விடுப்பில் இந்தியா சென்று சவூதி வரமுடியாமல் உள்ளவர்களின் விசாக்காலத்தை செப்டம்பர் 31 வரை நீட்டித்து உத்தரவு!

ரியாத் (17 ஆக 2021): சவூதியிலிருந்து விடுப்பில் ஊர் சென்று திரும்ப வரமுடியாமல் உள்ளவர்களின் விசாக்காலம் செப்டம்பர் 31 வரை புதுப்பிக்கப்படுவதாக சவூதி பாஸ்போர்ட் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் காலாவதியானவர்களின் குடியுரிமை அட்டை, (இக்காமா) காலமும் செப்டம்பர் 31 வரை புதுப்பிக்கப்படுவதாக சவூதி பாஸ்போர்ட் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை அடுத்து, சவுதி அரேபியா இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி விமானங்களை தடை செய்துள்ள நிலையில் அவர்களுக்கு இந்த அறிவிப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, சவுதி…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போடுவதை தவிர்க்க மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது!

ரியாத் (13 ஆக 2021): சவூதியில் ‘தவக்கல்னா’ அப்ளிகேஷனை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். சவூதியில் ‘தவக்கல்னா’ என்ற அப்ளிகேஷன் அனைவருக்கும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் அரசு சார்ந்த பல சொந்த விவரங்கள் அந்த அப்ளிகேஷனில் உள்ளடக்கியிருக்கும். கொரோனா பாதித்தவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டது உறுதி செய்யப்பட்டவை அனைத்தும் அதில் பதிவாகியிருக்கும். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடாமல் இரு டோஸ் தடுப்பூசி போட்டதுபோல் மோசடி செய்ய உதவியதாக சிரியாவை சேர்ந்த இருவரையும்,…

மேலும்...

மீண்டு வரும் சவூதி அரேபியா!

ரியாத் (12 ஆக 2021): சவுதி அரேபியாவில் கடந்த மூன்று நாட்களில் கொரோனா பாதிப்பிலிருந்து அதிக அளவில் குணமடைந்து வருகின்றனர். உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா பல வகையான மரபு மாற்றங்களால் அச்சுறுத்தி வருகிறது. எனினும் தொடக்கத்திலிருந்தே சவுதி அரேபியாவில் ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும் கொரோனா பாதிப்பு, கடந்த மூன்று தினங்களாக பெருமளவில் குறைந்து வருகிறது. மேலும் நேற்று மட்டும் கொரோனா பாதித்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது நேற்று மட்டும் 1389 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா…

மேலும்...

வெளிநாட்டிலிருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் மக்காவிற்கு வர அனுமதி!

மக்கா (10 ஆக 2021): வெளிநாடுகளில் இருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு இன்று முதல் மக்காவில் உம்ரா செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்கள் மக்காவிற்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். சவூதி அரேபியா அனுமதித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் பெற்றவர்கள் ஆன் லைன் மூலம் அனுமதி பெற்று உரிய நடைமுறைகளை பின்பபற்றி உம்ராவிற்கு வரலாம். ஆனால் 12…

மேலும்...

சவூதி அரேபியாவில் சமூக கூட்டங்களுக்கு தொடர்ந்து தடை!

ரியாத் (09 ஆக 2021): சவூதி அரேபியாவில் கோவிட் பரவலை தடுக்கும் ஒரு பகுதியாக சமூக கூட்டங்களுக்கான தடை தொடரும் என்று சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட் பரவலை தடுக்க கடந்த வருடம் முதல் தொடரும் இந்த தடை இப்போது தொடரும் என்று சவூதி சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி திருமண மண்டபங்கள் மற்றும் ஆடிட்டோரியங்கள் போன்ற இடங்களில் கூடும் கூட்டங்கள் அனுமதிக்கப்படாது என்று கூறியுள்ளது. கோவிட் பெருக்கத்திற்கு இத்தகைய கூட்டங்களே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும்,…

மேலும்...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சவூதியில் பள்ளிக்கூடங்களை திறக்க அனுமதி!

ரியாத் (08 ஆக 2021): புதிய கல்வி ஆண்டில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பதாக சவுதி கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவில் பள்ளிகளை மீண்டும் திறக்க அமைச்சகம் தயாராகி வருகிறது. கோவிட் 19 பரவல் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் தற்போது புதிய கல்வியாண்டில் பள்ளிகளை திறக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பள்ளிகளில் காலை கூட்டங்கள் மற்றும் விளையாட்டு…

மேலும்...

சவூதி ஜித்தாவில் இந்தியர் குத்திக் கொலை!

ஜித்தா (05 ஆக 2021): சவூதி அரேபியா ஜித்தாவில் 45 வயது இந்தியர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பூரை சேர்ந்த குஞ்சலவி என்பவர் ஜித்தாவில் வாகனம் ஒன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் நண்பர்கள் சந்தேகம் அடைந்து அவரை தேடியபோது அவர் வாகனத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. இந்நிலையில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் ஒருவரை சவூதி போலீசார் கைது செய்துள்ளனர்….

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு சவூதி வரும் இந்தியர்களுக்கு உதவலாம்!

துபாய் (04 ஆக 2021): ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தடை நீக்கம் சவூதி வர காத்திருக்கும் இந்தியர்களுக்கு உதவக்கூடும். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஐக்கிய அரபு அமீரகம் நேற்று நீக்கி உத்தரவிட்டது. இதனால் இந்தியாவிலிருந்து துபாய் வராமல் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். துபாயின் இந்த அறிவிப்பு சவூதி வரும் இந்தியர்களுக்கு உதவக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே கத்தர் வழியாக வரும் இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு ஹோட்டல் கிடைக்காததால் பலர் சிக்கித்தவித்துள்ளனர்….

மேலும்...

கத்தார் வழியாக சவூதி செல்லும் இந்தியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

தோஹா (04 ஆக 2021): தற்போது சவூதி அரேபியாவிற்கு செல்வோர் நேரடியாக செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே சவூதி அரேபியா பயணத் தடை செய்யாத மூன்றாவது நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்த பின்னரே சவூதி செல்ல முடியும். இந்நிலையில் தற்போது இந்தியர்கள் சவூதி செல்ல வழித்தடமாக கத்தாரை தேர்ந்தெடுக்கின்றனர். அதேவேளை கத்தார் வழியாக வருபவர்கள் கத்தார் மற்றும் சவுதி அங்கிகரித்த இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும். மேலும் கத்தாரில் தங்குவதற்கு ஏஜெண்டுகள் நீண்ட கால…

மேலும்...

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வருட மல்டிபிள் விசா – சவூதி அரேபியா அறிவிப்பு!

ரியாத் (03 ஆக 2021): உலகின் 49 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு வருட மல்டிபிள் விசாவை அறிமுகப்படுத்துகிறது சவூதி அரேபியா. ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவரப்படி, சவுதி அரேபியா உலகம் முழுவதிலுமிருந்து 49 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சவூதி வருவதற்கு அனுமதி வழங்கியது. அதன்படி ஒரு வருட காலத்திற்கு பல நுழைவு மின்னணு (multiple-entry electronic visa )விசாவைப் பெறுவதற்கான அனைத்து நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன, சுற்றுலாப் பயணிகள் 90 நாட்கள் தொடர்ந்து சவூதியில்…

மேலும்...