள்ளது. ஹஜ் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு படத்தின் பெயர்  ‘ரிஹ்லத்துல் உம்ர்’. என அழைக்கப்படும். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் யாத்ரீகர்களுக்கு ஹஜ் மற்றும் உம்ரா பற்றி அறிவூட்டுவதே இதன் நோக்கமாகும். ஜெனரல் வக்ஃப் அத்தாரிட்டி மற்றும் சவுதி…

மேலும்...