கோவிட் காரணமாக வெளிநாடுகளில் இறந்த தமிழர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை!

அபுதாபி (04 ஜூலை 2021);கோவிட் 19 பாதிப்பால் வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடாவில் இறந்த தமிழர்களுக்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவிடால் இறந்த வளைகுடா கேரளவாசிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கேரளா அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று புகழ்பெற்ற நிறுவனமான லூலூ குழும உரிமையாளர் எம்.ஏ. யூசுப் அலி அபுதாபியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், கோவிட் காரணமாக வெளிநாடுகளில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க உரிமை உண்டு கேரளா…

மேலும்...

கோவிட் காலத்தில் சவுதிக்கு செல்ல முயலும் இந்தியர்களை சிக்கலில் சிக்க வைக்கும் முகவர்கள்!

புதுடெல்லி (04 ஜூலை 2021): விமான தடை காரணமாக சவுதிக்கு செல்ல முடியாத இந்தியர்களை பயண முகவர்கள் சிலர் சிக்கலில் சிக்க வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா சவுதி அரேபியா இடையேயான விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்ப கட்டத்தில், துபாய், மஸ்கட்,பஹ்ரைன் வழியாக சிக்கலின்றி சிலர் சவூதி சென்றனர் . ஆனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததால் இவற்றின் பாதை மூடப்பட்டது. இதனால் இந்தியர்கள் சவுதிக்கு பயணம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது….

மேலும்...

கொரோனா மூன்றாவது அலை எப்படி இருக்கும்? – ஆய்வு தகவல்!

புதுடெல்லி (03 ஜூலை 2021): கொரோனா மூன்றாவது அலை பரவினால், அது கொரோனாவின் முதல் அலைக்கு ஒத்ததாக இருக்கும். அல்லது அதைவிட குறைவானதாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. ஒன்றிய அரசின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிபுணர் குழு நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த மதிப்பீடு அமைந்துள்ளது. கான்பூர் ஐஐடி அகர்வால், ஹைதராபாத் ஐ.ஐ.டி . கனித் கார், வித்யாசாகர் குழுவின் உறுப்பினர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். மூன்றாவது அலையானது நோய்…

மேலும்...

தமிழ்நாடுதான் டாப், டெல்லி, பீகார் படுமோசம் – ஆய்வறிக்கை வெளியீடு!

புதுடெல்லி (03 ஜூலை 2021): கொரோனா 2ஆம் அலையை தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் சிறப்பாக கையாண்டதாகவும், டெல்லி, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மோசமாகக் கையாண்டு உள்ளதாகவும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2ஆம் அலை அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரை கூட சென்றது. அதேபோல தினசரி உயிரிழப்புகளும் நான்காயிரம் வரை கூடச் சென்றது. ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாக…

மேலும்...

கோவேக்சின் 77.8 சதவீதம் செயல்திறன் கொண்டது – 3 ஆம் கட்ட பரிசோதனை வெளியீடு!

புதுடெல்லி (03 ஜூலை 2021): கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்படுகிறது என்றும் டெல்டா வைரஸுக்கு எதிராக 65.2% செயல்திறன் கொண்டது என்றும் 3 ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது….

மேலும்...

சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் இடையே விமான போக்குவரத்துக்கு மீண்டும் தடை!

ரியாத் (03 ஜூலை 2021): ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீண்டும் சவுதி அரேபியாவுக்குள் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது. அதேபோல் சவுதியிலிருந்தும் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. கோவிட்டின் மரபணு மாற்றப்பட்ட புதிய வகை வைரஸ்கள் பரவலை அடுத்து, இந்த அறிவிப்பை சவூதி அரேபியா அரசு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு, நாளை (ஜூலை 4, 2021) இரவு 11 மணி முதல் நடைமுறைக்கு வரும்….

மேலும்...

கொரோனா உச்சத்தில் இருந்தபோது இந்தியாவுக்காக அதிகம் பிரார்த்தித்த நாடு பாகிஸ்தான் – ஆய்வு தகவல்!

புதுடெல்லி 02 ஜுலை 2021): இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது ட்விட்டரில் இந்தியாவுக்காக அதிகம் பிரார்த்தித்த நாடு பாகிஸ்தான் என்பதாக அமெரிக்காவில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகம் (சி.எம்.யூ) நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியா கொரோனா இரண்டாவது அலை பாதிப்பிலும், கடுமையான ஆக்ஸிஜன் நெருக்கடியையும் எதிர்கொண்டிருந்த நேரத்தில் #IndiaNeedsOxygen மற்றும் #PakistanStandsWithIndia போன்ற ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருந்தன. இவற்றின் அடிப்படையில், ஏப்ரல் 21 முதல் மே 4 வரையிலான இதுபோன்ற 300,000 க்கும்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை!

துபாய் (02 ஜுலை 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வசிக்கும் குடிமக்கள், இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப் பட்டுள்ளது. விடுமுறைக் காலங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகரித்து வருவதால் இந்தியா மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, வியட்நாம், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட 14 நாடுகளுக்குச் செல்ல ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு…

மேலும்...

12 மாம்பழங்களை ரூ.1.2 லட்சத்திற்கு விற்று ஆச்சரியப்படுத்திய ஏழைச் சிறுமி!

ஜார்கண்ட் (30 ஜூன் 2021): ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட் போன் இல்லாத ஏழை சிறுமியிடம் வெறும் 12 மாம்பழங்களை ரூ.1.2 லட்சத்திற்கு வாங்கி போன் வாங்க உதவி புரிந்துள்ளார் தொழிலதிபர் ஒருவர். கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டு அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாணவர்கள் ஸ்மார்ட் போனில் வகுப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஜார்கண்டின் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி துளசி குமாரி, ஆன்லைன் மூலம் படிக்க ஸ்மார்ட்போன் இல்லாமல்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகம் – 5 நாடுகளுக்கான பயணத் தடை ஜூலை 21 வரை நீட்டிப்பு!

துபாய் (30 ஜூன் 2021): ஐக்கிய அரபு அமீரகம் 5 நாடுகளுக்கான பயணத் தடையை ஜூலை 21 வரை நீட்டித்துள்ளது. எதிஹாத் ஏர்வேஸை மேற்கோள் காட்டி கலீஜ் டைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இந்த தடை பொருந்தும். பயணிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் எதிஹாத் ஏர்வேஸ் தனது டிவிட்டரில் இதனை தெரிவித்துள்ளது.

மேலும்...