தமிழகத்தில் ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா – 49 பேர் மரணம்!

சென்னை (18 ஜூன் 2020): தமிழகத்தில் இன்று 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,334ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக இன்று 2 ஆயிரத்தைத் தாண்டி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று சென்னையில் மட்டும்…

மேலும்...

மிகவும் கஷ்டப்பட்டேன் – நீங்கள் பாதுகாப்பாக இருங்கள்: ரசிகர்களுக்கு ஷாஹித் அஃப்ரிடி கோரிக்கை!

இஸ்லாமாபாத் (18 ஜூன் 2020): “கொரோனா வைரஸின் தாக்கத்தால் மூன்று நாட்கள் மிகவும் கடினமாக உணர்ந்தேன். தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.” என்று பாகிஸ்தான் அதிரடி வீரர் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள ஷாஹித் அஃப்ரிடி மீது பரவிய வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் உணவின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ என் குழுவுடன் உதவி செய்து வந்தபோதே என்னையும் கொரோனா தாக்கும் என்று…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் பரிதாபம் – இறந்த கொரோனா நோயாளியின் இறுதிச் சடங்கில் அஜாக்கிரதை!

காசியாபாத் (18 ஜூன் 2020): உத்திர பிரதேசம் காசியாபாத்தில் கொரோனா வைரஸால் இறந்த ஒரு நபரின் உடல், தகனத்தின் போது மின்சார தகனம் செயலிழந்த்தால் உடல் பாதி எரிந்து அநாதையாக கிடந்துள்ளது. 58 வயதான தொழிலதிபர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடல் காசியாபாத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்ய திங்கள் கிழமை காலை 11 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடல் தகனம் செய்யப்படும்போது நடுப்பகுதியில் தகனம் செய்யும் எந்திரம் வேலை செய்யவில்லை….

மேலும்...

முதலில் நெகட்டிவ் தற்போது பாஸிட்டிவ் – அமைச்சரை தாக்கிய கொரோனா வைரஸ்!

புதுடெல்லி (17 ஜூன் 2020): டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் உச்சத்தில் இருந்து வருகிறது. தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் விட அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை நெருங்கி விட்டது. அது மட்டுமின்றி இந்தியாவில் கொரோனாவால் சுமார் 10,000 பேர் வரை பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா…

மேலும்...

முதல்வர் எடப்பாடியின் தனிச்செயலர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் மரணம் – அதிர்ர்சியில் முதல்வர்!

சென்னை (17 ஜூன் 2020): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தனிச்செயலர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலகத்திலுள்ள முதல்வர் அலுவலகத்தில் தனிச் செயலாளராக பணியாற்றி வந்தவர் தாமோதரன். அந்த வகையில் அலுவலக ரீதியாக முதல்வர் தலைமைச் செயலகம் செல்லும்போது அடிக்கடி நேரடியாக சந்திப்பவர்களில் இவரும் ஒருவர். முதல்வரை சந்திக்க வருபவர்களை அழைத்து வருவது உள்ளிட்ட பணிகளை தாமோதரன் கவனித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாமோதரனுக்கு…

மேலும்...

கொரோனா வைரஸ் இறப்பை கட்டுப்படுத்தும் டெக்ஸாமெதாசோன் – மகிழ்ச்சியான தகவல்!

லண்டன் (17 ஜூன் 2020): டெக்ஸாம்தாசோன் என்னும் மருந்து வகை கொரோனா வைரஸ் இறப்பை மூன்றில் ஒன்றாக குறைத்துள்ளதாக ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்த தகவல் மருத்துவ உலகில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், இந்த ஆய்வு ஒரு பெரிய, கடுமையான சோதனையாகும். இது 2,104 நோயாளிகளை தோராயமாக மருந்து பெற நியமித்தது மற்றும் 4,321 நோயாளிகளுக்கு வழக்கமான கவனிப்பை மட்டுமே அளிக்கிறது. மருந்து வாய்வழியாகவோ…

மேலும்...

ஹெல்ப்குரூப் திருவை சார்பில் மலைவாழ் கிராமங்களுக்கு அத்திவாசிய உதவி!

திருவை (16 ஜூன் 2020): ஹெல்ப்குரூப்திருவை சார்பில் பரளியாறு, வாழயத்து வயல், கீரிப்பாறை, பால்குளம் போன்ற பகுதிகளில் வாழும் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்களின் 355 குடும்பங்களுக்கு  ரூபாய் 2,48,500(இரண்டு லட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து ஐந்நூறு) மதிப்பிலான மளிகை பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது மேலும் மலைவாழ் கிராமங்கள் புறத்தி மலை , வெள்ளருக்கு மலை, வட்டப்பாறை, போன்ற கிராமங்களுக்கு 90 குடும்பங்களுக்கு ரூபாய் 63,000/-செலவில் மளிகை பொருட்கள் அடங்கிய kit வழங்கப்பட்டது.மேலும் அனைத்து குடும்பங்களுக்கும் முகக்கவசம்…

மேலும்...

இதுதான் குஜராத் மாடல் – கொரோனா உயிரிழப்பு அதிகம் குஜராத்தில்தான்: ராகுல் காந்தி!

புதுடெல்லி (16 ஜூன் 2020): நாட்டில் குஜராத் மாநிலத்திலேயே கொரோனா உயிரிழப்புகள் அதிகம் காணப்படுகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜக குஜராத் மாடலை முன்வைத்தே பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியை கைபற்றியது. ஆனால் பல விவகாரங்களில் குஜராத்தின் உண்மை முகம் அம்பலப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு அதிகம் குஜராத்தில்தான் என்று ராகுல் காந்தி புள்ளி விவரங்களுடன் விவரித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில்…

மேலும்...

தப்லீக் ஜமாத்தினர் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

மதுரை (16 ஜூன் 2020): வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் அவரவர் நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா விசா மீறல், உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதான 31 தப்லீக் ஜமாத்தினருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம். அவர்கள் அனுபவித்த தண்டனை காலமே அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதுமானது என கூறி அவர்களை அவரவர்கள் நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வங்கதேசம், இந்தோனேசியா…

மேலும்...

நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை – ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை (16 ஜூன் 2020): கொரோனா பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணாவிட்டால் திமுக நீதிமன்றத்தை நாடும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் அடங்காமல் மேலும் பரவி வருகிறது. தமிழகத்தில் மே 31ம் தேதிவரை அதாவது 71 நாட்களில் 176 பேர் இறந்திருக்கிறார்கள். அடுத்த 15 நாட்களுக்குள் மட்டும் 259 பேர் இறந்திருக்கிறார்கள். இதனைப் பார்த்து மாநில அரசாங்கத்துக்கு…

மேலும்...