பட்டும் திருந்தாத யோகி ஆதித்யநாத் அரசு – உச்ச நீதிமன்றம் சாடல்!

Share this News:

புதுடெல்லி (12 மார்ச் 2020): அலகாபாத் நீதிமன்றத்தை அடுத்து யோகி ஆதித்யநாத் அரசின் எல்லை மீறிய செயலுக்கு உச்ச நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி பலரது புகைப்படங்களையும், அவர்களது வீட்டு முகவரிகளையும், உத்திர பிரதேசத்தின் பல இடங்களில் யோகி அரசு பதாகைகளாக அமைத்துள்ளது.

இதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், யோகி அரசை கடுமையாகச் சாடியுள்ளது மட்டுமின்றி இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் அநாகரீகமான செயல் என்றும் கண்டித்தது. மேலும் உடனடியாக அந்தப் பதாகைகளை அகற்றும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து யோகி அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. ஆனால் யோகி அரசின் நடவடிக்கையை ஆதரிக்க எந்த சட்டமும் இல்லை என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *