இந்நேரம்

ஷர்ஜீல் இமாம் சிறையில் தொலைத்த நாட்களை யார் திருப்பி கொடுப்பார்? – ப.சிதம்பரம் கேள்வி!

புதுடெல்லி (05 பிப் 2023): ஷர்ஜீல் இமாம் மற்றும் அவரது நண்பர்கள் சிறையில் இழந்த நாட்களை யார் திருப்பி கொடுப்பார்? என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகே வெடித்த வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர் ஷர்ஜீல் இமாம் மற்றும் 10 பேர் தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இது தொடர்பான…

மேலும்...

அதானி குழுமம் மீது விசாரணை நடத்த ஒன்றிய அரசு முடிவு!

புதுடெல்லி (04 பிப் 2023): அதானி குழுமத்திற்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய நிறுவன விவகார அமைச்சகம் இதுகுறித்து விசாரனை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதானியின் நிதித் தகவல்கள் மற்றும் பதிவுகளை அமைச்சகம் ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு இதுவே முதல் விசாரணை. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானாலும், அதானி குழுமத்தை ஒன்றிய அரசு விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதானிக்கு ஒன்றிய அரசு உதவி செய்வதாகவும்…

மேலும்...

பட்டுக்கோட்டை வாலிபர் வெளிநாட்டில் மரணம்!

பட்டுக்கோட்டை (03 பிப் 2023): வெளிநாட்டிற்கு வேலை செய்வதற்காக சென்ற பட்டுக்கோட்டை வாலிபர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். பட்டுக்கோட்டை அடுத்த கொண்டிகுளம் சர்க்கார்தோப்பு பகுதியை சேர்ந்த செல்வம் – கனகாம்பாள் தம்பதியரின் இளைய மகன் கார்த்திக் (வயது 24). இவர் குடும்ப வறுமையின் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மலேசியா விற்கு வேலைக்கு சென்றார். அங்கு கார்த்திக்கிற்கு திடீரென்று உடல்நல க்குறைவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்ட கார்த்திக் சிகிச்சை பலனின்றி…

மேலும்...

அதானி மோசடி விவகாரம் – நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்!

புதுடெல்லி (03 பிப் 2023): அதானி பங்குச்சந்தை மோசடி சர்ச்சையை எதிர்த்து இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு மூலம் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.காங்கிரஸ் எம்.பி.க்கள் ஹைபி ஈடன், டி.என்.பிரதாபன், பென்னி பஹானன் ஆகியோர் லோக்சபாவில் அவசர தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர். அதானி பங்கு சர்ச்சை குறித்து விவாதம் நடத்தக் கோரி ராஜ்யசபாவில் ஏ.ஏ.ரஹீம் எம்.பி நோட்டீஸ் அளித்திருந்தார். ஆனால் அவசர மனு நிராகரிக்கப்பட்டது. இதனால், எதிர்க்கட்சியினர் முழக்கங்களை…

மேலும்...

அதானி குழுமத்துக்கு எஸ்பிஐ வழங்கிய கடன் தொகை எவ்வளவு தெரியுமா?

புதுடெல்லி (03 பிப் 2023): அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததை அடுத்து 6வது நாளாக வீழ்ச்சி அடைந்தது. கடந்த 5 நாட்களில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 41 சதவீதம் அதாவது ரூ.1,338 சரிந்துள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். இதன் விளைவாக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருந்த கௌதம் அதானி 15-வது இடத்திற்கு சரிந்துள்ளார்….

மேலும்...

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை!

புதுச்சேரி (02 பிப் 2023): புதுச்சேரியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று புதுச்சேரி புதுச்சேரி அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டும் சிறார்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ .25 ஆயிரம் அபராதம் – விதிக்கப்டும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சமீப காலமாக அதிகரிக்கும் விபத்துக்களுக்கு சிறார்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

அதானி குழும நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த ரிசர்வ் வங்கி உத்தரவு!

புதுடெல்லி (02 பிப் 2023): அதானி குழும நிறுவனங்கள் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதா? என அறிய விசாரணை நடத்த வேண்டி வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும், அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை…

மேலும்...

பத்திரிகையாளர் சித்தீக் கப்பன் ஜாமீனில் விடுதலை!

புதுடெல்லி (02 பிப் 2023): கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார். 2020ம் ஆண்டு உத்திர பிரதேசம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் சித்திக் கப்பனை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உ.பி.அரசு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தது. உ.பி சிறையிலிருந்து வெளிவந்த பின் சித்திக் கப்பன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “உத்திர பிரதேச அரசு என் மீது பொய்யான வழக்கு…

மேலும்...

சவூதியில் இனி டிஜிட்டல் இக்காமாவை பயன்படுத்தும் வசதி!

ரியாத் (02 பிப் 2023): சவூதி அரேபியாவில் வெளிநாட்டவர்ளுக்கு வழங்கப்படும் அச்சிடப்பட்ட இகாமா அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயமில்லை என்று பாஸ்போர்ட் துறை (ஜவாசத்) தெளிவுபடுத்தியுள்ளது. ஸ்மார்ட் போனில் கிடைக்கும் டிஜிட்டல் இகாமாவைப் பயன்படுத்தலாம். இகாமாவை புதுப்பிக்க மூன்று நாட்களுக்கு மேல் தாமதம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் பாஸ்போர்ட் துறை கூறியுள்ளது மேலும் பாதுகாப்புப் பணியாளர்கள் அல்லது அதிகாரிகளால் இகாமா கோரப்பட்டாலும், இந்த டிஜிட்டல் இகாமாவைக் காட்டினால் போதும். இகாமாவை புதுப்பித்த பிறகு, புதிய பிரிண்ட்…

மேலும்...

அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் – ஆனால் ட்விஸ்ட் இருக்காமே!

ஈரோடு (01 பிப் 2023): அதிமுக இபிஎஸ் அணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவளிப்போம். அவர்கள் வேட்பாளரை…

மேலும்...