ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம் அறிவிப்பு!

Share this News:

மாஸ்கோ (05 மார்ச் 2022): உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைனில் ரஷ்யா 10வது நாளாக (மார்ச்.5 ) போர் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா இன்று காலை 11;30 மணி முதல் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் துறைமுக நகரமான மரியுபோல் உட்பட மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் வசிப்பவர்கள் வெளியேற உதவும் வகையில் இந்த போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.

அதேவேளை இந்த போர் நிறுத்தம் ஐந்தரை மணி நேரம் அமலில் இருக்கும் என தெரிகிறது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *