தமிழகம் இதில் இரண்டாவது இடம் – எதில் தெரியுமா?

Share this News:

சென்னை (19 ஜன 2020): தற்கொலை செய்து கொள்பவர்களில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

வேலையில்லாமல் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

இதில் ‘கடந்த 2018-வது ஆண்டில் மட்டும் சுயதொழில் செய்பவர்கள் 13,149 பேரும், வேலையில்லாதவர்கள் 12,936 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் தினம்தோறும் வேலையில்லாதவர்கள் 35, சுயதொழில் செய்வோர் 36 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் விவசாயிகள் 10,349 பேர், வேலை கிடைக்காமல் 12 ,936 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எல்லா காரணிகளுக்காகவும் 2018-ம் ஆண்டில் மகாராஷ்ட்ராவில் 17,972 பேரும், தமிழகத்தில் 13,896 பேர் என மொத்தம் ஒரே ஆண்டில் சுமார் 1.34 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த பட்டியலில் மராட்டிய மாநிலம் (17,972) முதல் இடத்திலும், தமிழகம்( 13,896 ) இரண்டாவது இடத்திலும், மேற்குவங்கம் (13,255 ) மூன்றாவது இடத்திலும், உள்ளன.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *