சட்ட அமைச்சரின் வெற்றி செல்லாது – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

அகமதாபாத் (12 மே 2020): குஜராத் மாநில சட்த்துறை அமைச்சர் புபேந்திரசிங் சூடஸ்மாவின் தேர்தல் வெற்றி செல்லாது என குஜராத் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநில சட்டமன்றத்துக்கு 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்கா தொகுதியில் புபேந்திரசிங் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அஷ்வின் ரத்தோட்டைவிட 327 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் அதிகாரியாக இருந்த தோல்கா துணை…

மேலும்...

ஆரோக்கிய சேது ஆப்பை கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம் – நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா!

புதுடெல்லி (12 மே 2020): ஆரோக்கிய சேது ஆப்பை கட்டாயப்படுத்துவது சட்ட விரோதம் என்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறி குறித்தும், அதன் பரவல் குறித்தும் அறிய ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நோய் தாக்குதலுக்கு ஆளான நபரின் அருகில் சென்றால் நம்மை எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி, 5 கோடிக்கும் அதிகமானோரால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில், விமானப் பயணிகள்…

மேலும்...

வீடு திரும்பினார் மன்மோகன் சிங்!

புதுடெல்லி (12 மே 2020): உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வீடு திரும்பினார். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், திடீர் உடல் நலக் குறைவால், ஞாயிறு இரவு டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில், மன்மோகனுக்கு பாதிப்பு இல்லையென உறுதியானது. அவரது உடல்நிலை சீரானதை அடுத்து இன்று (மே 12) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...

மனமோகன் சிங் உடல் நிலை அப்டேட்!

புதுடெல்லி (11 மே 2020): முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், டாக்டர் நிதீஷ் நாயர் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், கொரோனா நோய்தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனை…

மேலும்...

கொரோனாவால் அலறும் மும்பை – 13,564 பேர் பாதிப்பு 508 பேர் பலி!

மும்பை (11 மே 2020): மும்பையில் மட்டும் கொரோனாவால் 13 ஆயிரத்து 564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 508 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்‍கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்ட்ரா முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 22 ஆயிரத்து 171 பேருக்‍கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தலைநகர் மும்பையில் மட்டும் வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 13 ஆயிரத்து 564-ஆக உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 508-ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே மும்பை ஆர்தர் சாலை சிறையில், காவலர்கள்,…

மேலும்...

தனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பாற்றிய டாக்டர் ஜாஹித்!

புதுடெல்லி (10 மே 2020): நோன்பு திறக்கும் நேரம் நெருங்கிவிட்டது. டாக்டர் ஜாஹித் நோன்பு திறப்பதற்காக அமர்ந்து பிரார்த்தனையில் இருந்தார். அப்போது அவருக்கு அவசர அழைப்பு வந்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் ஜாஹித். கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நோயாளியை ஆம்புலன்சிலிருந்து அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்ற வேண்டும். அதற்கு டாக்டர் ஜாஹிதின் உதவி தேவை. அதற்கான அழைப்புதான் அப்போது ஜாஹிதுக்கு வந்திருந்தது. உடனே…

மேலும்...

BREAKING NEWS: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டாக்டர் மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 87 வயதான மன்மோகன் சிங் இன்று இரவு 8.45 மணியளவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2009 ஆம் ஆண்டு இருதய அறுவை சிசிச்சை செய்தது குறிப்பிடத்தக்கது. Delhi: Former Prime Minister Dr Manmohan Singh has been admitted to…

மேலும்...

ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? – நாளை பிரதமர் முதல்வர்களுடன் ஆலோசனை!

புதுடெல்லி (10 மே 2020): நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 17-ம் தேதியுடன் முடியும் நிலையில் பிரதமர் மோடி நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். டெல்லியில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இது கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 5-வது முறையாக நடைபெற உள்ளது. ஏற்கனவே 3-வது ஊரடங்கு அமலில் இருக்கும் இருக்கும் நிலையில் பொதுமுடக்கம் நீட்டிப்பது குறித்தும் ஏற்கனவே 17 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள…

மேலும்...

ஏர் இந்தியா விமானிகள் ஐந்து பேருக்கு அதிர்ச்சி கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (10 மே 2020): ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஐந்து விமானிகள், தங்களது கடைசி பயணத்தின் 20 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளனர். தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையானது, 63 ஆயிரத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் கிட்டதட்ட அனைத்து துறைசார்ந்த நபர்களையும் கொரோனா தாக்கியுள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியாவின் ஐந்து விமானிகள், ஒரு பொறியியலாளர், மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொரோனா…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 2894 பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (10 மே 2020): இந்தியாவில், நேற்று ஒரே நாளில், 2894 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,808 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, வரும் 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக,…

மேலும்...