இந்நேரம்

மக்கா கிரேன் விபத்து – பின்லேடன் கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

ஜித்தா (15 பிப் 2023) மக்காவில் கிரேன் விழுந்து 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பின்லேடனின் கட்டுமான நிறுவனத்திற்கு 20 மில்லியன் ரியால் அபராதம் விதித்து மக்கா குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கும் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து மக்கா குற்றவியல் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் குழு தீர்ப்பளித்தது. முன்னதாக பின்லேடன் நிறுவனத்தை இந்த வழக்கிலிருந்து விடுவித்த தீர்ப்பை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு கிரேன் விபத்தில்…

மேலும்...

ரகசிய கேமராவில் சிக்கிய பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் சேத்தன்குமார் சர்மா!

புதுடெல்லி (15 பிப் 2023): பிசிசிஐயின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன்குமார் சர்மா தனியார் தேசிய ஊடகம் நடத்திய ரகசிய கேமரா நடவடிக்கையில் சிக்கியுள்ளார். பிசிசிஐ அணிக்கு சேத்தன் சர்மா தேர்வு செய்யும் அணி குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனை அடுத்து அவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் ரோஜர் பின்னி தலைமையில் புதிய நிர்வாகம் வந்தவுடன் எந்தப் பதவியில் இருந்து சேத்தன் சர்மா நீக்கப்பட்டாரோ தற்போது அதே பதவிக்கு வந்துள்ளார் இந்நிலையில்…

மேலும்...

பிபிசி ரெய்டு – ஊடக சுதந்திரம் பாழடிப்பு: ஸ்டாலின் கண்டனம்!

சென்னை (14 பிப் 2023): பிபிசி அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பதிவில் ‘எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்துக்கும், வெளிப்படைத் தன்மையோடும் சுதந்திரமாகவும் செயல்படும் அமைப்புகள் இன்றியமையாதவை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசியல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருபவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்’ என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக…

மேலும்...

22 நாட்களில் அதானி பங்குகள் பாதிக்கு மேல் இழப்பு!

மும்பை (14 பிப் 2023): ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதில் இருந்து அதானி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கௌதம் அதானி தனது நிகர மதிப்பில் சரிவைக் கண்டு வருகிறார். அவரது நிறுவனப் பங்குகள் இன்றும் தொடர்ந்து சரிவை சந்தித்தது. வெறும் 22 நாட்களில் 66 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதானி இழந்துள்ளார். இன்று மதியம் 1 மணி நிலவரப்படி, அதானி கிரீன், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், என்டிடிவி, அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் உள்ளிட்ட பெரும்பாலான அதானி…

மேலும்...

இந்தியாவில் உள்ள பிபிசி அலுவலகங்களில் திடீர் சோதனை!

மும்பை (14 பிப் 2023): மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான பிபிசி ஆவணப்படம் வெளியானதை அடுத்து இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தை மையமாக வைத்து உலக அளவில் பிபிசி நிறுவனம் செய்திகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் இந்தி, தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் தனது சேவையை வழங்கி வருகிறது. இதனிடையே 2002 குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக தலைவிரித்தாடிய வன்முறை தொடர்பாக பிரதமர்…

மேலும்...

திருமண விருந்தில் கறி கிடைக்காததால் ரணகளமான திருமண நிகழ்ச்சி – வீடியோ!

பாக்பத் (14 பிப் 2023): கல்யாண வீட்டில் எப்போது எதற்காக சண்டை வரும் என்று சொல்ல முடியாது. பப்படம் தீர்ந்து போவது, கோழியின் லெக் பீஸ் கிடைக்கவில்லை என பிரச்சனை செய்வது, பிடித்தமான பாடல் ஒலிக்காமல் இருப்பது போன்ற சின்னச் சின்ன பிரச்சனைகளால் சண்டைகள் வரும். இப்படித்தான் உத்திரபிரதேச மாநிலம் பாக்பத்தில் ஒரு சின்ன காரணத்தால் கல்யாண வீடு ரணகளமாகியுள்ளது. திருமண பந்தலில் திருமண விருந்து பரிமாறப்பட்டபோது மணமகன் மாமாவுக்கு கறி கிடைக்காததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த…

மேலும்...

சவூதி அரேபியாவில் தமிழர் மரணம்!

அபஹா (14 பிப் 2023): சவூதி அரேபியா அபஹாவில் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். திருச்சிராப்பள்ளி அரியலூரைச் சேர்ந்த எட்டு வருடங்களாக சவூதியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். விடுமுறை முடிந்து நாட்டிலிருந்து திரும்பி வந்து மூன்றரை வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் அவர் பணிபுரியும் நிறுவனத்தின் இல்லத்தில் மாரடைப்பால் இறந்தார். அபாஹா அசீர் மருத்துவமனை பிணவறையில் உள்ள சடலம் குடும்பத்தினரின் வேண்டுகோளின்படி மேலதிக நடைமுறைகள் முடிந்தபின் வீட்டிற்கு அனுப்பப்படும் என்று ஜித்தா துணைத் தூதரக உறுப்பினர்…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாத சிறுவன் மீது பள்ளி மேலாளர் கொடூர தாக்குதல் – அதிர்ச்சி வீடியோ!

லக்னோ (13 பிப் 2023): த்தரபிரதேச மாநிலம், மேஜா நகரில் கட்டணம் செலுத்தத் தவறியதாகக் கூறி எட்டு வயது சிறுவனை பள்ளி மேலாளர் அடித்து துன்புறுத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட யோகேஷ் குப்தா அவரை ஒரு தடிமனான குச்சியால் அடிக்கும் போது குழந்தை பெஞ்சில் படுத்திருப்பதைக் வீடியோவில் காணலாம். தற்போது குற்றவாளி 28 வயது யோகேஷ் குப்தா என்ற் பள்ளி மேலாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். “இந்த சம்பவம் மூன்று…

மேலும்...

இன்றும் சரிவை சந்தித்த அதானி நிறுவன பங்குகள்!

மும்பை (13 பிப் 2023): சமீபத்தில் உலகின் டாப் 20 பில்லியனர்கள் பட்டியலில் ஒரு இடத்தை இழந்த கௌதம் அதானியின் குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து இரத்தம் வருவதால், இன்று அவரது நிகர மதிப்பு 2.4 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது. இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில், அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் கடுமையாக சரிந்தன. அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு தொடங்கப்பட்ட விற்பனைகள் கௌதம் அதானியின் நிகர மதிப்பில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது….

மேலும்...

இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை – சிறுபான்மை ஆணையத்தில் அதிகரிக்கும் புகார்கள்!

புதுடெல்லி (13 பிப் 2023): நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது. இந்நிலையில் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில், சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தால் பெறப்பட்ட மொத்த புகார்கள் மற்றும் மனுக்களில் 71 சதவீதம் முஸ்லிம் சமூகத்துடன் மட்டுமே தொடர்புடையது. கடந்த ஐந்து ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் இருந்துதான் முஸ்லிம் சமூகம் தொடர்பான அதிகபட்ச புகார்கள் சிறுபான்மை ஆணையத்துக்கு கிடைத்துள்ளன. சிறுபான்மை விவகார அமைச்சின்…

மேலும்...