அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி – ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் முடிவு!

புதுடெல்லி (16 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களை தாண்டி பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 16 ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டை நோக்கி…

மேலும்...

சென்னையில் ஷஹீன் பாக் – மீடியா ஒன் தொலைக்காட்சியின் முழு கவரேஜ் – VIDEO

சென்னை (16 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை டெல்லி ஷஹீன் பாக்காக மாறியுள்ள நிலையில் சனிக்கிழமை போராட்டக் களத்தை நேர்மையாக செய்தி தந்துள்ளது மலையாள சேனலான மீடியா ஒன் தொலைக்காட்சி. குறிப்பாக பெரும்பாலான எதிர் கட்சிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. குறிப்பாக கட்சி, மத பேதமின்றி அதிமுக, பாஜக தவிர அனைத்து சமூகத்தினரும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதை இப்போராட்டக் களம் காட்டுகின்றது. தமிழக சட்டமன்றத்தில் கேரளா, பஞ்சாபைப் போன்று குடியுரிமை…

மேலும்...

சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் தாக்குதல் – வைகோ எச்சரிக்கை!

சென்னை (15 பிப் 2020): மதிமுகவின் உயர் மட்ட குழு கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைப்பெற்றது. அப்போது முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாசிச கொள்கைகள் தொடர்ந்தால், தமிழகம் முழுவதும் தினந்தோறும் போராட்ட களத்தை சந்திக்க நேரிடும் என மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் குடியிரிமை திருத்த சட்டம், தேசியகுடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை திரும்ப பெற…

மேலும்...

தமிழகத்தை உத்திர பிரதேசமாக மாற்ற அதிமுக திட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

சென்னை (15 பிப் 2020): அமைதி பூங்காவான தமிழகத்தை உத்திர பிரதேசம் போன்று கலவர பூமியாக மாற்ற அதிமுக அரசு திட்டமிட்டு வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடியுரிமைத் திருத்தச் சட்டம்; தேசிய மக்கள்தொகைப் பதிவேடு; தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை…

மேலும்...

ரஜினிக்கு பாஜக இன்னும் ஸ்க்ரிப்ட் ரெடி செய்யவில்லை – ஜவாஹிருல்லா விளாசல்!

சென்னை (15 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க ரஜினிக்கு இன்னும் பாஜக ஸ்க்ரிப்ட் ரெடி செய்யவில்லை என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, டெல்லியில் ஷாகீன் பாக்கில் 2 மாதங்களாக போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் தொடர்…

மேலும்...

தூத்துகுடி துப்பாக்கிச் சூடு – சென்னை வண்ணாரப் பேட்டை தாக்குதல் – கனிமொழி ஆவேசம்!

சென்னை (15 பிப் 2020): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணையில் உள்ள போலீஸ் அதிகாரிதான் சென்னை வண்ணாரப் பேட்டை தாக்குதலின் பின்னணியில் உள்ள கபில்குமார் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று சி.ஏ.ஏ. / என்.ஆர்.சிக்கு எதிராக நடந்த போராட்டங்களை உரிய முறையில், சரியாக கையாண்டிருந்தால் மக்கள் மீதான வன்முறையை தவிர்த்திருக்கலாம். சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ், நிலைமையை…

மேலும்...

சென்னையில் போராட்டத்தின்போது உயிரிழந்தவர் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்!

சென்னை (15 பிப் 2020): சென்னை வண்ணாரப் பேட்டையில் போராட்டத்தின்போது உயிரிழந்தவர் உடலுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று அமைதி வழியில் தொடர் போராட்டத்தை பெண்கள் முன்னெடுத்த நிலையில் அவர்கள் மீது காவல்துறை கொடூரமானத் தாக்குதலை நடத்தியுள்ளது. சென்னை மாநகர காவல்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாக உள்ளது என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. மேலும் நேற்று போலீசார் தடியடி நடத்தியபோது முதியவர்…

மேலும்...

தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக பொதுமக்கள் தொடர் போராட்டம்!

சென்னை (15 பிப் 2020): சிஏஏ வை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், பெண்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து இரவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியை போல் சென்னையில் ஷஹீன் பாக் என்ற பெயரில் பெண்கள் வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட போது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேபோல…

மேலும்...

பிப்ரவரி 14 ஐ கறுப்பு இரவாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை தேவை – ஸ்டாலின் கண்டனம்!

சென்னை (15 பிப் 2020): குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டக் காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய அத்துமீறலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்ல் இது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு கடும் தாக்குதல் நடத்திய எடப்பாடி அரசின் காவல்துறைக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு; கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு அவர்கள் மீதான…

மேலும்...

சென்னை போலீஸ் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நள்ளிரவில் ஆர்ப்பாட்டம்!

சென்னை (14 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து, மக்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டத்தை பெண்கள் முன்னெடுத்த நிலையில் அவர்கள் மீது காவல்துறை கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. சென்னை மாநகர காவல்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் போலீஸ் நடத்திய தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்...