நாட்டு மக்களுக்கு மோடியின் கடிதம் சொல்வது என்ன?

புதுடெல்லி (30 மே 2020): நாடு முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.65 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதுகுறித்து மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “இந்த நெருக்கடியான காலகட்டத்தில் யாரும் அசாதாரண சூழலை எதிர்கொள்ளவில்லை என கூறிவிட முடியாது. நம் நாட்டின் தொழிலாளர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள், சிறு,குறு உற்பத்தியாளர்கள், கைவினைகலைஞர்கள், வணிகர்கள் என சக இந்தியர்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.“ இந்த நெருக்கடிகள் பேரழிவுகளாக மாறாமல்…

மேலும்...

கொரோனா மரணங்களில் சீனாவை முந்திய இந்தியா!

புதுடெல்லி (29 மே 2020): கொரோனா மரணங்களில் இந்தியா சீனாவை முந்தியுள்ளது. மேலும் உலக அளவில் 9 ஆவது இடத்தில் உள்ளது. உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு தரவரிசையில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளதுடன் இறப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் கடந்த டிசம்பரில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் இது உலகெங்கிலும் உள்ள நாடுகளில் கிட்டத்தட்ட 59 லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பாதித்து உள்ளது. கொரோனா பாதிப்பால் உலகெங்கிலும்…

மேலும்...

வெட்டுக்கிளியின் வருகையை நியாயப்படுத்தி குர்ஆன் வசனத்தை சுட்டிக் காட்டிய முன்னாள் நடிகை!

மும்பை (29 மே 2020): வெட்டுக்கிளியின் வருகை இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில் இதனை நியாயப்படுத்தி குர்ஆன் வசனத்தை சுட்டிக் காட்டி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார் முன்னாள் நடிகை சாய்ரா வசீம். சாய்ரா வசீம் அமீர்கானின் டங்கல் படத்தின் மூலம் பிரபலமானார். ஆனால் ஒரு சில படங்களில் நடித்த நிலையில், சினிமாவிலிருந்து விலகினார். இஸ்லாம் சினிமாவை ஆதரிக்கவில்லை என்றும் அதுகுறித்து அறியாமல் சினிமாவில் நடித்துவிட்டேன் என்றும் கூறி அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டார். சமீபத்தில் வெட்டுக்கிளிகள்…

மேலும்...

ட்ரம்பின் சமாதான முயற்சியை ஏற்க சீனா மறுப்பு!

புதுடெல்லி (29 மே 2020): எல்லைப் பிரச்சினைகள் குறித்த பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த வாய்ப்பை சீனா நிராகரித்துள்ளது. முன்னதாக இந்தியா – சீனா எல்லை பிரச்னையில் அமெரிக்கா நடுவராகவோ அல்லது தூதராகவோ இருந்து இரு நாடுகளுக்கும் உதவத் தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள எல்லைக் கட்டுபாட்டு பகுதி உட்பட பல பகுதிகளில்…

மேலும்...

தொடரும் அதிர்ச்சி – ரெயில் கழிப்பறையில் புலம்பெயர்ந்த தொழிலாளியின் இறந்த உடல் கண்டெடுப்பு!

ஜஹான்சி (29 மே 2020): உத்திர பிரதேசத்தில் இரயில் கழிப்பறையில் புலம்பெயர்ந்த தொழிலாளரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட திடீர் ஊரடங்கு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பெரிய அளவில் பாதித்தது. நடந்தே பலர் அவரவர்களின் ஊர்களுக்கு சென்றதால் உணவு இல்லாமை, களைப்பு காரணமாக பலர் வழியிலேயே உயிரிழந்தனர். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர்களின் ஊருக்கு செல்ல சிறப்பு ரெயில்கள் விடப்பட்டன. மும்பையிலிருந்து உத்திர பிரதேசத்திற்கு ரெயிலில்…

மேலும்...

விராட் கோலி அனுஷ்கா ஷர்மா விவாகரத்து – பாஜக எம்.எல்.ஏ பகீர் கருத்து -வீடியோ!

லக்னோ (29 மே 2020): இந்திய (பிசிசிஐ) கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நடிகை அனுஷ்கா ஷர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் என்று உத்திர பிரதேச பாஜக எம்.எல்.ஏ. நந்த் கிஷோர் குர்ஜார் வலியுறுத்தியுள்ளார். அனுஷ்கா ஷர்மா சமீபத்தில் அவர் நடித்துள்ள ‘பாட்டல் லோக்’ என்ற வெப் சீரிஸ் இந்திய வகுப்பு வாத ஒற்றுமைக்கு எதிராக உள்ளதாக நந்த் கிஷோர் குர்ஜார் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவில் குர்ஜார், “விராட் கோலி ஒரு தேசபக்தர்,…

மேலும்...

கொரோனாவுக்காக கோவிலில் நடந்த கொலை – கோவில் பூசாரியின் கொடூர செயல்!

கட்டாக் (28 மே 2020): கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறி கோவிலில் வைத்து ஒருவரின் தலையை வெட்டி கொடூர கொலையை அரங்கேற்றியுள்ளார் கோவில் பூசாரி ஒருவர். ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலின் உள்ளே புதன்கிழமை இரவு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் ஒன்றை கண்டெடுத்தனர் போலீசார். உடனே இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கொலையானவரின் பெயர் சரோஜ் குமார் பிரதான் என்ற 52 வயது உள்ளுர் நபர் என்பது…

மேலும்...

ஊரடங்கு காலங்களிலும் அரசின் முஸ்லிம் விரோத போக்கு !

லக்னோ (28 மே 2020): உத்திர பிரதேசம் மாநிலம் அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இவர்களை போலீசார் ஊரடங்கு காலங்களில் சத்தமின்றி கைது செய்துள்ளனர். ஏற்கனவே டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட சஃபோரா சர்கர், மீரன் ஹைதர், ஷிஃபால் ரஹ்மான், ஆசிப் இக்பால் தன்ஹா உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் உத்திர பிரதேசத்திலும் போலீசார் முஸ்லிம்களை…

மேலும்...

கொரோனா அறிகுறிகளுடன் பாஜக செய்தி தொடர்பாளர் மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (28 மே 2020): பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலையில் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தச் சூழலில் மத்தியில் ஆளும் பாஜக கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கொரோனா அறிகுறிகளுடன் குர்கானில்…

மேலும்...

தொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!

ஐதராபாத் (28 மே 2020): தெலுங்கானா மாநிலத்தில் 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்திய கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க அரசோ, மாவட்ட நிர்வாகங்களோ எவ்வித முயற்சியும் மேற்கொண்டதாக தெரியவில்லை. அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் மடாக் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் புதன்கிழமை இரவு 3 வயது குழந்தை சாய் வரதன் 120 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்….

மேலும்...