மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு!

Share this News:

மும்பை (28 பிப் 2020): மகாராஷ்டிராவில் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் நவாப் மாலிக் தெரிவிக்கையில், “தற்போதைய சட்டசபை கூட்டத்தொடர் முடிவதற்குள், மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்னர் இது தொடர்பான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என்றார்.

அமைச்சர் நவாப் மாலிக் சிவசேனா கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *