திமுகவில் சங்கமமாகும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்!

சென்னை (17 ஜூலை 2021): ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். அரசியலிலிருந்து விலகிய ரஜினி ரஜினி மக்கள் மன்றத்தையும் கலைத்தார். இதையடுத்து சில நிர்வாகிகள் ரசிகர் மன்றத்திலிருந்து விலகினர். அதன் தொடர்ச்சியாக, மாரியம்மாள் (திண்டுக்கல்), சத்யா செல்வராஜ் (கடலூர்), விஜய லட்சுமி ரோபர்ட் (காஞ்சிபுரம்), அமுதா (தஞ்சாவூர்), கவிதா (திருவண்ணாமலை), கீதா கலைவாணி (கோயம்புத்தூர்), யமுனா (விழுப்புரம்), சத்யா மகாலட்சுமி (திருவள்ளூர்), பிரேமா (நீலகிரி), இன்பவள்ளி (மதுரை) ஆகிய…

மேலும்...
Durai Murugan

பாஜக எம்.எல்.ஏக்களை சந்தித்த துரைமுருகன் – நாங்க எல்லாரும் ஒன்றுதான் என்று பதில்!

புதுடெல்லி (07 ஜூலை 2021): டெல்லியில் அமைச்சர் துரைமுருகனை தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏக்கள் சந்தித்த நிலையில், “தமிழ்நாட்டைவிட்டு தாண்டினால் எல்லாம் ஒன்றுதான்” என தெரிவித்துள்ளார். அண்மையில் தென்பெண்ணை ஆற்றின் மார்க்கண்டேய நதி குறுக்கே கர்நாடக அரசு கட்டியிருந்த யார்கோல் அணை விவகாரம் மற்றும் மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்தார். இது விவாதத்திற்குள்ளான நிலையில், நேற்று (06.07.2021) டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை தமிழ்நாடு நீர்வளத்துறை…

மேலும்...

ஒன்றிய அரசு என அழைக்கலாமா? – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை (01 ஜூலை 2021): ஒன்றிய அரசு என சொல்வதற்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “திமுக புதிய அரசாங்க பொறுப்பேற்ற பின்பு இந்திய அரசை “ஒன்றிய அரசு” என்று கூறிவருகிறது மேலும் இவ்வாறு அழைப்பதை ஊக்கப்படுத்துகிறது. ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறானது. இந்திய தேசிய இறையாண்மைக்கு எதிரானது…

மேலும்...

டிவிட்டரில் கோரிக்கை வைத்த பெண் – செயல்படுத்திய அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

சென்னை (27 ஜூன் 2021); டிவிட்டரில் ஒரு பெண் வைத்த கோரிக்கையை உடனடியாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் வசிக்கும் ஜோசபின் ரம்யா என்னும் இளம்பெண் அவரது ட்விட்டர் பதிவில் தனது தோழியின் சகோதரி உயிரிழந்து விட்டதால் உடனடியாக அவரது பெற்றோர்களை அமெரிக்கா அனுப்பி வைக்க உதவி செய்ய வேண்டும் என்று கூறி அமைச்சர் செஞ்சி மஸ்தானை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதைக் கண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், அந்தப்…

மேலும்...

தமிழ் நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது திமுக – எச்.ராஜா!

காரைக்குடி (27 ஜூன் 2021): ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்று இல்லாதது தமிழகத்த்திற்கு தலைகுனிவு என்று பாஜக முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எச் .ராஜா, “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் தேசியத்தையே கேள்வி கேட்கும் பேச்சுகள் அதிகரித்துள்ளன. எம்எல்ஏ ஈஸ்வரன் சட்டப்பேரவையில், ‘ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்று இல்லாதது தமிழகமே தலைநிமிர்ந்தது,’ என்றார். இதுபோன்ற தலைகுனிவு வேறில்லை. தமிழகத்தின் செண்பகராமன் பிள்ளை தான் ஜெய்ஹிந்த் என்று முன்மொழிந்தார்….

மேலும்...

சிறு துரும்பையும் பூதாகரமாக்கி விமர்சிப்பார்கள் – ம.செ க்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை (26 ஜூன் 2021): சென்னை அறிவாலயத்தில் நேற்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தொடர்பாக நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. ஸ்டாலின் இக்கூட்டத்தில் பேசிய போது, சட்டமன்றத் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. ஆனாலும் ஆட்சியைப் பிடித்து விட்டோம் அடுத்த தேர்தலில் இமாலய வெற்றி பெறும் அளவிற்கு மாவட்ட செயலாளர்கள் மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் அவர்…

மேலும்...

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

சென்னை (24 ஜூன் 2021): தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் பல ஊழல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதற்குப் பிறகு கடந்த இரு நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டு பேசினர். அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினர். கூட்டத்தொடரின்…

மேலும்...

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து மெகா கூட்டணி – திமுக பங்கேற்பதாக தகவல்!

புதுடெல்லி (22 ஜூன் 2021): வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து மெகா கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த 15 கட்சிகளுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இதில் திமுக பங்கேற்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் இருமுறை சந்தித்து விதித்துள்ளனர். இதில் நேற்றைய சந்திப்பில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியை பிரதமர்…

மேலும்...

இதைத்தான் எதிர் பார்த்தோம் – திமுக அரசை கொண்டாடும் மக்கள்!

சென்னை (18 ஜுன் 2021): கொரொனா தொற்று குறையாத 11 மாவட்டங்களில் இலவச உணவு திட்டம் தொடரும் என்று தமிழ்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இப்போதுகூட கொரோனா தொற்று அதிகமாகிவிட்ட நிலையில், யார் கையிலும் காசு இல்லாத நிலையில், இந்த உணவு திட்டம் பேருதவியாகி கொண்டிருக்கிறது.. அதற்கான முன்னெடுப்பை திமுக அரசு கையில் எடுத்துள்ளது.. ஏற்கனவே ரேஷன் அட்டைகளுக்கு 4000 ரூபாய், மளிகை பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல, மற்றொருபக்கம் அறநிலைய துறை சார்பாகவும், கோயில்கள் மூலம் உணவு…

மேலும்...

திமுக அரசின் முடிவுக்கு பாஜக வரவேற்பு!

சென்னை (14 ஜூன் 2021): பெண்களை கோயில் அர்ச்சகர்களாக நியமிக்க திமுக அரசு எடுத்த முடிவை தமிழக பாஜக வரவேற்றுள்ளது. முன்னதாக இந்து மதத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் முடிவை தமிழக பாஜக தலைமை வரவேற்றது. இந்நிலையில் பெண்களை கோயில் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பெண்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆர்வமுள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்...