அவர் விவசாயி கிடையாது விஷ வாயு – எடப்பாடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்!

தஞ்சாவூர் (19 மார்ஷ் 2021): முதல்வர் எடப்பாடி ஒரு போலி விவசாயி அவர் விவசாயி கிடையாது விஷ வாயு என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: டெல்டா விவசாயிகளுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டதாக கூறும் முதல்வர் பழனிசாமியின் நாக்கு அழுகிபோகும். காவிரி உரிமையை மீட்டுக்கொடுத்து 50 ஆண்டுகள் காப்பாற்றியவர் கருணாநிதி….

மேலும்...

எடப்பாடிக்கு எதிராக களமிறங்கிய 50 அதிமுக எம்.எல்.ஏக்கள் – சிக்கித்தவிக்கும் முதல்வர்!

சென்னை (19 மார்ச் 2021): அ.தி.மு.க.,வில், 50 எம்.எல்.ஏ.,களுக்கு, ‘சீட்’ வழங்கவில்லை. இவர்கள் அனைவரும் எடப்பாடிக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். சிலர் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்கு தாவிவிட்டனர். சிலர் அதிமுகவை எதிர்த்து சுயேட்சையாக களம் காணுகின்றனர். சிலர்  தங்களது ஆதரவாளர்களுடன் கட்சிக்குள் இருந்துகொண்டே அதிமுகவை கவிழ்த்த உள் குத்து வேலைகளில் இறங்கிவிட்டனர். சாத்துார் எம்.எல்.ஏ., ராஜவர்மன், உடனடியாக, தினகரன் பக்கம் சாய்ந்தார். அங்கே, ‘சீட்’ வாங்கி, சாத்துாரில் ஆளும் கட்சியை எதிர்த்து நிற்கிறார். வீதி வீதியாக…

மேலும்...

ஒலை குடிசை வீட்டிலிருந்து ஒரு எம்.எல்.ஏ வேட்பாளர்!

திருத்துரைப்பூண்டி (18 மார்ச் 2021): திருத்துரைப்பூண்டி தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த வேட்பாளர் என அறியப்படுகிறார். 49 வயதான மரிமுத்து 1994 முதல் அரசியலில் இருந்து வருகிறார். இவரது சொந்த ஊர் கடவக்குடி என்ற விவசாய கிராமம். ஓலை குடிசையில் வாழும் மாரிமுத்துவின் வீடு கடந்த காஜா சூறாவளியில் சேதமடைந்தது. பழுதுபார்க்கக்கூட முடியாதபடி தார்ப்பாய் மூலம் மட்டுமே வீடு சரிசெய்யப்பட்டு இன்றும் வாழ்ந்து வருகிறார். மாரிமுத்துவின்…

மேலும்...

காங்கிரசின் செயல்பாடுகளால் அதிர்ச்சியில் உள்ள ஸ்டாலின்!

சென்னை (15 மார்ச் 2021): தலைவிரித்தாடும் காங்கிரஸ் கட்சி பூசலால் திமுக கடுமையான அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் பெரிய கட்சியாக கணிக்கப்படும் காங்கிரஸ் தற்போது வலுவிழந்து இருப்பதால் சீட் கொடுப்பதில் ஸ்டாலின் ஆரம்பம் முதலே கறாராக இருந்தார். எனினும் அதிக சீட்டுக்கள் வேண்டும் என்று காங்கிரஸ் பிடிவாதம் காட்டியது. ஒருவழியாக 25 சீட்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சியின் உட்பூசலால்…

மேலும்...

முதல்வரை எதிர்க்கும் வேட்பாளர் தேர்வில் திமுகவினர் படு அப்செட்!

சென்னை (15 மார்ச் 2021): முதல்வர் எட்டப்பாடியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் தேர்வில் திமுகவினர் அப்செட்டாக உள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் எட்டப்பாடியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சம பலமுள்ள வேட்பாளரை திமுக களமிறக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக சம்பத்குமார் என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். பட்டதாரி இளைஞரான சம்பத்குமார் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சேலம் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளராக இருக்கிறார். எனினும், தொகுதியில்…

மேலும்...

நாங்கள் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல – திருமாவளவன் விளக்கம்!

சென்னை (14 மார்ச் 2021): நாங்கள் இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரான கட்சி என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ‘இந்தியா டுடே’ செய்தி நிறுவனம் ‘தென்னிந்தியா 2021’ என்கிற பெயரில் அரசியல் கருத்தரங்கு நிகழ்வை நடத்தி வருகிறது. இந்நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “ஒரே நாடு; ஒரே கலாச்சாரம் என்பதே பா.ஜ.க-வுடைய தேசியவாதம். இந்த ஒற்றைக் கலாச்சார பிரச்சாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது. பன்மைத்துவத்திற்கு எதிரானது. நாங்கள் இந்துக்களுக்கு…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் – ஸ்டாலின் அதிரடி அறிக்கை!

சென்னை (14 மார்ச் 2021): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் போன்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள்” எனக் குறிப்பிட்டு தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 2021 தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள – வாக்குறுதி 43-ல், “விவசாயிகளுக்கு எதிரான சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது” என்பதையும்;…

மேலும்...

திமுக அதிருப்தியாளர்களை அலேக்காக தூக்க பாஜக அதிரடி பிளான்!

சென்னை (14 மார்ச் 2021): சீட் கிடைக்காத திமுக பிரமுகர்களை பாஜக பக்கம் இழுக்க அமித்ஷா திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக இருக்கும் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பாஜக பக்கம் தாவுவது வழக்கமாகி வருகிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி கவிழ இதுவே காரணமாக அமைந்தது. இதனை தமிழகத்திலும் நிறைவேற்ற பாஜக முயன்று வருகிறது. இதற்கு வலுவாக இருக்கும் திமுகவை குறி வைத்து அமித் ஷா காய் நகர்த்தி வருகிறார். திமுகவில் அறிவிக்கப்பட்ட…

மேலும்...

பாஜகவுக்கு தாவி ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக எம்.எல்.ஏ!

சென்னை .(14 மார்ச் 2021): தமிழகத்தில் தேர்தல் பிடித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருந்தது. அதேபோல் நேற்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி இருந்தது. இதில் திமுக எம்.எல்.ஏ சரவணனுக்கு தொகுதி ஒதுக்கப்படாததால் அதிருப்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். 2019 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் மருத்துவர் சரவணன். 2021 சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

மேலும்...

திமுக வேட்பாளர் மீது போட்டி திமுகவினர் கல் வீச்சு!

விருகம்பாக்கம் (12 மார்ச் 2021) : விருகம்பாக்கம் திமுக வேட்பாளர் மீது போட்டி திமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பரபரப்புகளுக்கிடையே இன்று (12.03.2021) திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. திமுகவில் 70 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 20 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலையில் விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளராக விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆதரவு கேட்டு சென்றபோது திமுக நிர்வாகி தனசேகரனின் ஆதரவாளர்கள் பிரபாகர் ராஜா மீது கற்கள்…

மேலும்...