துபாய் ஷாப்பிங் திருவிழா டிசம்பர் 15 ல் தொடக்கம்!

துபாய் (06 டிச 2022): துபாய் ஷாப்பிங் திருவிழா இம்மாதம் 15ம் தேதி தொடங்குகிறது. ஷாப்பிங் திருவிழாவை ஒட்டி, இம்முறையும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன துபாய் ஷாப்பிங் திருவிழா ஜனவரி 15 முதல் ஜனவரி 29 வரை நடைபெறுகிறது. இதில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். இம்முறை மெகா ரேஃபிள் டிரா மூலம் நிசான் பேட்ரோல் கார் மற்றும் 100,000 Dhs ஒவ்வொரு நாளும் வெல்லும் வாய்ப்பு உள்ளது….

மேலும்...

துபாயில் பிச்சை எடுத்தல் மற்றும் சட்டவிரோத வர்த்தகம்; 2100 பேர் கைது!

துபாய் (14 செப் 2022): துபாயில் பிச்சை எடுத்ததற்காகவும் சட்டவிரோதமாக வியாபாரம் செய்ததற்காகவும் 2100 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை துபாய் காவல்துறை வெளியிட்டுள்ளது. இதன்போது, ​​796 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 1,287 சட்டவிரோத வீதி வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். இதில் 414 பேர் போலீஸ் ஐ என்ற மொபைல் செயலி மூலம் சிக்கியுள்ளனர். சட்டவிரோத செயல்கள் கண்டறியப்பட்டால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் வழிமுறை போலீஸ்…

மேலும்...

துபாயிலிருந்து இந்தியா செல்பவர்களுக்கு அறிய வாய்ப்பு!

துபாய் (14 செப் 2022): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்குச் செல்லத் திட்டமிடுபவர்களுக்கு தற்போது நல்ல வாய்ப்பு . விமான நிறுவனங்கள் மிகக் குறைந்த கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இந்தியாவுக்கான விமானக் கட்டணம் 300 திர்ஹம்களுக்குக் கீழே விமான நிறுவனங்கள் வசூலிக்கின்றன. கோடை விடுமுறை முடிந்து டிக்கெட் விலை கணிசமாக குறைந்துள்ளதாக டிராவல் ஏஜென்ட்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தீபாவளியையொட்டி இந்த மாத இறுதிக்குள் கட்டணம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு திரும்புவதற்கான…

மேலும்...

வளைகுடா நாடுகளை அதிர வைத்த திடீர் நில நடுக்கம்!

துபாய்(02ஜூலை 2022):ஈரானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் வளைகுடா நாடுகளில் உணரப்பட்டுள்ளது. சனிக்கிழமை அதிகாலை தெற்கு ஈரானில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின்படி, பந்தர் கமீர் அருகே அதிகாலை 1.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.. இந்த நில நடுக்கம் ஐக்கிய அரபு அமிரகத்திலும் உணரப்பட்டது. துபாய், ஷார்ஜா, உம்முல் குவைன் மற்றும் அஜ்மான் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக…

மேலும்...

முதல்வர் ஸ்டாலினுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கிய பிஎம்டபிள்யூ கார்!

துபாய் (25 மார்ச் 2022): தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு பிஎம்டபிள்யூ கார் வழங்கியுள்ளது. 4 நாள் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தனி விமானம் மூலம் நேற்று சென்று அடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி. இந்த உலகக் கண்காட்சி, துபாய்…

மேலும்...

வீட்டில் ஒரே அறையில் தங்கியிருத்தவரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை!

துபாய்(13 மார்ச் 2022): துபாயில் அறையில் ஒன்றாக தங்கியிருத்தவரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. துபாய் அல்ஐனில் வீட்டில் ஒரே அறையில் தங்கியிருந்த சக நண்பரை கொலை செய்த வழக்கில் 35 வயது ஆப்ரிக்கன் பிரஜைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. உம்முல் குவைனில் மிஸ்டிமெய்னர் நீதிமன்றம் கொலையாளிக்கு மரண தண்டனை விதித்தது. இருவரும் உமுல் குவைனில் அல் ஹம்ரா மாவட்டத்தில் வாடகை வீடு எடுத்து ஒரே அறையில் தங்கி வந்தனர். சொந்த நாட்டை சேர்ந்த…

மேலும்...

உலகின் முதல் காகிதமற்றதாக மாறும் துபாய் அலுவலகங்கள்!

துபாய் (12 டிச 2021): துபாயில் அரசுத் துறை முற்றிலும் காகிதமற்றது என்று துபாயின் பட்டத்து இளவரசரும் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அறிவித்தார். துபாயை டிஜிட்டல் நகரமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக ஷேக் ஹம்தான் 2018 இல் காகிதமில்லா திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் ஐந்து கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. ஐந்தாவது கட்டத்தின் முடிவில், துபாயில் உள்ள 45 அரசுத் துறைகளும் காகிதமற்றவை. இதன் மூலம், இந்த…

மேலும்...

துபாய் மற்றும் சவூதி அரேபியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான் வைரஸ்!

துபாய் (02 டிச 2021): கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் நுழைந்ததை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் உறுதிபடுத்தியுள்ளன. கொரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தற்போது ஒமிக்ரான் என்ற சொல்லைக் கேட்டாலே அச்சமடைந்து வருகின்றன. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மற்றும் வீரியமிக்க வைரசுக்கு ஒமிக்ரான் என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் இது அதி வேகமாக பரவி வரும் நிலையில், சவூதி அரேபியா மற்றும்…

மேலும்...

தீவிர இந்துத்வாவாதி சுதிர் சவுத்ரி துபாய் வருவதை நான் அனுமதிக்க மாட்டேன் – துபாய் இளவரசி கடும் கண்டனம்!

துபாய் (25 நவ 2021): கடும் எதிர்ப்பிற்கிடையே அபுதாபி நிகழ்ச்சியில் தீவிர இந்துத்வாவாதி சுதிர் சவுத்ரி கலந்துகொள்ளவுள்ள நிலையில் துபாய் இளவரசி ஹிந்த் பின்த் ஃபைசல் அல் காசிமி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். வலதுசாரி இந்து அறிவிப்பாளரான சுதிர் சௌத்ரி, இந்தியாவில் உள்ள 200 மில்லியன் முஸ்லீம்களை இலக்காகக் கொண்டு பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரது பல பிரைம் டைம் நிகழ்ச்சிகள் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அபுதாபியில்…

மேலும்...

துபாய் இளவரசி எதிர்ப்பு – அபுதாபி நிகழ்ச்சியிலிருந்து இந்துத்வா கொள்கையாளர் ஜீ நியூஸ் சுதீர் சவுத்ரி நீக்கம்!

துபாய் (22 நவ 2021): துபாய் இளவரசி ஹிந்த் பின்த் ஃபைசல் அல் காசிமின் எதிர்ப்பைத் தொடர்ந்து அபுதாபி நிகழ்விலிருந்து தீவிர இந்துத்வா சிந்தனையாளரும், ஜீ.நியூஸ் தலைமை செய்தியாளருமான சுதிர் சவுத்ரி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வலதுசாரி இந்து அறிவிப்பாளரான சுதிர் சௌத்ரி, இந்தியாவில் உள்ள 200 மில்லியன் முஸ்லீம்களை இலக்காகக் கொண்டு பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரது பல பிரைம் டைம் நிகழ்ச்சிகள் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை ஏற்படுத்தியுள்ளன. – இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்…

மேலும்...