கொரோனாவின் கோர முகம் – மகனும் தாயும் மரணம்!

கடலூர் (12 ஆக 2020): கொரோனா பாதிப்பால் மகன் இறந்த அதிர்ச்சி காரணமாக தாயும் இறந்த சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் டானா கார தெருவில் வசித்து வரும் கலியமூர்த்தி – மீனாட்சி தம்பதிகள். இவர்களின் மகன் சூரியகுமார். வயது 50. இவருக்கு கலா (வயது 45) என்ற மனைவியும், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இவர் காட்டுமன்னார்கோவில் செட்டியார் ரோட்டில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப்…

மேலும்...

முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!

மாஸ்கோ (11 ஆக 2020): முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை பொதுமக்களுக்கு இடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். பல்வேறு கட்ட சோதனைகள் முடிந்துள்ள நிலையில் இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும் அறிவித்துள்ள புதின், இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டதாக புதின் கூறுகிறார். தனது மகளுக்கு முன்பே இந்த தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும்…

மேலும்...

முன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

புதுடெல்லி (10 ஆக 2020): முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவரது ட்விட்டரில் கூறியிருப்பதாவது; “உடல் பொதுவான சோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த நிலையில் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் “கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு…

மேலும்...

அமித்ஷாவின் கொரோனா ரிசல்ட்? – வெளியான பரபரப்பு தகவல்!

புதுடெல்லி (09 ஆக 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா நெகட்டிவ் என செய்தி வெளியான நிலையில், இரண்டொரு நாளில் கொரோனா மறு பரிசோதனை செய்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன.. பாஜக எம்பி மனோஜ் திவாரி, வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார் என்றும், பரிசோதனையில் நெகடீவ் என வந்ததாக கூறியிருந்தார். இது பாஜகவினரையும், அவரது குடும்பத்தினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதற்கிடையே அடுத்த இரண்ரொரு நட்களில் அமித்ஷாவுக்கு கொரோனா…

மேலும்...

சென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்!

சென்னை (09 ஆக 2020): சென்னை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக கொரோனா பாதிப்பு குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக .பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஜூலை 5ம் தேதி நிலவரப்படி, சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் இருக்கும் தெருக்களின் எண்ணிக்கை 8,402 ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் 7ம் தேதி, இது 513…

மேலும்...

திருமாவளனின் மூத்த சகோதரி கொரோனா பாதிப்பால் மரணம்!

சென்னை (05 ஆக 2020): கொரோனா நோய்த் தொற்று காரணமாகப் பாதிப்பிற்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவனின் மூத்த சகோதரி பானுமதி உயிரிழந்தார். பானுமதிக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பானுமதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பானுமதி, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இந்த செய்தி விடுதலை சிறுத்தைகள்…

மேலும்...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (02 ஆக 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது ட்வீட்டர் பதிவில் “கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகளைப் அறிந்தவுடன், நான் சோதனை செய்து கொண்டபோது அதில் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது எனது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும்...

இந்தியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா!

புதுடெல்லி (02 ஆக 2020): இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு 20க்கும் மேற்பட்ட நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் அதன் தாக்கம் உச்சகட்டத்தில் இருந்து வருகின்றது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,95,988லிருந்து 17,50,723ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,95,647லிருந்து 11,46,879ஆக உள்ளது. கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511லிருந்து 37,403 ஆக அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளான…

மேலும்...

மிகுந்த கட்டுப்பாடுகளுடனும் சமூக இடைவெளியுடனும் தொடங்கியது ஹஜ் 2020!

மக்கா (30 ஜூலை 2020): கொரோனா பரவலால் இவ்வருடம் நடைபெறுமா? என்ற கேள்விக்குறியுடன் இருந்த ஹஜ் யாத்திரை மிகக்குறைந்த ஹஜ் யாத்ரீகர்களுடன் மிகுந்த கட்டுப்பாடுகளுடனும், சமூக இடைவெளியுடனும் தொடங்கியது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 4 மாதங்களாக இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவில் வழிபாடுகளுக்கு பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. இவ்வருட உம்ராவும் மார்ச் மாதம் இடையில் நிறுத்தப்பட்டது. எனவே இவ்வருடம் ஹஜ்ஜும் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. எனினும் இவ்வருடம் மிகக்குறைந்த யாத்ரீகர்களுடன்…

மேலும்...

கொரோனா பாசிட்டிவ்: வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள நிபந்தனையுடன் மாவட்ட ஆட்சியர் அனுமதி!

தஞ்சாவூர் (29 ஜுலை 2020): கொரோனா பாசிட்டிவ் என உறுதியானாலும், அவரவர் வீட்டிலேயே நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக வல்லம் மற்றும் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள குடிசை மாற்று…

மேலும்...