இந்தியாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

மும்பை (17 மார்ச் 2020): கொரோனா பாதித்தவர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 3 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் இந்தியாவில் 100 ஐக் கடந்துள்ளது. மும்பை மருத்துவமனையில் 64 வயது மதிக்கத்தக்கவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். உலக நாடுகள் பலவற்றில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நூறை எட்டியதும் வைரஸ் பரவல் மிக வேகமாகக் கூடத் தொடங்கியுள்ளது. அந்த நாடுகள் வைரஸைக் கட்டுப்படுத்த மிகவும் கடினமாகப் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றன. இந்தியா இதுவரை சிறப்பாகவே நடவடிக்கை எடுத்திருக்கிறது. முதல்…

மேலும்...

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

ஐதராபாத் (16 மார்ச் 2020): குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி இன்று கூடிய தெலுங்கானா சட்டசபையில் சிஏஏ என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் குறித்து முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், சட்டசபையில் பேசியபோது, சரியான ஆவணங்கள் இல்லாத மில்லியன் கணக்கான மக்கள் உள்ளனர். அதனால் மத்திய அரசு CAA குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும்...

இந்தியாவில் 15 நாட்களில் 110 பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (16 மார்ச் 2020): கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் அதிக அளவில் மிரட்டி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 110 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 93 நோயாளிகள் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர். இதில் 13 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர். இரண்டு பேர்…

மேலும்...

கொரோனா வைரஸுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவோம்: பிரதமர் மோடி!

புதுடெல்லி (15 மார்ச் 2020): கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவோம் என காணொலி வாயிலாக நடைபெற்ற சார்க் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பூடான் பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தெற்காசியாவில் கோவைட்-19 எதிர்கொள்வது குறித்து சார்க் நாடுகளுடன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற…

மேலும்...

கொரோனா சந்தேகம் – அருகில் இருந்தும் இறந்த தந்தையின் உடலைபார்க்க முடியாமல் போன மகன்!

திருவனந்தபுரம் (15 மார்ச் 2020): கேரளாவில் இளைஞர் ஒருவர் அவருக்கு கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தால் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இறந்த அவரது தந்தையின் உடலைக் கூட பார்க்க முடியவில்லை. கட்டிலில் இருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையை பார்ப்பதற்காக, கத்தார் நாட்டில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த லினோ அபெல் என்ற இளைஞர், கடந்த 8 ஆம் தேதி அவசரமாக சொந்த ஊர் திரும்பினார். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் லினோ அபெல்,…

மேலும்...

கொரோனாவால் பரிதவித்த 289 பயணிகள் – கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!

கொச்சி (15 மார்ச் 2020): இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து கொச்சி விமான நிலையத்தில் அனைத்து பயணிகளும் எமிரேட்ஸ் விமானத்திலிருந்து வெளியெற்றப்பட்டனர். கொரோனா பீதி உலகையே அதிர வைத்துள்ளது. இந்தியாவில் முதலாவதாக கொரோனா பாதித்த மாநிலம் கேரளா. இந்நிலையில் கொச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 289 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்த 19 பேர் கொண்ட…

மேலும்...

டெல்லி இனப்படுகொலையில் இந்துக்களுக்கு உதவிய போலீஸ் – ஆதாரத்துடன் நிரூபனம்!

புதுடெல்லி (15 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த இந்துக்களுக்கு போலீசாரே உதவியது வீடியோ ஆதாரத்துடன் நியூயார்க் டைம்ஸ் நிரூபித்துள்ளது. டெல்லி கடந்த மாதம் நடைபெற்ற டெல்லி இனப்படுகொலையில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். 200 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர். இந்த இனப்படுகொஅலியின்போது காவல்துறையும் டெல்லி நிர்வாகமும் நடந்துகொண்ட விதம் பலராலும் கண்டிக்கப்பட்டது. டெல்லி காவல்துறை தன்னுடைய பணியை சரிவர செய்யவில்லை என உச்சநீதிமன்றம் கண்டித்திருந்தது….

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 105 ஆக உயர்வு!

புதுடெல்லி (15 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. இது இப்படியிருக்க இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் சீனாவை அடுத்து ஐரோப்பிய நாடுகள்…

மேலும்...

கொரோனா பரவல் – ஈரானிலிருந்து 234 இந்தியர்கள் நாடு திரும்பினர்!

புதுடெல்லி (15 மார்ச் 2020): கொரோனா பாதித்த ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 234 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானத்தில் திரும்ப அழைத்து வரப்பட்டனர். உலகளவில் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. இது இப்படியிருக்க ஈரானில் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஈரான் நாட்டில்…

மேலும்...

கொரோனா வைரஸ் – பேரிடராக கருதி நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு!

புதுடெல்லி (14 மார்ச் 2020): கொரோனாவை பேரிடராகக் கருதி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பை ஒவ்வொரு மாநிலமும் பேரிடராகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில பேரிடர் நிதியில் (எஸ்.டி.ஆர்.எஃப்) இருந்து கொரோனா பாதிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி…

மேலும்...