மதுபானம் வீட்டுக்கே சென்று டெலிவரி – சட்டம் அமல்!

சண்டீகர் (07 மே 2020): பஞ்சாப் மாநிலத்தில் வீடுகளுக்‍கே சென்று மதுபானம் வழங்கும் திட்டம் அமலுக்‍கு வந்தது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மது கடைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை மது விற்பனை செய்யப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதேநேரம் எந்தெந்த பகுதிகளில் எந்த நேரத்தில் மது விநியோகம் செய்யலாம் என்பது குறித்து அப்பகுதி கலால் துறை ஆணையர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறியுள்ளது. நபர் ஒருவருக்‍கு அதிகபட்சம் நாள் ஒன்றுக்‍கு…

மேலும்...

ஆந்திராவில் பயங்கரம் – சுருண்டு விழுந்த மக்கள்- 5000 த்திற்கும் அதிகமானோர் பாதிப்பு: வீடியோ

விசாகப்பட்டினம் (07 மே 2020): ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயும் கசிவால் 5000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் பலியாகியுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் பிரபலமான எல்ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலை, 1961ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. இங்கு பாலிமர் ரசாயன பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்துஸ்தான் பாலிமர் நிறுவனமும், Mc Dowell & Company Limited ம் இணைந்து இந்த ஆலையை இயக்கி வருகிறது….

மேலும்...

சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாஅத் மூத்த தலைவர் மரணம்!

ஜான்பூர் (07 மே 2020): கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட உத்திர பிரதேச தப்லீக் ஜமாஅத் மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கொரோனா வைரஸ் பரவல் உலகமெங்கும் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்த வேலையில் டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தப்லீக் ஜமாஅத்தினர்தான் கொரோனாவை பரப்பியதாக ஊடகங்கள் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியது. அதேவேளை தப்லீக் ஜமாத்தினர் சிலருக்கு கொரோனா இருப்பதும் உறுதி செய்யப்பட்டது….

மேலும்...

குஜராத்தில் கொரோனா பரவ நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிதான் காரணம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (07 மே 2020): பிப்ரவரி 24 ம் தேதி குஜராத்தில் மாநில பாஜக அரசு ஏற்பாடு செய்த “நமஸ்தே டிரம்ப்” நிகழ்வே மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் என்று குஜராத் காங்கிரஸ் புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு எதிராக அவர்கள் விரைவில் குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகவுள்ளதாகவும் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சவ்தா தெரிவித்தார். மேலும் திரு சாவ்தா…

மேலும்...

டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜாஃபருல் இஸ்லாம் வீட்டில் போலீசார் திடீர் சோதனை!

புதுடெல்லி (07 மே 2020): டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜாஃபருல் இஸ்லாம் கான் வீட்டில் டெல்லி போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சமீபத்தில் அரபுலகின் சமூக ஆர்வலர்கள் சிலர் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறைகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இது இந்திய அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் அரபு நாடுகளில் இஸ்லாமிற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் பாய்ந்து வருகிறது. இந்நிலையில் இந்நிகழ்விற்கு ஆதரவாக ஜாஃபருல் இஸ்லாம் கான் சமூக…

மேலும்...

அடுத்து என்ன? – மத்திய அரசுக்கு சோனியா காந்தி கேள்வி!

புதுடெல்லி (06 மே 2020): மே 17 ஆம் தேதிக்குப் பிறகு என்ன செய்யவுள்ளதாக திட்டம்? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் அக்கட்சி தலைவர் திருமதி.சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங், திரு.ராகுல் காந்தி ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். இதில் பேசிய திருமதி சோனியா…

மேலும்...

இந்தியாவில் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விசாக்களும் ரத்து!

புதுடெல்லி (06 மே 2020): இந்தியா வருவதற்காக வெளிநாட்டினருக்‍கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விசா அனுமதிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், தூதரகப் பணிகள், அலுவல்பூா்வ பணிகள், ஐ.நா.சா்வதேச அமைப்புகளின் பணிகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சில பிரிவுகள் தவிர, இதர பிரிவுகளில் வழங்கப்பட்டிருந்த அனைத்து விசா அனுமதிகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்தியாவில் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கும் வரை இந்த விசா அனுமதி ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரம்,…

மேலும்...

பிளாஸ்மாவை தானம் செய்வதற்காக நோன்பை முறித்த 150 தப்லீக் ஜமாஅத்தினர்!

புதுடெல்லி (06 மே 2020): கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை தானம் செய்வதற்காக 150 தப்லீக் ஜமாஅத்தினர் ரம்ஜான் நோன்பை முறித்துக் கொண்டுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மாற்று முறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒருமுறை பிளாஸ்மா சிகிச்சை முறை. இதற்கு பிளாஸ்மா தானம் செய்ய, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த தப்லீக் ஜமாஅத்தினர் அதிக அளவில் முன்வந்துள்ளனர்….

மேலும்...

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தமிழக வீரர் உட்பட மூவர் பலி!

ஸ்ரீநகர் (05 மே 2020): வடக்கு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அஸ்வானி குமார் யாதவ், 31, சி.சந்திரசேகர், 31, சந்தோஷ்குமார் மிஸ்ரா,35 என உயிர் நீத்த மூவரும் சிஆர்பிஎப் -ன் 92 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள். . இதில்,சி.சந்திரசேகர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே இருக்கும் மூன்றுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சந்திரசேகரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளன ….

மேலும்...

எங்கள் மீது மலர் தூவ வேண்டாம் உணவு கொடுங்கள் – மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை!

புதுடெல்லி (05 மே 2020): எங்கள் மீது மலர்கள் தூவ சொல்லி கேட்கவில்லை உணவு தந்தால் போதும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் பணியாளர்களும் மத்திய அரசுக்‍கு கோரிக்கை விடுத்துள்ளனர். ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தொடர்புடைய மருத்துவர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்களுக்‍கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தாங்கள் தங்கவைக்‍கப்பட்டுள்ள இடம், சுகாதாரமற்று இருப்பதாகவும்,…

மேலும்...