வளைகுடா நாடுகளுக்கு வருகிறது புதிய போக்குவரத்து சட்டம்!

குவைத் (31 ஆகஸ்ட் 2025): வளைகுடா (GCC) நாடுகளில் வாகனங்களில் பயணம் செய்வோருக்கான போக்குவரத்து விதிமுறை மீறல்களை ஒருங்கிணைக்கும் திட்டம் 95% நிறைவடைந்துள்ளது. இதற்கான புதிய போக்குவரத்து சட்டம் பற்றி GCC பொதுச் செயலாளர் ஜாஸிம் முகம்மது அல்-புதைவி அறிவித்துள்ளார். சமீபத்தில் குவைத் நாளிதழான அல் கபாஸ்க்கு இவர் அளித்த நேர்காணலில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் GCC நாடுகளுக்கு இடையே நிகழும் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் உடனடியாக தவறிழைத்தவருக்கு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். (இந்நேரம்.காம்) இதுநாள்…

மேலும்...
தீப்பிடித்து எரிந்த லாரியை அகற்றியவருக்கு ரூ. 22.3 கோடி ரூபாய் பரிசு!

தீப்பிடித்து எரிந்த லாரியை அகற்றியவருக்கு ரூ. 22.3 கோடி ரூபாய் பரிசு!

ரியாத் (22 ஆகஸ்ட் 2025):  பெட்ரோல் ஸ்டேஷனில் தீப்பிடித்து எரிந்த லாரி-யைத் துணிச்சலுடன் அகற்றி, மிகப் பெரும் விபத்தைத் தவிர்த்தவரைப் பாராட்டி, சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் ரூ. 22.3 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையை பரிசாக அளித்துள்ளார். ரியாதிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமம் அல்-சாலிஹியா (Al-Salihiya). கடந்த வெள்ளிக்கிழமை (15 ஆகஸ்ட் 2025) அன்று அல் சாலிஹியா பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் ஸ்டேஷனில், மாடுகளுக்கான தீவனம் ஏற்றிச் சென்ற லாரி…

மேலும்...

GCC நாடுகளில் பணிபுரிபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

குவைத் (10 ஆகஸ்ட் 2025):  வளைகுடா (GCC) நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. குவைத் நாட்டிற்குச் செல்ல இனி தனியே விசா எடுக்கத் தேவையில்லை.  “ஆன் அரைவல்” விசா மூலம் இனி எவரும் குவைத்திற்கு எளிதாகச் செல்லலாம். சுற்றுலா செல்வோரும் இந்த விசாவை பயன்படுத்திக் கொள்ளலாம் என குவைத் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை, குவைத் நாட்டின் முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரான ஷேக் ஃபஹத் யூசுப் சவுத் அல்-சபாஹ் அறிவித்துள்ளார். குவைத் நாடு…

மேலும்...

புகைப்படத்தைப் பரப்பினால், ஒரு லட்சம் ரியால் அபராதம்!

தோஹா (05 ஆகஸ்ட் 2025):  முன் அனுமதி பெறாமல் ஒருவரின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இணையத்தில் பரப்பினால், ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது 100,000 கத்தார் ரியால் அபராதம் (இந்திய ரூபாய் மதிப்பில் 23.5 லட்சம்) விதிக்கப்படும் என கத்தார் நாடு அறிவித்துள்ளது. இதற்குரிய சட்டத் திருத்தங்களை இன்று கத்தார் அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இது சைபர் குற்றமாகக் கருதப்படும் என்றும் அறிவித்துள்ளது. கத்தார் நாட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் வருகை தரும் சுற்றுலா பயணிகள், நகரின் பொது…

மேலும்...
சவூதியில் உம்ரா விசா மீண்டும் தொடக்கம்!

சவூதியில் உம்ரா விசா மீண்டும் தொடக்கம்!

இன்று ஜூன் 10 முதல் உம்ரா விசா வழங்குவதை மீண்டும் தொடங்குகிறது சவூதி அரேபியா.  உம்ரா பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன? ஹஜ் யாத்திரிகர்களுக்கு சிறந்த வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்கும் நோக்கில் ஹஜ் பருவத்திற்கு முன்னதாக உம்ரா விசா தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. ஹஜ் 2025 பருவம் முடிவுக்கு வந்ததை அடுத்து, 2025 ஜூன் 10 முதல் உம்ரா விசா வழங்குவதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.  மகிழ்ச்சியான இச் செய்தியை வளைகுடா நாடுகள் உட்பட உலகமெங்கிலும்…

மேலும்...

சவூதியில் தமிழர்களுக்கான அடையாள அட்டை வசதி!

ரியாத், சவூதி (26 ஜூலை 2024): புலம் பெயர்ந்து வசிக்கும் தமிழர்களுக்கான நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது புலம்பெயர் தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கை. இது ஏற்கப்பட்டு, தமிழர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. சவூதி நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்காக இதற்குரிய சிறப்பு முகாமை ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தி வருகிறது. தமிழின் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் கால் நூற்றாண்டுகளாக சேவையாற்றி வரும் அமைப்பு ரியாத் தமிழ்ச் சங்கம். அயலகத் தமிழர்களுக்கான நலவாரியம் தேவை எனும் கோரிக்கையை ரியாத்…

மேலும்...
பிரமிக்க வைத்த ரியாத் தமிழ்ச் சங்க இரத்த தான முகாம்

பிரமிக்க வைத்த ரியாத் தமிழ்ச் சங்க இரத்த தான முகாம்

ரியாத் (20 மே 2024): ரியாத் தமிழ்ச் சங்கம் கடந்த 17/05/2024 வெள்ளிக்கிழமை அன்று நடத்திய நிகழ்ச்சி,  மன்னர் பஹத் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் “உதிரம் கொடுப்போம்! உயிரைக் காப்போம்! ” என்ற திட்டத்தின் கீழ் இரத்த தான முகாம் (குருதிக் கொடை நிகழ்ச்சி) ஒன்றை மிகச் சிறப்பாக நடத்தி பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது. “இரத்ததானம் உயிர்களைக் காக்கும்; இரத்ததான விழிப்புணர்வை அதிகரிப்போம்; தேவைப்படுபவர்களுக்கு பாதுகாப்பான, தரமுள்ள இரத்தம் காலத்தே கிடைப்பதை உறுதி செய்வோம். நாம்…

மேலும்...
மழை வெள்ளத்தால் மூழ்கிய ஓமான் மற்றும் துபாய்!

மழை வெள்ளத்தால் மூழ்கிய ஓமான் மற்றும் துபாய்!

மஸ்கட், ஓமான் (17 ஏப்ரல் 2024):  ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இல் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. ஓமானில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கியதால் இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். விமானங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் பருவ நிலை மாற்றம் காரணமாக அசாதாரண சூழல் நிலவுகிறது. சூறைக்காற்று, புயல், மழை என கடந்த இரு நாட்களாக வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஓமானில், நேற்று 16 ஏப்ரல்…

மேலும்...
பன்மடங்கு ஊதிய உயர்வு தரும் சவூதி - பணியாளர்கள் மகிழ்ச்சி!

சவூதியில் பன்மடங்கு உயர்கிறது ஊதியம் – பணியாளர்கள் மகிழ்ச்சி!

ரியாத் (21 பிப்ரவரி 2024): சவுதி அரேபியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பன்மடங்கு ஊதிய உயர்வு கிடைக்கும் என சவூதியில் என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி எண்ணெயை நம்பியிருக்கும் நாடு ஆகும். சமீப காலமாக எண்ணெய் உற்பத்தியை மட்டுமே நம்பி இராமல் சுற்றுலா, தொழில்துறை மேம்பாடு, உள்நாட்டு தயாரிப்புகள் போன்ற பல்வேறு காரணங்களால் பொருளாதாரத்தை பன்மடங்கு பெருக்கி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனால் திறமையான தொழிலாளர்களுக்கான தேவை சவூதியில் அதிகரித்துள்ளது….

மேலும்...
ஹைடெக் ஸ்டேடியம்

அதிசய வைக்கும் சவூதியின் ஹைடெக் ஸ்டேடியம்!

ரியாத், சவூதி (16 ஜனவரி 2024): ரியாத் அருகே 200 மீட்டர் உயரமுள்ள குன்றின்மீது ஹைடெக் ஸ்டேடியம் அமைக்கிறது சவூதி அரசு. இந்த விளையாட்டு அரங்கத்திற்கான நவீன தொழில்நுட்ப வடிவமைப்பை சவுதி அரேபியா அரசு நேற்று திங்கள்கிழமை வெளியிட்டது. சவூதி அரேபியா நாட்டில் எதிர்வரும் 2034 ஆண்டு உலகக் கால்பந்து கோப்பை விளையாட்டு நடைபெற உள்ளது. இதனைக் காண வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு பிராஜக்ட்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஹைடெக்…

மேலும்...