ஈரானில் இரட்டை நிலநடுக்கம் – துபாயில் கட்டிடங்கள் குலுங்கின!

துபாய் (14 நவ 2021): ஈரானில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தை அடுத்து துபாயில் சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகம் துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா மற்றும் அபுதாபியில் வசிப்பவர்கள் “இரண்டு முதல் மூன்று நிமிடங்கள்” நீடித்த நடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பல கட்டிடங்கள் காலி செய்யப்பட்டன. ஜுமைரா லேக் டவர்ஸ், நஹ்தா, டெய்ரா, பர்ஷா, துபாய் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பார்க் மற்றும் டிஸ்கவரி கார்டன்ஸ் போன்ற சமூகங்களில்…

மேலும்...

மீலாது நபியை முன்னிட்டு துபாயில் இலவச பார்க்கிங் வசதி!

துபாய் (21 அக் 2021): மீலாது நபியை முன்னிட்டு முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவின் சில பகுதிகளில் இலவச பார்க்கிங். மல்டி லெவல் பார்க்கிங் வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை டெர்மினல்களைத் தவிர, பொது பார்க்கிங் இலவசமாக இருக்கும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. சாலை, நீர் போக்குவரத்து மற்றும் சேவை மையங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வெளியில் புறப்படுவதற்கு முன்பு இணையதளத்தில் மறுசீரமைக்கப்பட்ட நேரத்தை சரிபார்க்க வேண்டும்…

மேலும்...

துபாய் வழியாக சவூதி செல்ல இந்தியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

ரியாத் (10 செப் 2021): சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே மீண்டும் விமான சேவை இயக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் தினசரி புக்கிங்குகளை தொடங்கியுள்ளது. கோவிட் பரவலை தடுக்கும் விதமாக சவூதி அரேபியா கடும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது கட்டம் கட்டமாக விமான போக்குவரத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சவூதி துபாய் விமான போக்குவரத்து தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சவூதிக்கு…

மேலும்...

துபாயில் கொரோனாவால் ஒரு மரணம் கூட இல்லாத நாள் இன்று!

துபாய் (03 செப் 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒரு மரணம் கூட நிகழவில்லை என்று சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் ஒவ்வொரு நாடும் தினமும் ஒருவரையாவது இழந்து கொண்டு இருக்கிறது. இந்நிலைய்ல் கடந்த ஆண்டு நவம்பர் 14 அடுத்து துபாயில் கடந்த 24 மணி நேரத்தில், ஒரு கோவிட் மரணம் கூட பதிவாகவில்லை. கடுமையான கோவிட் விதிகள் மற்றும்…

மேலும்...

கர்ப்பிணிப் பூனையின் உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு ரூ 40 லட்சம் பரிசு – VIEDO

துபாய் (28 ஆக 2021): துபாயில் கப்பிணிப் பூனையின் உயிரைக் காப்பாற்றிய நான்கு பேருக்கு தலா 10 லட்சம் வீதம் 40 லட்ச ரூபாய் துபாய் ஆட்சியாளர் மூலம் பரிசாக கிடைத்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் துபாய் தேரா அல் மாரார் பகுதியில் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஆட்கள் செல்ல முடியாத பகுதியில் உள்ளேயும் வெளியேயும் செல்ல முடியாமல் கர்ப்பிணிப் பூனை ஒன்று சிக்கித் தவித்தது. எப்படியாவது உயிர் தப்ப போராடிய அந்த பூணையை…

மேலும்...

இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்பவர்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிய கட்டுப்பாடுகள்

புதுடெல்லி (13 ஆக 2021): ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் இந்தியாவிலிருந்து புறப்படும் பயணிகள் விரைவான பிசிஆர் சோதனை செய்வதற்கு ஏதுவாக குறைந்தது 6 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வரவேண்டும். என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் விரைவான ஆய்வு தொடங்கும். விரைவான சோதனைச் சாவடிகள் விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மூடப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து…

மேலும்...

காலாவதியான துபாய் விசா காலம் நீட்டிப்பு!

துபாய் (12 ஆக 2021): ஐக்கிய அரபு எமிரேட்சீல், வெளிநாட்டவர்களின் காலாவதியான விசா காலம் நவம்பர் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விசா காலாவதியாகி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் நவம்பர் 9 க்குள் துபாய் திரும்ப வேண்டும் என்று விசா சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல எமிரேட்ஸ் இணையதளத்தில் உள்ளபடி, சுற்றுலா விசா வைத்திருப்பவர்களும் துபாய்க்கு வரலாம். அதேபோல வேலை மற்றும் குடியுரிமை விசாக்களுக்கு பொருந்தும் நிபந்தனைகள் சுற்றுலா விசாக்களுக்கும் பொருந்தும் என்று எமிரேட்ஸ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்...

துபாய் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

துபாய் (04 ஆக 2021): ஹிஜ்ரா (முஹர்ரம் 1) புத்தாண்டை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “(முஹர்ரம் 1) புத்தாண்டை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி பொது விடுமுறையாகும். இது பொது மற்றும் தனியார் துறைகளுக்கும் பொருந்தும். தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஒரே நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பை அனுமதிக்க வேண்டும்.” என்று அமைச்சகம்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு சவூதி வரும் இந்தியர்களுக்கு உதவலாம்!

துபாய் (04 ஆக 2021): ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தடை நீக்கம் சவூதி வர காத்திருக்கும் இந்தியர்களுக்கு உதவக்கூடும். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஐக்கிய அரபு அமீரகம் நேற்று நீக்கி உத்தரவிட்டது. இதனால் இந்தியாவிலிருந்து துபாய் வராமல் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். துபாயின் இந்த அறிவிப்பு சவூதி வரும் இந்தியர்களுக்கு உதவக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே கத்தர் வழியாக வரும் இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு ஹோட்டல் கிடைக்காததால் பலர் சிக்கித்தவித்துள்ளனர்….

மேலும்...

துபாய் வாழ் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

துபாய் (27 ஜூலை 2021): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்களுக்கு துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு 17 வகையான வழிமுறைகளை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழிலாளர் சட்டம் குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. மேலும் பணிபுரியும் இந்தியர்கள் அனைவருக்கும் அவசரத் தொலைபேசி எண்கள் இருக்க வேண்டும். பணியிடத்தில் மன மற்றும்…

மேலும்...